வலைவாசல்:சைவம்


சைவ வலைவாசல்
.

அறிமுகம்

ஓம்
ஓம்

சிவபெருமானுடன் சம்மந்தமான அனைத்தும் சைவம் என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம், வீர சைவம், சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம், இந்து மதத்தின் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. கல்லாடம் எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார், சமயக்குரவர் போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் 'சைவத்தமிழ்' என்று அழைக்கப்பெறுகிறது.

சைவ சமயம் பற்றி மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

நாயன்மார்
கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார் (Nayanars) எனப் போற்றப்படுகின்றார்கள். இவர்கள் அறுபத்துமூவராவர். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.



சைவ அடியார்கள்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி என்பவர் அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரும், இறைவனான சிவபெருமான் மீது தேவாரப் பாடல்களை பாடியவரும் ஆவார். இவர் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார் தம்பதிகளுக்கு சீர்காழியில் மகனாகப் பிறந்தார். மூன்றாம் வயதில் தந்தையுடன் கோவிலுக்கு சென்றவர், தந்தை குளிக்க சென்ற பொழுது அவரைக் காணாது, அம்மையே, அப்பனே என்று அழ,. சிவபெருமானுடன் காட்சியளித்த உமையம்மை சம்மந்தருக்கு ஞானப்பால் அளித்தாகவும், வாயில் பாலொழுக நின்ற சம்மந்தரிடம் யார் பால்தந்ததென தந்தை வினவ, தேவாரத்தின் முதல் பாடலான "தோடுடைய செவியன்" என்று சம்மந்தர் பாடியதாக தொன்நம்பிக்கை உள்ளது.

மங்கையற்கரசியாரின் அழைப்பினை ஏற்று பாண்டிய நாடு சென்று, கூன்பாண்டியனின் வெப்புநோயை தீர்த்தவர். சமணர்களை அனல் வாதத்திலும்,புனல் வாதத்திலும் வென்றவர். பிள்ளை என்று சைவர்களால் அழைக்கப்பெறுகிறார். இவரின் வரலாறு பெரியபுராணத்தில் 1256 செய்யுட்களால் விவரிக்கப்பட்டுள்ளது.


சிறப்புப் படம்

{{{texttitle}}}

அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது வெளிபட்ட ஆலகாலம் அவர்களைத் துரத்தியது. தங்களைக் காப்பாற்ற வேண்டி சிவபெருமான் வசிக்கும் கையிலைக்கு சென்றார்கள். இமயமலையை தேவர்கள் வலமாக சுற்றும் போது ஆலகாலம் வழிமறைத்தது. அதனால் தேவர்கள் வந்த வழியே திரும்பி சுற்ற இம்முறை ஆலகாலம் இடப்புறம் வந்து எதிர்த்தது. இவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி பயமுருத்திய ஆலகாலத்தினை சிவபெருமான் உண்டு தேவர்களை காத்தார். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள்.

படம்: User:
தொகுப்பு


பகுப்புகள்

சைவ சமய பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

மீனாட்சியம்மன் கோவில்,மதுரை
மீனாட்சியம்மன் கோவில்,மதுரை
  • கட்வங்கம் என்பது சிவபெருமானுடைய ஆயுதங்களில் ஒன்றாகும். இந்த ஆயுதம் எலும்பினால் செய்யப்பட்ட தண்டுப்பகுதியையும், முன்பக்கத்தில் மண்டையோட்டினையும் பெற்று காணப்படுகிறது.
  • ஆதிலட்சுமிக்கும், குபேனனுக்கும் செல்வங்களை வழங்கிய சிவபெருமானின் வடிவம் சுவர்ண ஆகர்ஷன பைரவர் என்று வழங்கப்படுகிறது. சுவர்ண ஆகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தரும் பைரவர் என்று பொருளாகும்.
  • மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையார் என்ற இருவர் மட்டுமே பாண்டிய நாடு முழுவதும் சமண இருள் சூழந்திருந்த போதும், சைவ மதத்தில் இருந்தார்கள்.
  • பாற்கடலை கடையும் பொழுது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கின்றனர்.
  • மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது.
  • மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள நடராசர் சன்னிதி வெள்ளியம்பலம் என அறியப்பெறுகிறது.


தொடர்பானவை

தொகு  

சைவம் பற்றி சான்றோர் கூறியமை


மொஹெஞ்சதரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆரியருக்கு முற்பட்டதொரு நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை ஐயமறத் தெரிவிக்கின்றன. இவ்வகழ்வாய்வுகளில் சைவ சமயம் பற்றிய - குறிப்பாகச் சிவனுக்கு அல்லது அதற்கு முற்பட்ட வடிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. உலகின் மிகப் பழைய உயிரோட்டமுள்ள சமயம் சைவ சமயமேயாகும் - அகழ்வாராய்ச்சி அறிஞர் சர். ஜான் மார்ஷல்


தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
இந்து சமயம்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/இலக்கியம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/தத்துவங்கள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/தொண்டர்கள்



தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்


தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


இந்து சமயம்இந்து சமயம்
இந்து சமயம்
வைணவம்வைணவம்
வைணவம்
சாக்தம்சாக்தம்
சாக்தம்
கௌமாரம்கௌமாரம்
கௌமாரம்
சௌரம்சௌரம்
சௌரம்
காணாபத்தியம்காணாபத்தியம்
காணாபத்தியம்
இந்து சமயம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் காணபத்தியம்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:சைவம்&oldid=4098279" இலிருந்து மீள்விக்கப்பட்டது