சீக்கியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Manjuudupa (பேச்சு | பங்களிப்புகள்)
Translated from http://en.wikipedia.org/wiki/Sikh (revision: 353896270) using http://translate.google.com/toolkit with about 98% human translations.
(வேறுபாடு ஏதுமில்லை)

07:48, 13 மே 2010 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Sikhi சீக்கியர் (ஆங்கில உச்சரிப்பு: /ˈsiːk/ அல்லது /ˈsɪk/; பஞ்சாபி: ਸਿੱਖ, sikkh [ˈsɪkkʰ]) என்பவர் சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்கள் ஆவர். சீக்கியம் (பஞ்சாபி மொழியில் சீக்கி) என்பது முதன்முதலில் 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய மதமாகும், இப்போது உலகில் நான்கு முக்கிய மதங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது, மற்றும் ஏராளமான பின்பற்றுபவர்களையும் கொண்டுள்ளது. "சீக்கியம்" என்ற இந்த சொல் அதனுடைய மூலப்பொருளை சமஸ்கிருத சொல்லிலிருந்து பெறுகிறது śiṣya , இதன் பொருள் "சீடர், கற்பவர்" அல்லது "அறிவுரை" என்ற பொருள் தரும் śikṣa என்பதைக் குறிக்கிறது.[24][25]

Sikhs
பஞ்சாபி: ਸਿੱਖ
The Nishan Sahib, flag of the Sikhs
மொத்த மக்கள்தொகை
25,000,000 (25 million)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 India      19,215,730[2]
Other significant population centers:
 United Kingdom750,000[3]
 Canada278,000[4]
 United States200,000[5]
 Malaysia100,000[6]
 Italy70,000[7]
 Thailand70,000[8]
 Australia22,000[9]
 Pakistan20,000[10]
 Kuwait20,000[11]
 Netherlands12,000[12]
 Indonesia15,000[13]
 France10,000[14]
 Singapore9,733[15]
 New Zealand9,507[16]
 Germany8,000[17]
 Nepal5,890[18]
5,000[19]
 Fiji4,674[20]
 Afghanistan3,000[21]
 Austria2,794[22]
 Ireland1,200[23]
மொழி(கள்)
Punjabi
Among the Sikh diaspora English, Hindi, Urdu, Swahili, Malay, Thai, and others.
சமயங்கள்
Sikhism

Estimated figure as of 2004.
‡Indonesian law does not recognize Sikhism, thus Sikhs are not allowed to identify themselves as such on their identity cards or birth or marriage certificates, Sikhs are therefore registered as Hindu.

"ரேஹத் மர்யாதா" நூலின் (சீக்கிய நடத்தை வழிகாட்டுதல்கள் மற்றும் நம்பிக்கைகள்) முதல் சட்டத்தின்படி, ஒரு சீக்கியர் என்பவர், "ஒரே முடிவற்ற இறைவனையும், குருநானக் தேவ் முதல் ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வரையிலான பத்து குருக்களையும்; ஸ்ரீ குரு கிரந்த சாஹிப்பையும், பத்து குருக்களின் சொற்களையும் போதனைகளையும், எந்த மதத்துடனும் இணைய விரும்பாத பத்தாவது குரு விட்டுச்சென்ற ஞானத்தையும் முழுமனதாக நம்பும் ஒரு மனிதனாவான்".[26] எல்லா சீக்கியர்களிடையேயும் காணப்படும் பொதுவான அடையாளம், கத்தரிக்கப்படாத முடி(ஆண்களுக்கு தாடியும் அடங்கும்) மற்றும் அவர்களுடைய தலைப்பாகை.

பெரிய பஞ்சாப் மாகாணம் வரலாற்று ரீதியாக சீக்கிய மதத்தின் பூர்வீக இடமாகும். பெரும்பாலான சீக்கியர்கள் பஞ்சாபிகள் ஆவர் அவர்கள் பஞ்சாப் பகுதியிலிருந்து வந்தவர்கள், ஆனாலும் உலகெங்கும் கணிசமான அளவு சமூகங்கள் உள்ளன. பஞ்சாபிகளும் பஞ்சாப் பகுதியும், சீக்கியம் என்பதை ஒரு மதமாக உருவாக்கியதில் வரலாற்றில் மிகமுக்கிய பங்காற்றி உள்ளன. சீக்கியத்தின் மிக முக்கிய மற்றும் அடிக்கடி மறக்கப்படுகிற நம்பிக்கையானது, எந்தவொரு ஜாதி, குழு அல்லது மனித இனத்தை எந்தவொரு காரணத்தினாலும் பாகுபடுத்துவது என்பதை முற்றிலும் நம்பக்கூடாது என்பதே, இதையே அவர்களின் குருக்கள் (ஆசிரியர்கள்) விட்டுச்சென்றனர். பஞ்சாபியின் தாக்கத்தினால்தான், சீக்கியர்கள் இந்தியாவுக்கு வெளியே இனம் மதம் சார்ந்த குழுவினர் என்று சிலநேரங்களில் கூறப்படுகின்றனர்.

தத்துவம்

சீக்கிய மதத்தின் அடிப்படை தத்துவத்தை அவர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பின் முதல் பாடலிலேயே புரிந்து கொள்ளலாம்.

இந்த மார்க்கத்தைத் தோற்றுவித்த குருநானக், மூன்று அத்தியாவசிய கடமைகளில் சீக்கிய வாழ்க்கைமுறையைச் சுருக்கமாக கூறுகிறார்: நாம் ஜபோ, கிராத் கர்னி மற்றும் வாண்ட் கே ஷாக்கோ, இவற்றின் பொருளாவது தெய்வீக பெயரை (வாஹெகுரு) தியானம் செய்க, கண்ணியமாகவும் நேர்மையாகவும் பணி செய்யுங்கள் மற்றும் ஒருவர் பெற்ற பலன்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆகியவையே ஆகும்.[28]

சீக்கியர்கள் குரு கிரந்த சாஹிப்பை தங்களுடைய முதன்மை குருவாக பாவிக்கின்றனர், இதுவே சீக்கிய குருக்களின் போதனைகளின் எழுத்துப்பூர்வ வடிவமாகும். பத்தாவது குரு குரு கிரந்த சாஹிப்பையே தனக்கு அடுத்து வரும் குருவாக தேர்வு செய்தார். இது சீக்கிய குருக்களால் தொகுக்கப்பட்டு, அதனுடைய அசல் வடிவத்திலேயே பராமரிக்கப்படுகிறது, சீக்கியர்கள் குரு கிரந்த சாஹிப் புத்தகத்தை அவர்களுடைய முதன்மை வழிகாட்டியாக வழிபடுகிறார்கள். சீக்கியர் அல்லாதோர், சீக்கிய ஆராதனை கூட்டங்களிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் முற்றிலும் கலந்துகொள்ளலாம். அவர்களின் தினசரி பிராத்தனைகளில், மனித இனத்தின் நல்வாழ்வும் அடங்கியுள்ளது.[29]

நவம்பர் 11. 1675 -இல் டில்லியில் நடந்த மதபோராட்டம் ஒன்றில் இந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக 9வது குரு திரு குரு தேக் பஹதூர் என்பவர் வீரமரணம் அடைந்தது, அனைவரும் பின்பற்றத்தக்க ஒரு எடுத்துக்காட்டாகும்.[30]

சீக்கியர்கள் உலகவாழ்க்கையைத் துறக்குமாறு கூறப்படவில்லை,[31] ஆனால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். சீக்கிய வழிபாட்டில் மிகமுக்கிய பகுதி சேவா (சேவை) என்பதாகும், இதனை அதிக அளவில் குருத்துவாராக்களில் காணலாம். எந்தவகையான மதம் அல்லது சமூக பொருளாதார நிலையில் உள்ள மக்களும் வரவேற்கப்படுவார்கள், அங்கு அனைவருக்கும் லங்கார், (அனைவருக்கும் உணவு) வழங்கப்படும்.

பல்வேறு சமூக பின் புலங்களைச் சேர்ந்த பஹகத்கள் அல்லது துறவிகள் ஆகியோரையும் சீக்கியர்கள் பின்பற்றுகின்றனர். இந்த பஹகத்களின் பணிகளும் குரு கிரந்த சாஹிப்பில் சேகரிக்கப்பட்டுள்ளன, இது பாகத்-பாணி (பாகத்தின் புனித சொற்கள்) என்று அழைக்கப்படுகிறது, சீக்கிய குருக்களின் பணிகள் குர்-பாணி (குருவின் புனித சொற்கள்) என்றழைக்கப்படுகிறது.

சீக்கியர்களால் வணங்கப்படும் மனிதர்களில் இவர்களும் அடங்குவர்:[32]

ஆரம்பகால சீக்கிய அறிஞர்களில் பாய் வீர் சிங் மற்றும் பாய் கான் சிங் நபா ஆகியோர் அடங்குவர்.

ஐந்து கேக்கள்

படிமம்:CIMG0349.JPG
கங்கா, கரா மற்றும் கிர்பான்—சீக்கிய நம்பிக்கைகளின் காரணமாக விதிக்கப்பட்ட ஐந்து பொருட்களில் மூன்று.

ஐந்து Kக்கள், அல்லது பஞ்ச காக்கர்/காக்கி என்பது, எல்லா தீட்சைப் பெற்ற சீக்கியர்களுக்குமான (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமான ஐந்து பொருட்களாகும், இவற்றை பொதுவாக எல்லா நேரங்களிலும் ஒருவர் அணிந்திருக்க வேண்டும், இந்த கட்டளையை இட்டவர் பத்தாவது சீக்கிய குரு. இதனை 1699 -ஆம் ஆண்டில், பைசக்தி நாளில் அமிரித் சன்ஸ்கரில் கூறினார். சீக்கியத்தின் நோக்கங்களை அடையாளப்படுத்தவும் வெளிப்படுத்தவும் இந்த சின்னங்கள் அணியப்படுகின்றன, அவையாவன நேர்மை, சமநிலை, நம்பகம், போர்க்கலை மற்றும் இறைதியானம் மற்றும் ஒரு ஆக்கிரமிப்பாளனுக்கு எப்ப்போதும் அடிபணியாமை.[33]

இந்த ஐந்து சின்னங்களாவன:-

  • கேஷ் (வெட்டப்படாத முடி, பொதுவாக கட்டப்பட்டு, சுருட்டி சீக்கிய தலைப்பாகை, டாஸ்டர் என்பதன் கீழ் வைக்கப்படும்.)
  • கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக டாஸ்டாரின் கீழ் அணியப்படும்.)
  • கச்சாஹெரா (பொதுவான இடுப்பிலிருந்து முட்டிவரை இருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது.)
  • கரா (இரும்பாலானா கையணி, இது வெண்கல கைவாளாக போரில் பயன்படக்கூடியது, பெரியவை டாஸ்டரில் அணியப்பட்டு தூக்கியெறியக்கூடிய ஆயுதமாக பயன்படுத்தப்படும்.)
  • கிர்ப்பான் (வளைந்த கத்தி, பல அளவுகளில் வருகிறது, எடுத்துக்காட்டாக இங்கிலாந்தை சேர்ந்த சீக்கியர்கள், சிறிய கூர்மையான கத்தையை அணிவார்கள், அதே நேரத்தில் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்கள், பாரம்பரியமான வளைந்த கத்தியை அணிவார்கள், அது ஒன்று முதல் மூன்று அடி நீளம் இருக்கும்.)

