பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பொன்னியின் செல்வன் 2 (Ponniyin Selvan: II), பி.எசு-2 என அறியப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது. என்பது 2023 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய தமிழ் காவிய, வரலாற்று சாகசப் படம் ஆகும். இப்படத்திற்கு இளங்கோ குமரவேல், ஜெயமோகன் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.

பொன்னியின் செல்வன்: இரண்டு
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்பு
திரைக்கதை
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுரவி வர்மன்
படத்தொகுப்புஏ. சிறிகர் பிரசாத்
கலையகம்
விநியோகம்ரெட் செயண்ட் திரைப்படங்கள்
வெளியீடு28 ஏப்ரல் 2023 (2023-04-28)
ஓட்டம்165 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்₹150 கோடி[2][3]

இப்படத்தை மணிரத்னம் மற்றும் சுபாசுகரன் அல்லிராசா மதராசு டாக்கீசு மற்றும் லைக்கா தயாரிப்பகம் இணைந்து தயாரித்துள்ள.

1954 ஆம் ஆண்டு கல்கி கிருசுணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் புதினதை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட இரண்டு திரைப்பட பாகங்களில் இது இரண்டாவது திரைப்படம் ஆகும். பொன்னியின் செல்வன் 1 (2022) படத்தின் நேரடித் தொடர்ச்சியாக இத்திரைப்படம் வெளியானது.

படத்தில் விக்ரம், அய்சுவர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிசா, ஆர். சரத்குமார், செயராம், பிரபு, அய்சுவர்யா இலட்சுமி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு, பிரகாசு ராசு, ரகுமான், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் என்பது சோழ இளவரசர் அருண்மொழிவர்மனைக் குறிக்கிறது. அவர் புகழ்பெற்ற பேரரசர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். இப்படம் முதலில் ஒரே படமாக எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் பகுதி 2 என ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இரு பகுதிகளும் சேர்த்து முதன்மை படப்பிடிப்பு 2019 திசம்பரில் தொடங்கியது. அதன் தொடர்ச்சிக்காக படமாக்கப்பட்ட கூடுதல் காட்சிகள் 2023 மார்ச்சில் முடிக்கப்பட்டன. படத்திற்கான இசையை ஏ. ஆர். ரகுமான் மேற்கொள்ள, ஒளிப்பதிவு ரவி வர்மன், படத்தொகுப்பு ஏ. சிறிகர் பிரசாத், அரங்க வடிவமைப்பு தோட்டா தரணியால் மேற்கொள்ளபட்டது.

பொன்னியின் செல்வன் 2 28 ஏப்ரல் 2023 அன்று உலகளவில் திரையரங்குகளில் நிலையான, அய்மேக்சு, 4டிஎக்சு மற்றும் எபிக் வடிவங்களில் வெளியிடப்பட்டது. இது விமர்சன ரீதியாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. விமர்சகர்கள் இயக்கம், இசை, காட்சிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பைப் பாராட்டினர்.[4]

கதை தொகு

இளம் நந்தினி மற்றும் ஆதித்த கரிகாலன் ஆகியோருக்கு இடையில் வளரும் காதலை இளவரசி குந்தவை, செம்பியன் மாதேவி ஆகியோரால் விரும்பப்படவில்லை. ஏனெனில் அநாதையான நந்தினியை அரச குடும்பத்தில் ஏற்க முடியாது என்பதால் அவள் அவர்களால் நிராகரிக்கப்படுகிறாள். நந்தினி பின்னர் பாண்டிய மன்னனான வீரபாண்டியனால் ஆதரிக்கபடுவதாக கூறப்படுகிறது.

தற்போது, முதலாம் இராஜராஜன் என்றழைக்கப்படும் பொன்னியின் செல்வன் மரணமடைந்ததாக வெளிவரும் செய்தி பேரரசை நிலைகுலையச் செய்கிறது. பார்த்திபேந்திர பல்லவன் நந்தினியை கடற்கரையில் சந்திக்கிறான். மேலும் பேரரசின் எதிர்காலத்திற்காக ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்கு அழைத்துவருமாறு அவனை நந்தினி தவறாக வழிநடத்துகிறாள். பாண்டிய ஆபத்துதவிகளான ரவிதாசனும் மற்ற உறுப்பினர்களும் பொன்னியின் செல்வன் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றனர்.

