பதினெண்மேற்கணக்கு

நிறைந்த அடிகளைக் கொண்ட 18 நூல்களின் தொகுப்பு, பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகின்
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

தமிழகத்தில் சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்களை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் எனவும் மொழி ஆய்வாளர்கள் பிற்காலத்தில் வகைப்படுத்தினர்.

குறைந்த அடிகளுடைய நூல்கள் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டன. மேற்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும், கீழ்க்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

பாட்டின் நீளத்தைக் கொண்டே இவ்வாறு வகைப்படுத்தினர்; பொருட்சுவையை எண்ணி அல்ல என்பதை இங்குக் கருத்தில் நிறுத்த வேண்டும்.

பதினெண் மேற்கணக்கு நூல்களை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் என இரண்டாகப் பகுத்தனர். பத்துப்பாட்டு நூல்கள் ஒவ்வொன்றும் தனித்தனி வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. எட்டுத்தொகை தொகுப்பிலுள்ள ஒவ்வொரு நூலிலும் பலரது பாடல்கள் உள்ளன. இவை தொகை நூல்கள் என வழங்கப்படுகின்றன.

பண்டைய தமிழக பண்பாட்டையும் வாழ்க்கைத்தரத்தையும் பெருமையையும் காண இப்பாடல் தொகுதிகள் துணை புரிகின்றன. தமிழருக்கு அகம் எனும் காதல் ஒழுக்கமும் புறம் எனும் வீர வெளிப்பாடுகளுமே இலக்கிய நோக்காக அமைந்தமை இப்பாடல் தொகுதிகளால் தெரியவரும்.

எட்டுத்தொகை நூல்கள் தொகு

நூல் இயற்றியவர் பாடப்பட்டத் தலைவன்
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை 192 பெயர்கள் கிடைக்கப்பெற்றன பலர்
குறுந்தொகை 205 புலவர்கள் பலர்
ஐங்குறுநூறு கபிலர் பலர்
பதிற்றுப்பத்து பலர் சேரர்
பரிபாடல் 13 புலவர்கள்
கலித்தொகை நல்லாண்டுவனார்
அகநானூறு பலர் பலர்
புறநானூறு பலர் பலர்

பத்துப்பாட்டு நூல்கள் தொகு

பத்துப்பாட்டு நூல்கள் பாடிய புலவர் பாட்டுடைத் தலைவன்
திருமுருகாற்றுப்படை நக்கீரர் முருகன்
பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார் கரிகால் வளவன்
சிறுபாணாற்றுப்படை நற்றாத்தனார் நல்லியக்கோடன்
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார் தொண்டைமான் இளந்திரையன்
நெடுநல்வாடை நக்கீரர் நெடுஞ்செழியன்
குறிஞ்சிப் பாட்டு கபிலர் பிரகத்தனுக்கு தமிழர் கற்புநெறி பற்றி தெளிவிக்கப் பாடியது
முல்லைப்பாட்டு நப்பூதனார் நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது
மதுரைக் காஞ்சி மாங்குடி மருதனார் நெடுஞ்செழியன்
பட்டினப் பாலை கடியலுர் உருத்திரங் கண்ணனார் கரிகால் வளவன்
மலைபடுகடாம் பெருங்குன்றப் பெருங்கௌசிகனார் நவிரமலை நன்னன்

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினெண்மேற்கணக்கு&oldid=3694940" இலிருந்து மீள்விக்கப்பட்டது