வரலாறு

 
சீக்கிய அரச போராளியின் போர்க்கால தலையணி
 
பொற்கோயில்
படிமம்:Pilgrims cheering on bus.jpg
மனிகரனுக்கு வந்து சேரும் உற்சாகமான சீக்கிய பயணிகள்

சீக்கிய வரலாறு, ஒரு தனிப்பட்ட அமைப்பாக மாறி வளரத் தொடங்கியது, ஐந்தாவது சீக்கிய குரு, குரு அர்ஜன் தேவ் 1606 -இல் வீரமரணம் அடைந்த பின்னர் தொடங்கியது என்று கூறலாம். குரு கோபிந்த் சிங் 1699 -இல் கல்சா (ਖ਼ਾਲਸਾ) என்பதை நிறுவிய பின்னர் மேலும் சீக்கிய பிரிவு மேம்பட்டது.[34] பஞ்சாபில் பதினைந்தாம் நூற்றாண்டில், ஒரு மத தலைவராகவும், சமூக மறுசீரமைப்பாளராகவும் குரு நானக் மாறியவுடன் சீக்கியம் மீண்டும் மறுமலர்ச்சியடைந்தது. மார்ச் 30, 1699 -இல் மதரீதியான நடைமுறைகளை குரு கோபிந்த் சிங்கால் முறைப்படுத்தப்பட்டது. முந்தைய குரு ஐந்து வெவ்வேறு சமூக பின்புலங்களைச் சார்ந்த ஐந்து நபர்களை தீட்சையளித்து கால்சாவை உருவாக்கினார். முதல் ஐந்து, தூய நபர்கள், பின்னர் கோபிந்த் சிங்கை, கால்சா அமைப்பிற்குள் தீட்சை அளித்தனர்.[35] இதனால் சீக்கியம் என்பது, ஒரு முறைப்படுத்தப்பட்ட குழுவாதலாக மாறியது, மேலும் 400 ஆண்டுகள் வரையிலான மத வரலாறு கிடைக்க காரணமாக மாறியது.

பொதுவாக சீக்கிய மதம், மிதமான அளவு உறவுகளை பிற மதத்தினருடன் கொண்டிருக்கிறது. ஆனாலும், முகாலயர்களின் ஆட்சிகாலத்தில் (1556–1707), வளர்ந்து வந்த இந்த மதமானது, ஆட்சியில் இருந்த முகலாயர்களுடனான உறவில் பிணைக்கைச் சந்தித்தது. சில முகலாய மன்னர்கள் சிறுபான்மை மதத்தினரின் உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்த காரணத்தால் பிரபலமான சீக்கிய குருமார்கள் பலர் முகலாயர்களால் கொல்லப்பட்டனர்.[36] இதே நேரத்தில், சீக்கிய மதம் முகலாய பேரரசை எதிர்ப்பதற்காக ராணுவத்தையும் உருவாக்கியது. சீக்கிய பேரரசு மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரின் கீழ் உருவாகியது, இது மத சகிப்புத்தன்மை மற்றும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரையும் அதிகாரத்தில் அமர வைத்ததன் மூலம் பன்மைத்தன்மையையும் பேணி வந்தது. சீக்கிய அரசை நிறுவியது பொதுவாக, சீக்கிய மதத்தை அரசியல் ரீதியாக வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சி என்று கருதப்படுகிறது,[37] இந்த சீக்கிய அரசாங்கத்தின் கீழ் காஷ்மீர், லடாக், மற்றும் பெஷாவர் ஆகியவை அடங்கி விட்டன. வட மேற்கு எல்லைப்புறத்தில் இருந்த சீக்கிய ராணுவத்தின் தளபதியாக இருந்த ஹரிசிங் நல்வா என்பவர் சீக்கிய அரசாங்கத்தின் எல்லையை கைபர் கணவாயின் தொடக்கம் வரை விரிவாக்கினார். அரசாங்கத்தின் வெளிப்படையான நிர்வாகத்தில், புதுமையான ராணுவம், பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைவுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டன.

1947 -இல் இந்தியாவைப் பிரிப்பதற்கான காலத்தில், பஞ்சாபில் சீக்கியர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடு உருவானது, இதனால் மேற்கு பஞ்சாபிலிருந்து பல பஞ்சாபி சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் இடமாறி வந்தனர், இதேபோல் கிழக்கு பஞ்சாபிலிருந்து இதற்கு நேரெதிரான இடப்பெயர்வு நிகழ்ந்தது.[38]

1960களில், பஞ்சாபி சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இந்தியாவில் பெரிய அளவிலான சண்டைகளும் முரண்பாடுகளும் நிலவிவந்தது,[39] ஏனெனில் பஞ்சாபி சீக்கியர்கள் பஞ்சாபில் சீக்கிய பெரும்பான்மை மாநிலத்தை உருவாக்க அதிகமாக வலியுறுத்தி வந்தனர், இந்திய சுதந்திரத்தின்போது அரசியல் ரீதியான ஆதரவைத் தந்ததற்காக, இவ்வாறு செய்யப்படுவதாக மாஸ்டர் தாரா சிங் என்பவருக்கு நேருவால் உறுதிதரப்பட்டது.[40] நவம்பர் 1, 1966 -இல் சீக்கிய பெரும்பான்மை மாநிலமான பஞ்சாபை சீக்கியர்கள் பெற்றனர்.

1970களில் மீண்டும் மதம் சார்ந்த பரபரப்பு எழுந்தது, இதற்கு ஆட்சியில் இருந்த கட்சியான இந்திய தேசிய காங்கிரஸில் சீக்கியர்கள் ஒதுக்கி வைக்கப்படவும் பாகுபாட்டுடன் நடத்தப்படவும் செய்கின்றனர் என்று காரணம் கூறப்பட்டது மற்றும் அப்போதைய இந்திய பிரதமாராக இருந்த இந்திரா காந்தியின் "சர்வாதிகாரத்தனமான" நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக இருந்தது.[41] ஃப்ராங்க்[41] என்பவரின் கருத்துப்படி, காந்தி 1975 -இல் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்ததன் காரணமாக "அரசாங்கத்தின் நேர்மையும் பாகுபாடற்ற தன்மையும்" வலுவிழக்க செய்யப்பட்டன மற்றும் அவருடைய, எதிர்கட்சிகளைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் அவருடைய "பரனோய்யா" என்பதும் அவரை "தன்னியல்பாக ஜாதிகள், மதங்கள் மற்றும் அரசாங்க குழக்களுடன் அரசியல் ஆதாயத்திற்காக விளையாடுவதை" இயல்பாக மாற்றிவிட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளின் எதிர்வினையாக, சீக்கிய தலைவர் சான்ட் ஜர்னாயில் சிங் பிந்திரன்வாலே என்பவரின் எழுச்சிக்கு வழி வகுத்தது, மேலு அவர் நீதிக்காகவும் சீக்கிய நம்பிக்கைகளுக்காகவும் குரல் கொடுத்தார், மேலும் சீக்கிய பூர்வ இடமான கால்ஸ்தியன் என்பதை உருவாக்கவும் கோரினார். இதனால் பஞ்சாபில் திடீரென்று மதரீதியான வன்முறை தூண்டி விடப்பட்டது.[42] சான்ட் ஜர்னாயில் சிங் பிந்திரன்வாலேயை 1984 -இல் காந்தி எடுத்த ஆப்ரேஷன் புளூஸ்டார் நடவடிக்கையின் காரணமாக பொற்கோயில் புனிதம் கெடுக்கப்பட்டது, இதனால் இந்திராகாந்தி அவருடைய சீக்கிய பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார்.[42] இந்த கோயிலே அகல் தக்த்தின் மிகப்பழமையான சீக்கிய குருத்துவாராவாகும். இதன் காரணமாக சீக்கிய எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்து, சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியா முழுவதும் படுகொலை செய்யப்பட்டனர்; குஷ்வந்த் சிங் என்பவர் இந்த செயல்களை, ஒரு சீக்கிய போக்ரோம் ஆக இருப்பதால், "சொந்த நாட்டிலேயே நான் ஒரு அகதியாக உணருகிறேன்" என்று கூறினார். உண்மையில், நான் நாஜி ஜெர்மனியில் ஒரு யூதனைப் போல உணர்கிறேன்" என்றார்.[43] 1984 முதல், சீக்கியர் மற்றும் இந்துக்கள் இடையேயான உறவுகள் மீண்டும் மலர்ச்சியடைய தொடங்கின, இதற்கு வளரும் பொருளாதாரமும் ஒரு காரணமாக இருந்தது; ஆனாலும் 2002 ஆம் ஆண்டில், வலது சாரி இந்து அமைப்பான RSS -இன் கோரிக்கைகள், அதாவது "சீக்கியர்களும் இந்துக்களே" என்பது சீக்கிய உணர்வுகளைத் தூண்டி கோபமூட்டின.[44] கால்ஸ்தியன் இயக்க நடவடிக்கைகளின் போது நிகழ்ந்த வன்முறை மற்றும் அரசியல், பொருளாதார தேவைகளுக்காக பல சீக்கியர்கள் இன்றும் போராடி வருகின்றனர்.