வல்லவரையன் வந்தியத்தேவனும் பூங்குழலியும் உயிர் பிழைத்து கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் உள்ள பொன்னியின் செல்வனுடன் உள்ளனர். கடலில் மூழ்கியதில் இருந்து 'ஊமை ராணியால் பொன்னியின் செல்வன் காப்பாற்றப்பட்டதை நினைவு கூர்கின்றனர். அவர்கள் ஆழ்வார்க்கடியான் நம்பி மற்றும் சேந்தன் அமுதன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. பொன்னியின் செல்வனுக்கு நாகப்பட்டினத்தில் உள்ள பௌத்த துறவிகளிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஆழ்வார்க்கடியான் பரிந்துரைக்கிறார். ரவிதாசனும் அவனது சக ஆபத்துதவிகளும் நெருங்கி வருவதை அவர்கள் கவனிக்கிறார்கள். எனவே, வந்தியத்தேவன் அவர்களை திசைதிருப்பி அழைத்துச் சென்று பொன்னியின் செல்வனைக் காப்பாற்றுகிறான். இதற்கிடையில், மதுராந்தகன் தன்னை அரியணைக்கு வாரிசாகப் பிரகடனப்படுத்திக் கொள்கிறான். மேலும் அவன் காளாமுகர்களான சிவனடியார்களின் ஆதரவைப் பெறுகிறான். மேலும் கொத்திகா, இராட்டிரகூட மன்னருடன் நட்பு கொள்கிறான். முன்பு நடந்த ஒரு போரில் ஆதித்த கரிகாலனால் தோற்கடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக இராட்டிரகூட மன்னன் மதுராந்தகனுடன் கூட்டு சேரவும், தன் மகளை அவனுக்கு திருமணம் செய்து கொடுத்து உறவை பலப்படுத்திக்கொள்ளவும் முடிவெடுக்கிறான்.

நந்தினியும், ரவிதாசனும் அடக்கிய சதிகார்கள் ஒரே நேரத்தில் ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர், பொன்னியின் செல்வன் ஆகியோரைக் கொல்ல சதி செய்கிறனர். மேலும் ஆதித்த கரிகாலனை கடம்பூரில் கொல்ல திட்டமிட்டுள்ளதாக நந்தினி அவர்களிடம் கூறுகிறாள். அங்கு ரவிதாசன் குழுவினரிடம் பிடிபட்ட வந்தியத்தேவன், சுயநினைவில்லாமல் இருப்பது போல் நடித்து, அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கிறான். பின்னர் அவனிடம் வரும் நந்தினியிடம் ஊமை ராணியைப் பார்த்ததாக தெரிவிக்கிறான். அவர் நந்தினியைப் போலவே இருந்ததையும் கூறுகிறான். பதிலுக்கு, நந்தினி வந்தியத்தேவனை மரணத்திலிருந்து விடுவிக்கிறாள். நம்பி மாறுவேடமிட்டு வந்து வந்தியத்தேவனைச் சந்திக்கிறார். வந்தியத் தேவன் குந்தவையைச் சந்திக்க விரைந்து சென்று பொன்னியின் செல்வன் உயிருடன் இருப்பதை அவளுக்குத் தெரிவிக்கிறான். அவள் அவன் மீது தனக்குள்ள ஈர்ப்பை வெளிப்படுத்துகிறாள். இதற்கிடையில் பொன்னியின் செல்வன் உயிருடன் இருப்பதை ஆழ்வார்கடியான் ஆதித்த கரிகாலனிடம் தெரிவிக்கிறார். குந்தவை, ஆதித்த கரிகாலன் ஆகிய இருவரும் பொன்னியின் செல்வன் குணமடைந்து தங்கியுள்ள நாகை பௌத்தவிகாரைக்கு விரைகின்றனர். ஆதித்த கரிகாலனை கடம்பூரில் வைத்து படுகொலை செய்ய நந்தினி திட்டமிட்டுள்ளாள் என்று வந்தியத்தேவன் அவனிடம் தெரிவிக்கிறான். மேலும் அங்கு செல்லவிருக்கும் முடிவை கைவிடும்படி அவனிடம் கோரிக்கை விடுக்கிறான். ஆனால் அவனது வேண்டுகோளை நிராகரித்துவிட்டு வந்தியத்தேவனுக்கு தன்னைப் பின் தொடர வேண்டாம் என்று கட்டளையிடுகிறான். பொன்னியின் செல்வன் குந்தவையிடம் தன்னை கடலில் இருந்து மீட்ட ஊமை ராணி நந்தினியை ஒத்திருப்பதாக கூறுகிறான். நந்தினியை முதன்முதலாகப் பார்த்த தன் தந்தை அதிர்ச்சி அடைந்ததை நினைத்து, ஊமை ராணி யார் என்பது அவருக்குத் தெரியுமோ என்று குந்தவை சந்தேகிக்கிறாள்.