1996 ஆம் ஆண்டில் விசேஷ பதிவாளர் அமைக்கப்பட்டு, மனித உரிமை கமிஷனுடன் இணைந்து, மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகளை ஆய்வுசெய்ய அப்டெல்ஃபாட்டா அமோர் (துனிசியா, 1993–2004) இந்தியாவுக்கு வந்து, மத பிரிவினைத் தொடர்பான அறிக்கையை தயார் செய்தார். 1997 ஆம் ஆண்டில்,[45] அமோர் கூறியதாவது, "மதத்தைப் பொறுத்தவரையில் சீக்கியர்கள் திருப்திகரமாகவே இருந்துவருவதாக தோன்றுகிறது, ஆனால் கடினமான சூழல்கள் அரசியல் (அயலக குறுக்கீடு, தீவிரவாதம் போன்றவை), பொருளாதார (குறிப்பாக நீர் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்வது) மற்றும் தொழில்சார்ந்த துறைகள் போன்றவற்றில் திருப்தியற்றவர்களாக உள்ளனர்" என்றார். அரசுசாராத நிறுவனங்களிடமிருந்து (sic) பெறப்பட்ட செய்திகள் குறிப்பிடுவதாவது, பொது நிர்வாகத்தின் ஒருசில பிரிவுகளில் பிரிவினை கையாளப்படுகிறது; இதற்கான எடுத்துக்காட்டுகளாவன இந்திராகாந்தி படுகொலைக்கு பின்னர் காவல் துறையில் சீக்கியர்களின் எண்ணிக்கை குறைவடைவது ".[46]


சீக்கிய இசை மற்றும் இசைக்கருவிகள்

சீக்கியர்கள் அவர்களுக்கென சொந்தமான இசைக்கருவிகளை உருவாக்கியுள்ளனர்: ரபாப், தில்ரூபா, டாவஸ், ஜோரி மற்றும் சாரிண்டா. சாரங்கி என்ற கருவியையும் குரு ஹர் கோபிந்த் ஆதரித்தார். ரபாப் முதன்முதலில் பாய் மர்டானா என்பவரால் பயன்படுத்தப்பட்டது, குரு நானக் தேவுடன் அவருடைய பயணங்களில் கூடவே சென்று வந்தார். ஜோரி மற்றும் சாரிண்டா ஆகிய இரண்டையும் வடிவமைத்தவர் குரு அர்ஜன் தேவ் என்பவராவார். டாவஸ் என்பது குரு ஹர் கோபிந்த்தால் வடிவமைக்கப்பட்டது, இது இவர் ஒரு மயில் பாடுவதையும் அந்த சத்தத்தை போன்ற ஒலியை உருவாக்கும், ஒரு கருவியை அவரிடம் வடிவமைக்குமாறு கோரியதாகவும் கூறப்படுகிறது, டவஸ் என்பது மயிலைக் குறிக்கும் ஒரு பெர்சிய சொல்லாகும். தன்னுடைய சீடர்களின் விருப்பத்திற்கேற்ப, தில்ருபா குரு கோபிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது. தொடர்ச்சியான போர்களின் காரணமாக, டவஸ் கொண்டு செல்லவும், பராமரிக்கவும் கடினமானதாக இருப்பதால் இது உருவாக்கப்பட்டது. ஜப்ஜி சாஹிப் எல்லாவகையான சத்தங்களைப் பற்றியும் குரு கிரந்த சாஹிப்பில் ராக் என்பதன் கீழ் எழுதிவிட்டார். ஷப்த் என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட ராகத்தைச் சார்ந்ததாக இருக்கும். இந்த வகை பாடலுக்கு குர்மாத் சங்கீத் என்று பெயர்.

போருக்கு நடக்கும்போது, சீக்கியர்கள் அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்திக் கொண்டு, சிகிடு ஆக மாறுவார்கள். இதற்கு பெயர் ரஞ்சித் நகாரா (வெற்றியின் மேளம்) என்று பெயர். நகராக்கள் பெரிய போர் மேளங்களாகும், இது இடியோசையைப் போன்ற ஒலியை உருவாக்கும். இவை கிட்டத்தட்ட 2 முதல் 3 அடி விட்டமுள்ளதாகவும், இரண்டு குச்சிகளால் அடிக்கப்படுவதாகவும் இருக்கும். சிறப்பு அல்லது அசல் ரஞ்சித் நகாரா, பழங்கால போர்களில் பயன்படுத்தப்பட்டன, அவை 5 அடி விட்டம் கொண்டது. பெரிய மேளங்களில் இடியோசை போன்ற ஓசைகளானது, அவர்களின் படையானது போர்களத்தில் அணிவகுத்து செல்வதையே குறிக்கின்றன. சில நேரங்களில் இவற்றை போர்களத்திற்கு உள்ளேயும் கொண்டு செல்வார்கள், இதனால் சிங்குகள் முழக்கங்களை அதிகமாக வைத்து செல்வர், எதிரி படையினர் இவர்கள் வருவதை அறிந்து கொள்ள முடியும். சிங்குகளின் மனவலிமை அதிகரிக்கும் அதே வேளையில், எதிரிகளின் மனநிலை இன்னும் மோசமாகக்கூடும்

பரவல்

படிமம்:Indias Sikh Pop. Chart02.JPG
இந்தியாவில், மொத்த சீக்கிய மக்கள்தொகையையும் அவர்களின் சதவீதங்களையும் காட்டும் விளக்கப்படும்.

கிட்டத்தட்ட உலகளவில் 27 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர், உலக மக்கள்தொகையில், சீக்கியர்கள் 0.39%[47] உள்ளனர், அவர்களின் 83% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்திய சீக்கிய சமூகத்தில் 19.2 மில்லியன், அதாவது இந்திய சீக்கியர்களில் 76% பேர் வட இந்திய மாநிலமான பஞ்சாபில் வசிக்கின்றனர், அவர்கள் அங்குள்ள மக்கள்தொகையில் 70.9% சதவீதம் பேர் ஆவர். கணிசமான அளவிலான சீக்கியர்கள் அதாவது 200,000 அதிகமானோர், இந்திய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களான ஹரியானா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், டில்லி, மகாராஷ்ட்ரா, உத்தராஞ்சல் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் வாழ்கின்றனர்.[48]

19 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், பஞ்சாப் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பின்னர், அப்போதைய பிரிட்டிஷ் இந்திய பகுதிகளில், சீக்கியர்கள் வரத்தொடங்கினர்.[38] பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்திய சிவில் சேவைகளுக்கு குறிப்பாக சீக்கியர்களை வேலைக்கமர்த்தியது, குறிப்பாக பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில், இதனால் சீக்கியர்கள் பிரிட்டிஷ் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தனர்.[38] பிரிட்டிஷ் அரசு காலக்கட்டத்தில், ஓரளவுக்கு திறன் மிகுந்த சீக்கிய கலைஞர்கள் பஞ்சாபிலிருந்து கிழக்கு ஆஃப்ரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ரயில் பாதைகளை அமைக்கப் பயன்படுத்தப்பட்டனர். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், சீக்கியர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து, அதிக அளவில் இங்கிலாந்திற்கு செல்ல தொடங்கினர், ஆனாலும் பலரும் வட அமெரிக்காவிற்கு சென்றனர். ஒரு சில சீக்கியர்கள் கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து உகாண்டா சர்வாதிகாரி இடி அமீனால் 1972 -இல் வெளியேற்றப்பட்டார்.[49] தொடர்ச்சியாக பொருளாதார காரணங்களுக்காக சீக்கிய நபர்களின் இடப்பெயர்வு, இப்போது கணிசமான பொருளாதார வளத்துடன் சீக்கிய மக்கள் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, மலேஷியா, கிழக்கு ஆஃப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர்.

படிமம்:World Sikh Pop. Map 2004-02.JPG
உலகெங்கும் சீக்கிய மக்கள்தொகையைக் காட்டும் வரைபடம் மற்றும் வரலாற்று ரீதியாக இடப்பெயர்வு செய்யப்பட்ட முறைகள் (2004 -இல் கணக்கிஅடப்பட்டது).[50]

பஞ்சாபிலிருந்து சீக்கிய மக்கள் இடம் பெயர்வது, அதிக அளவில் இருந்தாலும், சீக்கிய இடப்பெயர்வின் பாரம்பரிய முறைகள் மாறி விட்டன, குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளான இங்கிலாந்து போன்றவற்றுக்கு செல்லுதல், கடுமையான குடிமை கட்டுப்பாடுகளால் குறைந்து போய்விட்டபஞ்சாபிலிருந்து சீக்கிய மக்கள் இடம் பெயர்வது, அதிக அளவில் இருந்தாலும், சீக்கிய இடப்பெயர்வின் பாரம்பரிய முறைகள் மாறி விட்டன, குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளான இங்கிலாந்து போன்றவற்றுக்கு செல்லுதல், கடுமையான குடிமை கட்டுப்பாடுகளால் குறைந்து போய்விட்டது. மோலினர் (2006)[51] என்பவர் குறிப்பிடுவதாவது, இங்கிலாந்திற்கு சீக்கிய மக்கள் இடபெயர்வானது 'உண்மையில்' "1970களின் பிற்பகுதிக்கு பின்னர் கிட்டத்தட்ட சாத்தியமில்லாமல் போய்விட்டது", ஐரோப்பிய கண்டத்தின் பிற பகுதிகளுக்கு சீக்கிய இடப்பெயர்வு மாறிவிட்டது. சீக்கிய இடப்பெயர்வின் புதிய வளரும் பகுதியாக இத்தாலி தற்போது மாறிவிட்டது,[52] அங்குள்ள ரெக்கியோ எமிலியா மற்றும் விசென்சா மாகாணங்கள் கணிசமான அளவில் சீக்கிய மக்கள்தொகையால் நிறைந்து காணப்படுகிறது.[53] இத்தாலிய சீக்கியர்கள் பொதுவாக வேளாண்மை, அக்ரோ-செயலாக்கம், மெஷின் டூல்ஸ் மற்றும் ஹோர்ட்டிகல்ச்சர் போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.[54]

சமூக-பொருளாதார காரணங்களினால், இந்திய சீக்கியர்கள், இந்தியாவிலேயே வேறு எந்த பெரிய மத குழுவை விடவும் குறைந்த வளர்ச்சி வீதத்தை ஒரு பத்து ஆண்டுகளுக்கு கொண்டுள்ளனர், அது 16.9% சதவீதமாகும் (1991–2001 -இல் கணக்கிடப்படது).[55] ஜான்ஸ்டன் மற்றும் பாரட்ட் (2004) ஆகியோர், உலகளாவிய சீக்கிய மக்கள்தொகை ஆண்டுதோறும் 392,633 சீக்கியர்கள் என்ற அளவில் அதிகமடைகிறது, அதாவது ஆண்டுக்கு 1.7% வீதமாகும் 2004 ஆம் ஆண்டில்,[50] இந்த வளர்ச்சி வீதத்தில் பிறப்புகள், மரணங்கள் மற்றும் மாற்றங்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகின்றன.