அவள் தஞ்சாவூருக்கு பயணம் செய்து, சுந்தர சோழரை எதிர்கொண்டு ஊமை ராணி குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கிறாள். அவர் இளைஞனாக இருந்தபோது ஒரு சமயம் பாண்டியர்களால் துரத்தப்பட்டபோது இலங்கைப் பகுதியில் இருந்த ஒரு தீவில் மந்தாகினியை (ஊமை ராணி) சந்தித்ததையும் அவளுடன் உறவில் சில நாட்கள் இருந்ததையும் அவளிடம் கூறுகிறார். சோழர்களின் கப்பல் வந்து அவரை மீட்க வந்த நிலையில் மந்தாகினியை திரும்பவந்து அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு நாடு வந்து சேர்ந்ததையும் குறிப்பிடுகிறார். தான் இராச்சியத்திற்குத் திரும்பி வந்த பிறகு வானவன் மதேவியை மணக்கும் சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு அவர் அவளைத் திரும்பப் அழைத்துவர முயன்றார், ஆனால் அவள் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக செய்தி கிடைத்தது என்று சுந்தர சோழர் குறிப்பிடுகிறார். நந்தினி தன் ஒன்றுவிட்ட சகோதரியாக இருக்கலாம் என்று குந்தவை சந்தேகிக்கிறாள். மேலும் இது குறித்து செம்பியன் மகாதேவியிடம் உரையாடுகிறாள். சுந்தர சோழர் வானவன் மகாதேவியை மணந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மந்தாகினி கர்ப்பினியாக தஞ்சைக்கு வந்ததாக குந்தவையிடம் கூறுகிறார். அதனால் நந்தினி குந்தவையின் ஒன்றுவிட்ட சகோதரி அல்ல என்பதை புரியவைத்து, அவளை ஆசுவாசப்படுத்துகிறார். இதற்கிடையில், பாண்டிய ஆபத்துதவிகள் பொன்னியின் செல்வன் இருப்பதை அறிந்து அவரை விகாரையில் கொலை செய்ய சதி செய்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் அவர்களின் முயற்சிகளை முறியடிக்கிறார். பூங்குழலியும் சேந்தன் அமுதனும் தஞ்சாவூர் கோட்டைக்குள் நுழைகிறார்கள், பாண்டிய ஆபத்துதவிகளும் தஞ்சாவூர் கோட்டைக்குள் நுழைகின்றனர். மந்தாகினி இதைப் பார்த்து அவர்களைப் பின்தொடர்கிறார். பூங்குழலி மந்தாகினியையும் பாண்டிய ஆபத்துதவிகளையும் பார்க்கிறாள். வானதியின் மாமா பெரிய வேளாளர் பொன்னியின் செல்வனின் மரணத்திற்காக கோட்டையை முற்றுகையிட்டு கோட்டைத் தளபதியான சின்ன பழுவேட்டரையருடன் மோதலில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் மதுராந்தகன் கோட்டையிலிருந்து சுரங்கப்பாதை வழியாக தப்பித்து இராட்டிரகூடர்களிடம் தஞ்சம் புகுகிறான். பொன்னியின் செல்வன் வானதியுடன் கோட்டைக்கு வந்து, இரு படைகளுக்கும் இடையில் இடையே சமாதானத்தை ஏற்படுத்துகிறார்.