பிரதிநிதித்துவம்

 
அமெரிக்க காங்கிரஸில் கூடு குழுவில் உரையாற்றிய பின்னர், முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனியுடன் கைகுலுக்கும் பிரதமர் மன்மோகன் சிங், பின்னணியில் முன்னாள் சபாநாயகர் டென்னிஸ் ஹாஸ்டெர்ட் பார்க்கிறார்.

சீக்கியர்கள் இந்திய அரசியலில், பல வகைகளில் பிரதிநிதித்துவப் படுத்தப் படுகிறார்கள், இந்திய அரசியலில் தற்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கால் வெளிப்படுத்தப்படுகின்றனர், இவரே இன்று அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்தின் தலைவர் ஆவார், நாட்டின் மிக உயர்ந்த அதிகாரியும் அவரே, இவரிடமே அணுஆயுத பொத்தானும் இருக்கும், இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகிய இருவரும் இந்த சமூகத்தின் உயர்ந்த நிலையில் உள்ள தலைவர்கள் ஆவர். பஞ்சாபின் தற்போதைய முதலமைச்சர், பர்கஷ் சிங் பாதல், ஒரு சீக்கியர். கடந்தகால சீக்கிய அரசியல்வாதிகளில், ஜியானி ஜெயில் சிங், முன்னாள் இந்திய குடியரசு தலைவர், டாக்டர். குருதயாள் சிங் தில்லான், இந்திய பாரளுமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்தவர். பிரதாப் சிங் கைரோன், மத்திய அமைச்சர், பிரபல சீக்கிய இந்திய சுதந்திர இயக்கம் தலைவர் மற்றும் முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் (இந்தியா).

சீக்கிய மக்கள் பரவலில் இருந்த பிரபல அரசியல்வாதிகளில் அமெரிக்க காங்கிரஸில் முழு வாக்களிக்கும் தகுதிவாய்ந்த நபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தலிப் சிங் சவுண்ட் என்ற முதல் ஆசிய அமெரிக்கர் அடங்குவார்,[56] டுனேடின் நகரத்தின் முன்னாள் மேயர் சுக்கி டர்னர், இங்கிலாந்தில் தற்போதைய பாராளுமன்ற செயலாளராக இருக்கும் பரம்ஜித் தாண்டா MP[57] மற்றும் பிரபலமான தம்பதியராக எந்தவொரு காமன்வெல்த் நாடுகளின் பாரளுமன்றத்திலும் அமர்ந்த முதல் தம்பதியனரான குர்மந்த் க்ரெவல் மற்றும் நினா க்ரெவெல் ஆகியோர், இவர்கள் கனடிய அரசாங்கத்தினரிடமிருந்து கமாகடமரு நிகழ்விற்காக மன்னிப்பைப் பெற்றனர், மற்றும் கனடிய ஷேடோ சோஷியல் டெவலப்மன்ட் அமைச்சர் ரூபி தல்லா MP. விக் தில்லான் என்பவர் மிகவும் பிரபலமான சீக்கிய கனடிய அரசியல்வாதியாகவும் தற்போதைய ஓண்டாரியோ சட்டப்பேரவையின் உறுப்பினராகவும் இருக்கிறார். உஜ்ஜல் தோசாஞித் என்பவர் புதிய ஜனநாயக கட்சியின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரீமியராக ஜூலை 2004 முதல் பிப்ரவரி 2005 வரை இருந்துவந்தார், தற்போது அவர் ஒட்டாவாவில் லிபரல் கட்சியின் முதல் பெஞ்ச் MP ஆக இருந்துவருகிறார். மலேசியாவில், இரண்டு சீக்கியர்கள் MPகளாக 2008 பொது தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கர்ப்பல் சிங் (புகித் கெலூகர்) மற்றும் அவருடைய மகன் கோபிந் சிங் தியோ (புச்சோங்) ஆகியோரே ஆவர். அதேபோல், வேறு இரண்டு சீக்கியர்கள், அச்ம்ப்ளிக்காக தேர்வு செய்யப்பட்டனர், அவர்கள் ஜக்தீப் சிங் தியோ (டேடக் கெராமத்) மற்றும் கேஷ்விந்தர் சிங் (மலிம் நல்வார்) ஆகியோர் ஆவர்.

சீக்கியர்கள் இந்திய ராணுவத்தில் 10–15% வரையில் எல்லா பதவிகளிலும் காணப்படுகின்றனர், மற்றும் அதன் அலுவலர் நிலைகளில் 20% பேர் காணப்படுகின்றனர்,[58] அதே நேரத்தில் சீக்கியர்கள் இந்திய மக்கள்தொகையில் 1.87% பேர்களே காணப்படுகின்றனர், இதனால் அவர்கள் ஒரு சாரசரி இந்தியனை விட 10 மடங்குகள் அதிகமாக போர்வீரராகவும் மற்று அலுவலராகவும் இந்திய ராணுவத்தில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பை பெறுகின்றனர்.[59] சீக்கிய ரெஜிமென்ட் என்பது இந்திய ராணுவத்தில் மிக அதிகமாக புகழப்படும் மற்றும் மிகவும் வீரமிக்கது என்று நம்பப்படும், மற்றும் திறன்வாய்ந்த ரெஜிமன்ட்டாக கருதப்படுகிறது,[60] அதற்கு 73 போர் அங்கீகாரங்களும், 14 விக்டோரியா பதக்கங்களும்,[61] 21 முதல் தர இந்திய ஆணை (விக்டோரியா பதக்கத்திற்கு ஈடானது) ,[62] 15 அரங்க அங்கீகாரங்கள் மற்றும் 5 COAS யுனிட் குறிப்புகளையும் 2 பரம் வீர் சக்ரா, 14 மஹா வீர் சக்ரா, 5 கீர்த்தி சக்ரா, 67 வீர் சக்ரா மற்றும் 1596 பிற கேலன்டிரி விருதுகளையும் பெற்றுள்ளது.இந்திய வான் படையின் வரலாற்றில் அதிகபட்ச பதவியை வகித்தவர் ஒரு பஞ்சாபி சீக்கியர் ஆவர், அவர் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் அர்ஜன் சிங் ஆவார்.[63] MOD ஆல் ஒரு இன்ஃபேன்ட்ரி படையை யுகே சீக்கிய ரெஜிமென்டை உருவாக்கும் திட்டம் ஜூன் 2007 -இல் கைவிடப்பட்டது, இதற்கு இங்கிலாந்தில் சீக்கிய பிரிவினரின் எதிர்ப்பும், பிரிட்டன் இளவரசர் சார்லஸின் எதிர்ப்பும் காரணமாகும்.[64]

 
அல்பர்ட்டா, கனடாவில் குருத்துவாரா என்று அழைக்கப்படும் ஒரு சீக்கிய கோயில்.

வரலாற்று ரீதியாக, பெரும்பாலான இந்தியர்கள் விவசாயிகளாகவே இருந்து வருகின்றனர், இன்றும் 66% இந்தியர்கள் (மூன்றில் இரண்டு பங்கு) விவசாயிகளே.[65] இந்திய சீக்கியர்களும், பெரும்பாலும் வேளாண்-தொழிலைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர், 2001 -ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, பணிசெய்யும் நபர்களில் 39% இந்தியாவில் இந்த துறையில் உள்ளனர் (இந்திய சராசரியை விடக் குறைவு) .[66] 1960களில் பசுமை புரட்சியின் வெற்றியின் காரணமாக, அதாவது, "பற்றாக்குறையிலிருந்து தன்னிறைவையும், தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கும்" இந்தியா அந்நேரத்தில் உயர்வடைந்தது,[67] இதில் சீக்கிய பெரும்பான்மை மாநிலமான பஞ்சாபை "இந்தியாவின் ப்ரெட்பாஸ்கட்டாக" மாறியது.[68][69] சீக்கிய பெரும்பான்மை மாநிலமான பஞ்சாப், புள்ளிவிவரத்தின் படி இந்தியாவில் மிகவும் பணக்கார மாநிலமாகும் (தனிநபர் வருவாய்) இந்திய சராசரியை விட 3 மடங்கு அதிகமாக பஞ்சாபில் காணப்படுகிறது.[70] பசுமை புரட்சியில் இந்திய விவசாயிகள் அவர்களுடைய, விவசாய முறைகளில் அதிக தீவிரத்தையும் இயந்திரம் சார்ந்த நுட்பங்களையும் பயன்படுத்த தொடங்கினர்; இதற்கு பஞ்சாபில் மின்மயமாக்கல், கூட்டுறவு கடன், சிறிய சொத்துக்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் உருவாக்கிய கால்வாய் பாசனத்தை அகற்றுவது ஆகியவை அடங்கியிருந்தன.[71] ஸ்விடிஷ் அரசியல் விஞ்ஞானி, இஷிதாக் அஹ்மத், என்பவர், இந்திய பசுமை புரட்சியின் வெற்றிக்கு காரணிகளில் ஒன்று "சீக்கிய விவசாயி ஆவார், பெரும்பாலும் ஜேட் மக்கள், அவர்களின் நம்பிக்கை, விடாமுயற்சி, மற்றும் உடல் வலிமை மிகவும் முக்கியமானதாகும்".[72] ஆனாலும், பசுமை புரட்சியின் எல்லா கூறுகளும் நன்மையளிக்கும் விதமாக இருந்தன என்று கூறுவதற்கில்லை, இந்திய இயற்பியலாளர் வந்தனா சிவா[73] என்பவர், பசுமை புரட்சியின் விளைவானது, கண்ணுக்கு தெரியாமல் "அறிவியலின் எதிர்மறை மற்றும் அழித்தல் பாதிப்புகளை உருவாக்கியது [அதாவது, பசுமை புரட்சி]" என்று கூறுகிறார்; இதன் மூலம் அறிவியல் அமைப்புகளின், விவசாயிகள் தங்களுடைய பொருள் சார்ந்த மற்றும் அரசியல் மூலங்களை இழந்து விட்டனர், புதிய வகை வறட்சி அல்லது சமூக சிக்கல் தோன்றினால், அவை பாரம்பரிய முறைகளை சார்ந்திராத புதிய முறைகளை சார்ந்தவைகளாக இருக்கும். எனவே சிவாவின் கருத்துப்படி, பசுமை புரட்சி, பஞ்சாபில் சீக்கிய இந்துத்துவ முரண்பாடுகளுக்கு ஒரு வினையூக்கியாகவே இருக்கிறது.

பஞ்சாபி சீக்கியர்கள், பல வகையான தொழில்கள் செய்பவர்களாக உள்ளனர், அவற்றில் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள் ஒரு சில சீக்கியர்கள் மன்ஹட்டன் திட்டத்தில் பணியாற்றிய அணு விஞ்ஞானி பேராசிரியர் பியாரா சிங் கில்; ஒளியியல் விஞ்ஞானி ' ("ஃபைபர் ஆப்டிக்ஸின் தந்தை")' டாக்டர். நரிந்தர் சிங் கபானி; இயற்பியலாளார் மற்றும் அறிவியல் எழுத்தாளர்/ப்ராட்காஸ்டர் சைமன் சிங் மற்றும் வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் பல்தேவ் சிங் தில்லான் போன்ற மிகவும் பிரபலமானவர்களாகவும் உள்ளனர்.

வணிக உலகில், யுகேவைச் சேர்ந்த பிரபல நியூலுக் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த JASPAL ஆகிய சில்லறை விற்பனை/பிராண்ட்கள் சீக்கியர்களால் தொடங்கப்பட்டவை. இந்தியாவின் மிகப்பெரிய பார்மச்சுட்டிகல் நிறுவனம் ரான்பாக்ஸி லேபாராட்டரீஸ் சீக்கியர்களால் தலைமைத் தாங்கப்படுகிறது.[74] இங்கிலாந்த்தில் மத ரீதியான எல்லா சமூகப் பிரிவினரிடையேயும் அங்குள்ள சீக்கியர்கள் அதிகபட்ச வீட்டு உரிமையை பெற்றுள்ளனர், அதாவது 82%.[75] UK சீக்கியர்கள் UK வில் இரண்டாவது மிகவும் பணக்கார சமூகமாக (யூதர்களுக்கு பிறகு) இருக்கின்றனர், இவர்களின் சராசரி வீட்டு மதிப்பானது £229, 000 ஆகும்.[76] சிங்கப்பூரில், கர்த்தர் சிங் தாக்ரல் என்பவர் குடும்ப வணிகத்தை ஆரம்பித்தார், தாக்ரல் ஹோல்டிங்ஸ்/கார்,[77] பின்னர் அதனை முழுநேர வணிகமாக மாற்றில் இப்போது ஒட்டுமொத்த சொத்துக்களாக $1.4 பில்லியன் சொத்தை வைத்துள்ளார். தாக்ரல் சிங்கப்பூரின் 25வது பணக்கார மனிதர். பாப் சிங் தில்லான் என்பவர் முதல் இந்தோ-கனடிய பில்லியனரும் சீக்கியரும் ஆவார். வட அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த எந்தவொரு வேற்று சமூக மக்களும் இந்த அளவுக்கு வெற்றிப்பெற்றிருக்கவில்லை; குறிப்பாக கலிஃபோர்னியாவின் வளமிகுந்த சென்ட்ரல் வேலிக்கு சென்றா சீக்கியர்கள் கணிசமான அளவு வெற்றியைப் பெற்றுள்ளனர். சீக்கியர்களின் விவசாய நுணுக்கங்கள், மற்றும் கடின உழைப்பைச் செய்ய அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் ஆகியவற்றினால், அவர்கள் தாழ்ந்த நிலையிலிருந்த குடிபெயர்ந்த தொழிலாளிகளிலிருந்து கலிஃபோர்னியாவின் பெரும்பாலான விவசாய நிலங்களின் உரிமையாளர்களாக உயர்ந்துள்ளனர். இன்று அமெரிக்க சீக்கிய விவசாயிகளான ஹர்பஜன் சிங் சம்ரா மற்றும் திதார் சிங் பெயின்ஸ் ஆகியோர் கலிஃபோர்னிய விவாசயத்தைக் கட்டுப்படுத்துகின்றனர் மற்றும் அவர்கள் நட்பாக "ஓக்ரா" மற்றும் "பீச்" ராஜாக்கள் என்று முறையே அழைக்கப்படுகின்றனர்.

பிரபலமான சீக்கிய நபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோரில், பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மான்டி பனேசார், முன்னாள் 400 மீ உலக சாதனையாளர் மில்கா சிங், மற்றும் ஹர்பஜன் சிங், இந்தியாவின் மிகப்பிரபலமான ஆஃப் ஸ்பின் கிரிக்கெட் பந்துவீச்சாளர், நடிகர்கள் பர்மிந்தர் நக்ரா, நம்ராதா சிங் குஜ்ரால், ஆர்ச்சி பஞ்சாபி மற்றும் இயக்குநர் குரிந்தர் சத்தா ஆகியோர் அடங்குவர்.

சீக்கியர்கள் உலகின் பல பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர், அவர்களின் உட்பிரிவுகளும் அவர்களின் தோற்றங்களைப் போலவே பலவாறு வேறுபட்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் உள்ள சீக்கிய சமூகத்தினர், பல வகையான நபர்களை உள்ளடக்கியுள்ளனர், சீக்கிய குருக்கள் மரபு ரீதியான சமூக ஒருங்கிணைவை போதித்தனர். இவர்களில் வேறுபட்ட இன மக்களும், பழங்குடி மற்றும் சமூக-பொருளாதார குழுக்களும் உள்ளனர். முக்கியமான குழுக்களாவன (அதாவது 1,000 உறுப்பினர்களுக்கும் அதிகமாக உள்ளவர்கள்):அஹுவாலியா, அரயன், அரோரா, பத்ரா சீக்கியர்கள்(ரௌத்), பைராகி, பணியா, பாசித், பவாரியா, பசிகர், பாப்ரா, ப்ராமன், சமர், சிம்பா, டார்சி, தோபி, குஜர், ஜேட், ஜின்வார், கஹர், கம்போஜ், காத்ரி, கும்ஹர், லபானா, லோஹர், மஹதம், மசாபி, மேக், மிராசி, மொச்சி, நய், ராஜ்புத், ராம்காரியா, சைனி, சரீரா, சிக்லிகார், சுனார், சுத், தர்கான் மற்றும் ஜர்கர் ஆகியோர் ஆவர்.[சான்று தேவை] இந்தியாவில், ஜேட் மற்றும் காத்ரி இன குழுவாக்கத்தில் மிக அதிகமான மக்கள் வாழ்கின்றனர், இவர்களின் மக்கள்தொகை 11,855,000, அடுத்ததாக மஷாபி மக்கள் 2,701,000 மக்கள்தொகையுடனும், தர்க்கான்கள் 1,091,000 பேர்கள் மர்றும் சீக்கிய ராஜ்புத்கள் 769,000 மக்கள் தொகையுடனும் வாழ்கின்றனர்.[78]. அஹுல்வாலியா, காத்ரிஸ், ஜேட்ஸ், லோஹர்கள், கம்போஜாஸ், குஜ்ஜார்ஸ், ராஜ்புத்ஸ் மற்றும் ராம்காரியாஸ் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் மற்றும் இவர்கள் இந்தோ-சைத்தியன் மூலம் மற்றும் புராணரீதியான ஆரிய இனத்தையும் சார்ந்தவர்களாவர்.

ஒரு சிறப்பு பஞ்சாபி சீக்கியர் குழுவும் உருவானது, இவர்கள் தங்களை அகாலிகள் என்று அழைத்துக்கொண்டனர், இந்த குழுவினர் மஹாராஜா ரஞ்சித் சிங் காலத்தில் உருவானது. தங்களுடைய தளபதி ஜெனரல் அகாலி பூளா சிங் தலைமையில், 1800களில், சீக்கிய பேரரசிற்காக பல போர்களில் இவர்கள் வென்றுள்ளனர்.

இந்திய மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சீக்கியர்கள்

 
15வது சீக்கிய ரெஜிமன்ட் முதல் உலகப்போரின்போது பிரான்ஸிற்குள் வந்ததைக் காட்டும் ஒரு அஞ்சலட்டை. இந்த அஞ்சலட்டையில், "ஜெர்மானிய பூதங்களை ஒழித்துக்கட்ட வரும் இந்திய நன்மனிதர்கள்" என்று எழுதப்பட்டுள்ளது.

[[முதலாம் உலகப் போரின் காலத்தில், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 100,000 மேலாகும்; அதாவது பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில்|முதலாம் உலகப் போரின் காலத்தில், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 100,000 மேலாகும்; அதாவது பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில்]] 20% பேராவர். 1945 -ஆம் ஆண்டுகள் வரை, 14 விக்டோரியா பதக்கங்கள் சீக்கியர்களுக்கு வழங்கப்பட்டது, ஒட்டுமொத்த சாதனை விருதுகள் சீக்கிய ரெஜிமண்ட்களுக்கு வழங்கப்பட்டது.[61] 2002 -ஆம் ஆண்டில், எல்லா சீக்கிய VC மற்றும் ஜார்ஜ் பதக்க வெற்றியாளர்களின் பெயர்கள் லண்டனில் பக்கிங்காம் அரண்மனைக்கு அடுத்துள்ள கான்ஸ்டிட்யூஷன் ஹில் -இல் அமைந்துள்ள பெவிலியன் நினைவுச்சின்னமான மெமோரியல் கேட்ஸ் -இல் செதுக்கப்பட்டன[79].[80] லெப்டினன்ட் கர்னல் சனான் சிங் தில்லான் (ஓய்வு), பஞ்சாபி இந்திய இரண்டாம் உலகப்போர் நாயகன் மற்றும் சாதனையாளர் ஆவார், இவரே முன்னாள் ராணுவ பணியாளர் லீகிற்கு (பஞ்சாப் & சண்டிகர்) தலைவராகவும் உள்ளார், இவர் நினைவு சின்னங்களுகாக குரல் கொடுத்து வருகிறார்.

முதல் உலகப்போரின்போது, சீக்கிய பட்டாலியன்கள் எகிப்து, பாலஸ்தீனம், மெசப்பட்டோமியா, காலிபோலி மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களில் போரிட்டுள்ளது. சீக்கிய ரெஜிமண்டின் ஆறு பட்டாலியன்கள் இரண்டாம் உலகப்போரில் உருவாக்கப்பட்டன, அவை, எல் அல்மெயின் மற்றும் பர்மா, இத்தாலி மற்றும் ஈராக் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டன, இவர்கள் 27 போர் கவுரவங்களைப் பெற்றுள்ளனர்.

உலகெங்கும் சீக்கியர்கள் காமன்வெல்த் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர்.[81]

General Sir Frank Messervy[82]

— "In the last two world wars 83,005 turban wearing Sikh soldiers were killed and 109,045 were wounded. They all died or were wounded for the freedom of Britain and the world, and during shell fire, with no other protection but the turban, the symbol of their faith."

Sir Winston Churchill[83]

— "British people are highly indebted and obliged to Sikhs for a long time. I know that within this century we needed their help twice [in two world wars] and they did help us very well. As a result of their timely help, we are today able to live with honour, dignity, and independence. In the war, they fought and died for us, wearing the turbans."