பூங்குழலி, பாண்டியர்களைப் பார்த்ததும், சின்ன பழுவேட்டரையரிடம் அவர்களின் ஊடுருவல் குறித்து எச்சரிக்கிறாள். இதற்கிடையில், கடம்பூரில், பெரிய பழுவேட்டரையரும், பிற சிற்றரசர்களும் ஆதித்த கரிகலனுக்கும் மதுராந்தகனுக்கும் இடையே இராச்சியத்தை இரண்டாக பிரிக்க முன்மொழிகின்றனர். ஆனால் ஆதித்த கரிகாலன் அதை எதிர்த்து, மதுராந்தகனுக்கே இராச்சியத்தை விட்டுக் கொடுத்துவிட ஒப்புக்கொள்கிறான். பெரிய பழுவேட்டரையர் மதுராந்தகனிடம் செய்திகளை தெரிவிப்பதற்காக தஞ்சாவூருக்குச் செல்கிறார். ஆனால் இலங்கையில் பாண்டியர்களுக்கு உதவிய படகோட்ட வீரரான கருத்திருமன், கடம்பூரில் ஆதித்த கரிகாலனைக் கொல்ல நந்தினியும், பாண்டியர்களின் ஆட்களும் சதித்திட்டம் தீட்டியுள்ளதை அவருக்குத் தெரிவிக்கிறான். ஆதித்த கரிகாலனைக் காப்பாற்றும் நோக்கத்தில், அவன் மீண்டும் அவர் கடம்பூருக்கு விரைகிறார். அதே நேரத்தில் பாண்டியர்களும் ஒரு சுரங்கப்பாதை வழியாக கடம்பூரில் ஊடுருவுகிறார்கள். ஆதித்த கரிகாலனைக் காப்பாற்ற வந்தியத்தேவனும் செல்கிறான். மந்தாகினி சுந்தர சோழரை நோக்கிச் செல்கிறாள். ஆனால் அவரை நோக்கி எய்த அம்பு பாய்ந்து அவள் இறந்துவிடுகிறாள்; துக்கத்தால் தந்தை அலறுவதைக் கேட்ட பொன்னியின் செல்வன், அங்கு வந்து பாண்டியக் கொலையாளிகளை அடக்கி அவர்களைக் கொல்கிறான். கடம்பூரில், ஆதித்த கரிகாலன் நந்தினியைச் சந்தித்து, அவளிடம் தன்னைக் கொல்லும்படி வேண்டுகிறான். அவள் அவனைக் குத்தமுடியாமல் தடுமாறுகிறாள். இருவரும் கத்தியைப் பிடித்தபடி தடுமாறும் நிலையில், நந்தினியின் கைகளில் இருந்த கத்தியால் அவன் குத்தப்பட்டு கொல்லப்படுகிறான். பாண்டியர்கள் அவளை கடம்பூரில் இருந்து பத்திரமாக வெளியேற்றுகின்றனர். இதற்கிடையில், ஆதித்த கரிகாலனை மீட்க முயலும் வந்தியத்தேவன் மயக்கமுற்றுவிடுகிறான். பெரிய பழுவேட்டரையரை பாண்டியர்கள் மயக்கத்தில் ஆழ்த்தி தங்களுடனே அவரை கொண்டு செல்கின்றனர்.