சராகி போர்

படிமம்:Pd image of Saragarhi Tablet.jpg
சராகார்ஹி போரை விளக்கும் கல்வெட்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் எழுப்பப்பட்டது.

சராகி போர் என்பது மனித வரலாற்றில் துணிச்சலான செயல்களுக்கான கதைகளில் முக்கியமான சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.[84] 36வது சீக்கிய படையின் இருப்பத்தோரு வீரர்கள் ஹவில்தார் இஷார் சிங் என்பவரால் தலைமை தாங்கி செல்லப்பட்டனர், இவர்கள் 10,000 பேர்கள் இணைந்த பெரிய ஆஃப்கன் தாக்குதலை பல மணிநேரங்கள் எதிர்த்து தாக்கு பிடித்தனர். இந்த 21 சீக்கிய ராணுவத்தினரும், சரணடைய முன்வராமல், சாகும் வரை போராடி இறந்தனர். இவர்களுடைய மிக உயர்ந்த, தியாகத்தை கவுரவிக்கும் விதமாக பிரிட்டிஷ் பாராளுமன்றம் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செலுத்தியது, இவர்கள் அனைவருக்கும் இந்திய கவுரவ ஆணையை வழங்கியது (விக்டோரியா பதக்கத்திற்கு ஈடானது) . இந்த போரானது, தெர்மோபைலே போருடன் ஒப்பிடப்படுகிறது,[85] இந்த போரில் ஒரு சிறிய கிரேக்க படை செர்க்செஸ்ஸின் மிகப்பெரிய பெர்சியப் படையை எதிர்கொண்டது (கி.மு 480) .

இந்த சராகர்ஹி சண்டையை நினைவுகூர்ந்து, சீக்கிய ராணுவ பிரிவினர், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12 ஆம் தேதி, சராகர்ஹி நாளை அனுசரிக்கின்றனர். சீக்கிய ராணுவ நபர்கள் மற்றும் உலகெங்கும் சீக்கிய ராணுவத்தைச் சாரத பொதுமக்கள் ஆகியோர் செப்டம்பர் 12 ஆம் நாள் இதை அனுசரிக்கின்றனர்.

சுதந்திரத்திற்கு முன்பு: விடுதலை போராட்டத்தில் சீக்கியர்களின் பங்கு மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள்

பிரிட்டிஷாரடமிருந்து இந்திய விடுதலையைப் பெறுவதற்கு சீக்கியர்கள் மிக முக்கிய பங்கை வகித்தனர். அவர்களின் மக்கள்தொகை வலுவின் விகிதத்திற்கு முற்றிலும் ஒத்துப்போகாத அளவுக்கு முழுவதுமாக தியாகங்கள் செய்தனர் (சீக்கியர்கள் இந்திய மக்கள்தொகையில் 2% க்கும் குறைவான அளவே உள்ளனர்).

(சுதந்திரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மவுலானா அபுல் ஆசாத் என்ப்வரால் தரப்பட்ட விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.)

கொல்லப்பட்ட 2125 இந்தியர்களில், 1550 (73%) பேர் சீக்கியர்கள்.

அந்தமான் தீவுகளுக்கு, (பிரிட்டிஷ் அரசாங்கம் அரசியல் மற்றும் பொது குற்றங்களில் ஈடுபட்டவர்கள்க்கு தண்டனை வழங்க பயன்படுத்திய இடம்) ஆயுள் தண்டனைக்காக கொண்டு செல்லப்பட்ட 2646 இந்தியர்களில் 2147 (80%) பேர் சீக்கியர்கள்.

கேல்லோஸுக்கு அனுப்பப்பட்ட 127 இந்தியர்களில் 92 (80%) பேர் சீக்கியர்கள்.

ஜாலியன் வாலாபாக்கில் படுகொலை செய்யப்பட்ட, 1302 ஆண், பெண் மற்றும் குழந்தைகளில் 799 (61%) பேர் சீக்கியர்கள்.

இந்திய விடுதலை ராணுவத்தில், 20,000 பதவிகள் மற்றும் அலுவலர்களில் 12,000 (60%) பேர் சீக்கியர்கள்.

விடுதலை போராட்டத்தின்போது, தூக்கிலிடப்பட்ட 121 பேர்களில், 73 (60%) பேர் சீக்கியர்கள்.

சீக்கியர்கள் இதயத்தையும், ஆன்மாவையும் வெளிப்படுத்தி, இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டனர், ஆட்சி அதிகார பரிமாற்றத்துக்காக பிரிட்டிஷார் பேசிய மூன்றாவது நபர்கள் இவர்களே. ஆனாலும், சீக்கிய தலைவர்களின் போதுமான திறனின்மையின் காரணமாகவும், தவறான நம்பிக்கை மற்றும் போலியான வாக்குறுதிகளாலும், சீக்கியர்கள் தங்களுடைய அதிகாரத்திற்கான கோரிக்கையை இழந்து விட்டனர்.

1929 -இல், சீக்கியர்கள் லாகூரில் மிகப்பெரிய அமைதியான விடுதலை பேரணியை நடத்தினர், தி டைம்ஸ் பத்திரிக்கையின் சொற்களில் கூறுவதானால், 500,000 வலுவான பேரணி "இது காங்கிரஸாரை அவமானத்திலும் பின்னுக்கும் தள்ளியது "(put the Congress show into shame and shadow)," காந்தியும் நேருவும் சீக்கிய தலைவர்களை சந்தித்து, இந்து சீக்கிய ஒற்றுமையை முன்வைத்தனர், ஒரு ஒருங்கிணைந்த இந்தியாவில், சீக்கிய நம்பிக்கைகள் (சமூக, பொருளாதார மற்றும் மத ரீதியானவை) காப்பாற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

பின்வரும் வாக்குறுதிகள் தரப்பட்டன:

"என்னையும் காங்கிரஸையும் உங்களுடன் இணைக்கும் இணைப்புக்கு கடவுளே சாட்சியாக இருக்கட்டும். காங்கிரஸ் கைவிட்டுவிடும் என்று நம்முடைய சீக்கிய நண்பர்கள் கவலைக் கொள்ள ஒரு காரணமும் இல்லை. அவ்வாறு அது செய்யும் கணத்தில், காங்கிரஸ் தனக்கும் நாட்டுக்கும் அழிவைக் கொண்டு வரும் செயலை செய்வதாகும். மேலும், சீக்கியர்கள் மிகவும் தைரியமான மக்கள். தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் அறிவர், அந்நிலை ஏற்படும் போது ஆயுதங்களைப் பயன்படுத்தியும், கடவுளுக்கும் மனிதனுக்கு ஏற்ற நியாத்தைப் பின்பற்றுவதன் மூலமும், அவர்கள் தங்களையும் தங்கள் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வார்கள்" (யங் இந்தியா 19 மார்ச் 1931)

"சீக்கியர்களைத் திருப்தி படுத்தாத எந்தவொரு சட்ட அமைப்பையும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது." (M K காந்தியின் பணிகளின் தொகுப்பு தொகுதி.58. ப. 192)

"பஞ்சாபின் விசேஷ சீக்கியர்கள், சிறப்பு கவனத்தைப் பெற தகுதி வாய்ந்தவர்கள். சீக்கியர்களுக்கு என ஒரு தனி இடத்தை வடக்கில் அமைப்பதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை, அவர்கள் சுதந்திரத்தின் வளர்ச்சியையும் அங்கு பெற முடியும். (ஜவஹர்லால் நேரு, காங்கிரஸ் கூட்டம்: கல்கத்தா – ஜூலை, 1944)

சீக்கியர்களின் பூர்வீக இருப்பிடம் பிரிக்கப்பட்டது, அவர்கள் பெரிய இழப்பைச் சந்தித்தனர். தலைநகர் லாகூரைச் சுற்றியிருந்த நன்கானா சாஹிப், பஞ்சா சாஹிப் மற்றும் பல சீக்கிய கோயில்கள் பாகிஸ்தானிடம் தரப்பட்டன, 75% க்கும் அதிகமான மிகவும் வளம்வாய்ந்த நிலங்கள் பாகிஸ்தானால் எடுத்துக்கொள்ளப்பட்டது, மேலும் 500,000 க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பிரிவினையின் உயிரிழந்தனர்.

மேற்கத்திய உலகில் சீக்கியம்

 
டொராண்டோ, கனடாவில் சீக்கியர்களின் கொண்டாட்டம்

சீக்கியர்கள் டர்பன்களை அணிவதாலும் (அவை மத்திய கிழக்கு டர்பன்களை விட வேறுபட்டிருந்தாலும்) அவர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும் மேற்கத்திய நாடுகளில் இவர்களை மத்திய கிழக்கு நாடுகளின் முஸ்லீம் நபர்கள் என்று சில நாடுகளில் கருதப்பட்டு விட்டனர். இதனால், மேற்கு நாடுகளில் வாழும் சீக்கியர்களுக்கு எதிராக தவறான கருத்துக்களும் நடவடிக்கைகளும் தோன்றின, குறிப்பாக 9/11 தீவிரவாத தாக்குதல் மற்றும் சமீபத்திய ஈராக் போர் பிரச்சனைக்கு பின்னர் இது அதிகரித்துள்ளது[86][87].

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பின்னர், சில நபர்கள் சீக்கியர்களை தீவிரவாதிகள் அல்லது தலிபானைச் சேர்ந்தவர்கள் என்று கருதத் தொடங்கிவிட்டனர். இந்த தாக்குதலுக்கு சில நாட்களுக்கு பின்னர் பல்பீர் சிங் சோதி என்ற சீக்கியர் ஃப்ராங் ராக் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார், இந்த நபர் இறந்தவருக்கு அல்கய்தாவுடன் தொடர்பு இருப்பதாக கருதினார். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும், சீக்கிய மக்களுக்கு எதிராக வெறுப்பு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன CNN கூறுகிறது.[86][87]

சீக்கிய மதத்தினர், எப்போதும் மதமாற்றத்தைக் கோரியதில்லை, எனவே சீக்கியர்கள் பொதுவாக ஓரியல்பான மதப்பிரிவினராக காணப்படுகின்றனர்.[151] ஆனாலும், 3HO (மகிழ்ச்சி, ஆரோக்கியம், தெய்வீகம் (Happy, Healthy, Holy)) அமைப்பு, குண்டலின் யோகாவின் வழியாக ஹர்பஜன் சிங் யோகி என்பவரின் நடவடிக்கைகளின் காரணமாக, சீக்கியம் இந்தியாவைச் சாரத மக்களிடையேயும் கணிசமான அளவு வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது.[88] 1998 -ஆம் ஆண்டில், இந்த 3HO சீக்கியர்கள், பொதுவாக ‘கோரா’ (ਗੋਰਾ) அல்லது ‘வெள்ளை’ சீக்கியர்கள் என்றழைக்கப்படுகின்றனர், மொத்தமாக 7,800[89] பேர் இருந்தனர் என்றும், அவர்கள் முக்கியமாக எஸ்பானோலா, நியூ மெக்சிகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியா ஆகிய இடங்களில் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டது. சமீபத்தில், ஓரேகானில் ஒரு சட்டம் போடப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் டர்பன்கள் அணிவது தடை செய்யப்பட்டது. இந்த சட்டத்தை திரும்பப்பெற வைக்க அமெரிக்க இஸ்லாமிய தொடர்புகள் கவுன்சிலும் சீக்கியர்களும் ஒன்றாக இணைந்து முயன்று வருகின்றனர்.

கலை மற்றும் கலாச்சாரம்

 
ஹர்மிந்தர் சாஹிப், சிர்கா 1870

சீக்கிய கலை மற்றும் வரலாறு, பஞ்சாப் பகுதியுடன் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. பஞ்சாப் பகுதியே இந்தியாவின் ஒன்றுசேர்தல் பகுதி என்றழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்குதான் பல ஆக்ரமிப்பாளர்களின் கலாச்சாரமும் முதலில் உள்வரத் தொடங்கியது, கிரேக்கர்கள், முகலாயர்கள் மற்றும் பெர்சியர்கள் ஆகியோர் அவற்றில் சில, மேலும் இங்கு ஐந்து நதிகள் பாய்கின்றன. எனவே, இந்த கலாச்சாரங்களின் சேர்க்கைகளினால் சீக்கிய கலாச்சாரம் ஏராளமான விஷயங்களைப் பெற்றுள்ளது.

சீக்கியம் ஒரு தனிப்பட்ட வகை கட்டிடக்கலையை உருவாக்கியது, இதை பட்டி என்பவர் "குரு நானக்கின் ஆக்கப்பூர்வ புதிர்தன்மையின்" தாக்கத்தால் சீக்கிய கட்டிடக்கலை" உருவானது என்று குறிப்பிடுகிறார். இது "பாரபட்சமற்ற தெய்வீகத்தன்மையை அடிப்படையாக கொண்ட, ஆன்மீக மனித பண்பின் அமைதியான பயணம்" என்கிறார்.[90] சீக்கிய கட்டிடக்கலையின் மிக முக்கிய சின்னம் குருத்துவாராக்களாகும், இவை பஞ்சாபி கலாச்சாரத்தின், "உருகும் பானை" அமைப்பாகும், இவை இஸ்லாமிய, சூஃபி மற்றும் இந்து மத பாதிப்புகளைத் தன்னகத்தே கொண்டது. சீக்கிய பேரரசின் பகுதிகளே, சீக்கிய வடிவ அமைப்புகளை உருவாக்குவதற்கான முக்கியமான தூண்டுதலாக இருந்தது, இதில் மஹாராஜா ரஞ்சித் சிங் ஏராளமான கோட்டைகள், குடியிருப்பு பகுதிகள், கல்லூரிகள் முதலானவற்றை சீக்கிய பாணி எனப்படும் அமைப்பில் கட்டினார். சீக்கிய கலாச்சாரத்தின் பண்புக்கூறுகளாவன தங்கமுலாம் பூசப்பட்ட குழிவான கூரைகள், புகைபோக்கிகள், கியோஸ்கள் மற்றும் சதுரமான கூரைகளின் மேல்பகுதியில் கல்லாலான கைப்பிடிகள் அதிக அழகுடன் அலங்கரிக்கப்பட்டிப்பவை ஆகியவை ஆகும். சீக்கிய பாணி என்ற "மகுடத்தில் ஒரு அலங்காரமாக இருப்பது" ஹர்மிந்தர் சாஹிப் ஆகும்.

சீக்கிய கலாச்சாரம், ராணுவ நோக்கங்களின் பாதிப்புகளைக் கொண்டுள்ளது, அவற்றில் கண்டா இருப்பது மிகவும் அவசியமானது, எனவேதான் பெரும்பாலான சீக்கிய ஆடைகள் ஒரு ராணுவ கட்டமைப்புடன் காணப்படும், இதில் சீக்கிய குருக்களின் போதனைகள் சார்ந்திருக்கப்படுவதில்லை. ஹோலா மொஹால்லா மற்றும் வைஷகி போன்ற சீக்கிய பண்டிகைகளிலும் இந்த நோக்கமே அதிகமாக காணப்படும், இவற்றில் வலிமையின் அளவு வெளிக்காட்டப்படும்.

சீக்கிய மக்கள்பரவலில் காணப்படும் கலையும் கலாச்சாரமும், 'இந்தோ-கனடியன்', 'பிரிட்டிஷ் ஏஷியன்', இந்தோ கனடியன் போன்ற பிற இந்தோ-குடிபெயர்ந்த குழுக்களுடன் இணைந்து காணப்படுகின்றன; ஆனாலும் ஒரு தனிப்பட்ட கலாச்சார நிகழ்வும் உருவாகி விட்டது, இதனை 'அரசியல் சீக்கியம்' என்று விவரிக்கலாம்.[91] அமர்ஜீத் கவுர் நந்தாரா & அம்ரித் மற்றும் ரபிந்த்ர கவுர் சிங் போன்ற பரவி வாழும் சீக்கியர்களின் கலையானது, அவர்களின் சீக்கியம் மற்றும் பஞ்சாபில் தற்போதைய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவையாகும்.

தனித்துவம் மிக்க பஞ்சாபி நாட்டுப்புற நடனங்களாவன பாங்கரா மற்றும் ஜித்தா ஆகியவையாகும், இவற்றை பஞ்சாபி சீக்கியர்கள் மிகவும் விரும்பி ஆடுகின்றனர். இந்த வகையான வெளிப்பாடுகளினால், பஞ்சாபி சீக்கியர்கள் உலகெங்கும் பல இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளனர், சீக்கிய கலாச்சாரம் பிரிக்கமுடியாத அளவிற்கு பங்க்ராவுடன் இணைந்து காணப்படுகிறது, சொல்லப்போனால் "பங்க்ரா சீக்கிய நடனம் அல்ல, ஒரு பஞ்சாபி நடனமாகும்."[92]

நவீன காலத்தில் குறிப்பிடத்தக்க சீக்கியர்கள்

படிமம்:IMG 0228.jpg
இந்திய சுதந்திர போராட்ட வீரர்
 
இந்திய பாரம்பரிய உத்தம் சிங், ராம் மொஹம்மத் சிங் ஆசாத் என்றும் அழைக்கப்படுகிறார்.

ராணுவத்தில் அலங்கரிக்கப்பட்ட பஞ்சாபி சீக்கியர்கள்

படிமம்:Victoria Cross Medal Ribbon & Bar.jpg
"எதிரியின் முகத்துக்கு எதிராக" மிகச்சிறந்த போர்க்குணத்தைக் காட்டியதற்காக தரப்படும் மதிப்பு வாய்ந்த விக்டோரியா பதக்கம்.

பிற குறிப்பிடத்தக்க கவுரவம் பெற்ற ராணுவத்தினர்

குறிப்புதவிகள் மற்றும் குறிப்புகள்

  1. "Has India put the U.S. - India 'Nukes - for mangoes'". Panthic Weekly. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  2. "Census of India". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  3. "Sikhs in the UK (BBC)". 1999-04-14. பார்க்கப்பட்ட நாள் 2008-01-13.
  4. "2001 Canadian Census - Sikh Population" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  5. Ember, Carol R. (2004). Encyclopedia of diasporas. Springer. p. 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0306483211. The current estimate is 200,000 Sikhs
  6. "Overseas Indian: Connecting India with its Diaspora". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  7. "2004 Sikh Population of Italy". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  8. "2008 UNHCR report of religions and religious affiliations: Sikh Population of Thailand". பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
  9. "SIKHS IN AUSTRALIA". பார்க்கப்பட்ட நாள் 2009-05-14.
  10. "Sub-continent Sikh Population breakdown". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  11. "Sikh Population of Kuwait". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  12. "Sikh Population of The Netherlands". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  13. "2008 UNHCR report of religions and religious affiliations: Sikh Population of Indonesia". பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
  14. Moliner, Christine. "Estimate of French Sikh population 'Workshop on Indian Migration' at Laboratoire d'Anthropologie Urbaine/CNRS". Ph.d. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  15. "Sikh Population of Singapore" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  16. "New Zealand Sikh Population via NZ 2006 census". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  17. "2008 UNHCR report: Sikh Population of Hong Kong/China". பார்க்கப்பட்ட நாள் 2008-03-03.
  18. "Sikh Population of Nepal" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  19. "Sikh Population of Germany for statistical sampling". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  20. "UN figures for Fiji 1986" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  21. "Sikhs struggle for recognition in the Islamic republic - Radio France Internationale". பார்க்கப்பட்ட நாள் 2009-11-23.
  22. "Sikh Population of Austria" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  23. "Sikh Population of Ireland from The Times". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  24. Singh, Khushwant (2006). The Illustrated History of the Sikhs. India: Oxford University Press. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-567747-1.
  25. (பஞ்சாபி மொழி) Nabha, Kahan Singh (1930). Gur Shabad Ratnakar Mahan Kosh/ਗੁਰ ਸ਼ਬਦ ਰਤਨਾਕਰ ਮਹਾਨ ਕੋਸ਼ (in Punjabi). p. 720. பார்க்கப்பட்ட நாள் 2006-05-29.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  26. "Sikh Reht Maryada: Sikh Code of Conduct and Conventions". Shiromani Gurdwara Parbandhak Committee. பார்க்கப்பட்ட நாள் 2008-11-06. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  27. "Sikhism – MSN Encarta". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  28. "Concepts of Seva and Simran". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  29. Nesbitt, Eleanor (2005). Sikhism: a very short introduction. Oxford University Press. pp. 13–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280601-7.
  30. "Sri Guru Tegh Bhadur Sahib". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  31. சீக்கிய தத்துவ கொடைகள்
  32. Brar, Sandeep Singh. "Authoritative essays on the Sikh Gurus and Saints". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  33. Nesbitt, Eleanor (2005). Sikhism: a very short introduction. Oxford University Press. pp. 40–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280601-7.
  34. "BBC History of Sikhism - The Khalsa". Sikh world history. BBC Religion & Ethics. 2003-08-29. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  35. Singh, Patwant (2000). The Sikhs. Knopf. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0375407286.
  36. McLeod, Hew (1987). "Sikhs and Muslims in the Punjab". South Asia: Journal of South Asian Studies 22 (s1): 155–165. doi:10.1080/00856408708723379. 
  37. Lafont, Jean-Marie ((May 16, 2002)). Maharaja Ranjit Singh: Lord of the Five Rivers (French Sources of Indian History Sources). USA: Oxford University Press. pp. 23–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195661117. {{cite book}}: Check date values in: |date= (help)
  38. 38.0 38.1 38.2 Dutt, Amitava; Surinder Devgun (1977-09-23). "Diffusion of Sikhism and recent migration patterns of Sikhs in India". GeoJournal 1 (5): 81–89. doi:10.1007/BF00704966. பன்னாட்டுத் தர தொடர் எண்:1572-9893. http://www.springerlink.com/content/p726g4t656018333/. பார்த்த நாள்: 2008-04-04. 
  39. Lukas, J. Anthony (March 20, 1966). "Hindu vs. Sikh: Why the Killing". The New York Times: pp. 209. http://select.nytimes.com/gst/abstract.html?res=F10916F73D5C15768FDDA90A94DB405B868AF1D3. 
  40. Telford, Hamish (November 1992). "The Political Economy of Punjab: Creating Space for Sikh Militancy". Asian Survey 32 (11): 969–987. doi:10.1525/as.1992.32.11.00p0215k. 
  41. 41.0 41.1 Frank, Katherine (January 7, 2002). Indira: The Life of Indira Nehru Gandhi. Houghton Mifflin. pp. 312–327. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 039573097X.
  42. 42.0 42.1 Pace, Eric (November 1, 1984). "Assassination in India: Sikhs at the center of the drama; Sikh separation dates back to '47". The New York Times: pp. 24. http://select.nytimes.com/gst/abstract.html?res=F20711FF385D0C728CDDA80994DC484D81. 
  43. Peer, Basharat (May 9, 2001). "Anti-Sikh riots a pogrom: Khushwant". News Report. Rediff. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  44. Anantanand Rambachan. "The Co-existence of Violence and Non-Violence in Hinduism" (PDF). The Ecumenical Review 55: 2003. http://www.wou.edu/~khes/geog451/hindu_violence.pdf. பார்த்த நாள்: 2008-04-04. 
  45. Pike, John (2005-04-27). "Military: Sikhs in Punjab". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.{{cite web}}: CS1 maint: date and year (link)
  46. Amor, Abdelfattah (1997). UNHR Documents on India. Commission on Human Rights resolution 1996/23: Commission on Human Rights, 53rd Session. pp. 1–22.{{cite book}}: CS1 maint: location (link)
  47. "CIA Factbook". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  48. "Breakdown of Indian Sikh population by Indian States/Union territories". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  49. "Sikhism". Encyclopædia Britannica. (2007). Encyclopedia Britannica. http://www.britannica.com/eb/article-253167/Sikhism.+அணுகப்பட்டது 2008-04-04. 
  50. 50.0 50.1 [70]
  51. Moliner, Christine (2006). "Sikhs in France". Migration Patterns - Workshop on Indian Migration. Ecole des Hautes Etudes en Sciences Sociales (EHESS): Laboratoire d’Anthropologie Urbaine/CNRS. pp. abstract. {{cite book}}: Unknown parameter |nopp= ignored (help)
  52. Ciprani, Ralph (2006-05-14). "Sikh Storia e immigrazione - The Sikhs: History and Immigration". International Sociology 21: 474–476. doi:10.1177/026858090602100331. http://iss.sagepub.com/cgi/reprint/21/3/474. பார்த்த நாள்: 2008-04-04. 
  53. IANS (2004-09-15). "Now, Sikhs do a Canada in Italy". NRIinternet. http://www.nriinternet.com/EUROPE/ITALY/2004/111604Gurdwara.htm. பார்த்த நாள்: 2008-04-04. 
  54. Singh, Kulwinder (2007-08-11). "Italy may open VISA office in Chandigarh very soon". NRIinternet. http://www.nriinternet.com/EUROPE/ITALY/2007/0701_Visa_office_in_Chandigarh.htm. பார்த்த நாள்: 2008-04-04. 
  55. "Proportion and growth rate of population by religious communities, India, 1961–2001" (PDF). Office of the Registrar General, India. CensusIndia. 2004-09-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  56. "First Asian-American Congressman Gets His Own Post Office". Pacific News Service. Pacific News Alliance. 2005-02-21. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  57. "list of all government ministers". 10 Downing Street. directgov. 2007-08-29. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  58. Kundu, Apurba (Spring, 1994). "The Indian Armed Forces' Sikh and Non-Sikh Officers' Opinions of Operation Blue Star". Pacific Affairs 67 (1): 46–69. doi:10.2307/2760119. http://links.jstor.org/sici?sici=0030-851X(199421)67%3A1%3C46%3ATIAFSA%3E2.0.CO%3B2-8. பார்த்த நாள்: 2008-04-04. 
  59. "After partition: India, Pakistan, Bangladesh". BBC In Depth. BBC News. 2007-08-08. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  60. "Sikh Regiment". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  61. 61.0 61.1 "Excerpts from British High Commissioner Michael Arthur, talk". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  62. "History of Sikh gallantry". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  63. Pillarisetti, Jagan. "Marshal of the Air Force Arjan Singh". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  64. Rayment, Sean (2007-06-24). "Sikh regiment dumped over 'racism' fears". Telegraph. http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=/news/2007/06/24/nsikh124.xml. 
  65. "World Bank loan for India farmers". BBC NEWS. 2007-06-27. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  66. "Agriculture and Allied Sector". Economy and Infrastructure. Punjab State. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  67. "From famine to plenty, from humiliation to dignity". Good News India. 2002. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  68. "Welcome to Official Web site of Punjab, India". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  69. "India's "breadbasket" aims to be new IT hotspot". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  70. "Where Punjab Leads". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  71. "The Green Revolution". Agriculture. Punjab State. 2004. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  72. Ishtiaq, Ahmad (February 8, 2005). "West and East Punjab agriculture — a comparison". Comment. Daily Times. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  73. Guus Geurts Studentnummer (5 March 2001) (MS Word). The cause and effects of the Green Revolution in Punjab (India) – critical analysis of "The Violence of the Green Revolution" by Vandana Shiva(1991). Katholieke Universiteit Nijmegen. http://www.guusgeurts.nl/inhoud/artikelen/EssayVandanaShiva.doc. 
  74. "#24 Malvinder & Shivinder Singh". India's Richest. Forbes.com. 2006-11-16. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  75. "Housing: Sikhs most likely to own their own homes". Religion. UK National Statistics. 11 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  76. "An Anatomy of Economic Inequality in the UK" (PDF). Report of the National Equality Panel. The London School of Economics - The Centre for Analysis of Social Exclusion. 2010-01-29. பார்க்கப்பட்ட நாள் 2010-02-01.
  77. "#25 Kartar Singh Thakral". Singapore's 40 Richest. Forbes.com. 2006-08-24. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  78. http://www.joshuaproject.net/peoples.php?rop3=113671
  79. "Memorial Gates Official Website". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  80. "UK Government Report on the memorial". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  81. "India's High Commission in London 'Sikhs pioneered Britain's multi-cultural society". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  82. Quote from General Sir Frank Messervy K.C.S.I, K.B.E., C.B., D.S.O. from "The Sikh Regiment in the Second World War" by Colonel F T Birdwood OBE. Pub. in Great Britain by Jarrold and Sons Ltd., Norwich (1953). Pp. 1–6. ASIN: B0007K5HJM
  83. http://www.allaboutsikhs.com/british/churchill-sir-winston-dp1.html
  84. "The Sunday Tribune - Books". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  85. "The battle of Saragarhi". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  86. 86.0 86.1 "Hate crime reports up in wake of terrorist attacks". US News. CNN. September 17, 2001. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  87. 87.0 87.1 "Sikhs urging action on faith hate". UK News. BBC News. 5 November 2006. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  88. "3HO Healthy Happy Holy Organization". About 3HO. 3HO.org. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  89. "Table of religious groups by alphabetical order". Adherents.com. 23 April 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  90. "The Magnificence of Sikh Architecture". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  91. "'Art and Culture of the Diaspora'". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  92. "Bhangra & Sikhi by Harjinder Singh". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  93. இந்திய அரசாங்க செய்தி
  94. அம்ரீந்தர் சிங் - மிகப்பெரிய பின்புலத்திலிருந்து வந்த எளிமையான அரசியல்வாதி

மேலும் படிக்க

  • வரலாற்றில் சீக்கியர்கள்: மில்லினியம் ஸ்டடி (The Sikhs In History: A Millennium Study) சங்கத் சிங், நோயல் குயின்டன் கிங். நியூ யார்க் 1995, ISBN 81-900650-2-5
  • சீக்கியர்களின் வரலாறு: தொகுதி 1( A History of the Sikhs: Volume 1:) 1469–1838 குஷ்வந்த் சிங் எழுதியது. ஆக்ஸ்போர்டு இந்தியா பேப்பர்பேக்ஸ் (ஜனவரி 13, 2005). ISBN 0-19-567308-5
  • பட்வாந்த் சிங் எழுதிய சீக்கியர்கள்(The Sikhs) . இமேஜ் (ஜூலை 17, 2001). ISBN 0-385-50206-0
  • பஞ்சாபின் சீக்கியர்கள் (The Sikhs of the Punjab) ஜே.எஸ்.க்ரெவல் எழுதியது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸால் வெளியிடப்பட்டது (அக்டோபர் 28, 1998). ISBN 0-521-63764-3.
  • சீக்கியர்கள்: வரலாறு, மதம் மற்றும் சமூகம் (The Sikhs: History, Religion, and Society) W.H. மெக்லியோட் எழுதியது. கொலம்பியா பல்கலைக்கழக பிரஸால் வெளியிடப்பட்டது (ஏப்ரல் 15, 1989). ISBN 0-231-06815-8
  • பரவி வாழும் சீக்கியர்கள்: குடிப்பெயர்ந்த சமூகத்தின் மரபு மற்றும் மாற்றம் (The Sikh Diaspora: Tradition and Change in an Immigrant Community) (Asian Americans — Reconceptualizing Culture, History, Politics) மைக்கெல் ஏஞ்சலோ எழுதியது. ரவுட்லெட்ஜால் வெளியிடப்பட்டது (செப்டம்பர் 1, 1997). ISBN 0-8153-2985-7.

வெளி இணைப்புகள்

 
இந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம்.


வார்ப்புரு:Sikhism

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்கியர்&oldid=523563" இலிருந்து மீள்விக்கப்பட்டது