சுயநினைவு பெற்ற பிறகு, வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனின் கொலையுண்டு கிடப்பதைக் கண்டு வருந்துகிறான். மேலும் அவன சடலத்தை பார்த்திபேந்திர பல்லவன் மற்றும் பிற சிற்றரசர்களிடம் கொண்டு செல்கிறான். அவர்கள் அவனே கொலையாளி என்று குற்றம் சாட்டுகின்றனர். வந்தியத்தேவன் கைது செய்யப்படுகிறான். ஆதித்த கரிகாலனின் சடலம் தஞ்சாவூருக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு சுந்தர சோழரும், அவரது குடும்பத்தினரும், பொதுமக்களும் அவனது மரணம் குறித்து புலம்புகின்றனர். ஒரு கப்பலில், கொண்டாடத்தில் ஈடுபட நிலையில் பாண்டிய ஆபத்துதவிகள் உள்ளனர். அவர்களால் பிடிக்கப்பட்டிருக்கும் கருத்திருமன், அமைதியற்று உள்ள நத்தினியிடம் வீரபாண்டியனே அவளின் தந்தை என்பதை வெளிப்படுத்துகிறான். அவர் நந்தினியை வளர்க்க அதுவே காரணம் என்கிறான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தன் மீது உண்மையான பாசத்தையும் அன்பையும் காட்டியவர் பெரிய பழுவேட்டரையரை என்று நினைத்த நந்தினி, குற்ற உணர்ச்சியில் பொன்னிக்குள் மூழ்கி தன் முடிவைத் தேடிக்கொள்கிறாள். நம்பி சின்ன பழுவேட்டரையரிடம் பெரிய பழுவேட்டரையர் இருக்கும் இடத்தைக் கூறுகிறார், அதன் விளைவாக அவர் பாண்டியர்களிடமிருந்து விடுவிக்கப்படுகிறார். சுந்தர சோழரின் அரசவையில் வந்தியத்தேவன் விசாரணையில் இருக்கும் போது, பெரிய பழுவேட்டரையர் அங்கு வந்து உண்மையை வெளிப்படுத்துகிறார். இதற்கிடையில், பார்த்திவேந்திரன், ஆதித்த கரிகாலனின் மரணத்திற்குப் பின்னணியில் பொன்னியின் செல்வனே மூளையாக இருந்திதாக கருதி, ஆதித்த கரிகாலனின் மரணத்திற்குப் பழிவாங்க சோழப் பேரரசின் மீது படையெடுப்பதற்காக இராட்டிரகூடர்கள் மற்றும் பிற போட்டி நாடுகளுடன் நட்பு கொள்கிறான். சுந்தர சோழருக்கு போர் குறித்த செய்தி தெரிவிக்கப்படுகிறது. போரில் பொன்னியின் செல்வனுக்கு உதவியாக வந்தியத்தேவனை செல்ல அனுமதிக்கிறார். மதுராந்தகன் தனது தாய்நாட்டிற்கு எதிராகப் போரிட மறுத்து, பொன்னியின் செல்வனுடன் இணைந்து போரில் அவனுக்கு உதவுகிறான். சோழர்கள் வெற்றி பெறுகிறார்கள். பின்னர், சுந்தர சோழர் தனது ஒரே மகனுக்கு ஆதரவாக அரியணையைத் துறக்க முடிவு செய்கிறார். ஆனால் முடிசூட்டு நாளில், பொன்னியின் செல்வன் மதுராந்தகனுக்கு முடிசூட்ட முன்மொழிகிறார். அவர் "உத்தம சோழன்" என்ற பெயர் பெறுகிறா். உத்தம சோழனின் ஆட்சியின் கீழ் வந்தியத்தேவனும் பொன்னியின் செல்வனும் பல போர் வெற்றிகளுக்குத் தலைமை தாங்கினர் என்றும், அவரது மரணத்திற்குப் பிறகு, பாண்டிய ஆபத்துதவிகள் சிறைபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும்போது பொன்னியின் செல்வன் "ராஜராஜ சோழன்" என்ற பெயரில் அரியணையைப் பெற்றார் என்பதை இக்கதை முடிகிறது.

நடிகர்கள் தொகு

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படத்தின் கதைக்கு பின்னணி குரலை முறையே கமல்ஹாசன் (முன்னோட்டம் மற்றும் படம்), அனில் கபூர் (முன்னோட்டம்)/அஜய் தேவ்கன் (திரைப்படம்), ராணா டகுபதி (முன்னோட்டம்)/சிரஞ்சீவி (திரைப்படம்), பிருத்விராஜ் சுகுமாரன் (முன்னோட்டம்)/மம்முட்டி (திரைப்படம்) மற்றும் ஜெயந்த் கைகினி (முன்னோட்டம்)/உபேந்திரா (திரைப்படம்) ஆகியோர் கொடுத்தனர்.[5]

தயாரிப்பு தொகு

பொன்னியின் செல்வன் முதலில் 500 கோடி ரூபாய் செலவில் ஒரே படமாகத் திட்டமிடப்பட்டது.[6][7] 2019 திசம்பரில் முதன்மை படப்பிடிப்பு எடுத்தல் தொடங்கிய பிறகு, படம் இரண்டு பாகங்களாக பிரிக்கப்படும் என்று 2020 சனவரியில் தெரிவிக்கப்பட்டது.[8] இதை ஏப்ரலில் மணிரத்னம் உறுதிப்படுத்தினார்.[9][10] இரண்டு பாகங்களும் படமாக்கப்படவிருந்தன பேக்-டு-பேக், சில ஆதாரங்கள் ₹500 கோடி மதிப்பீட்டில் இரண்டு பாகங்களாகப் பரவியிருப்பதாகத் தெரிவிக்கின்றன.[11][12] செப்டம்பர் 2021 ஆம் ஆண்டில், முதல் பாகத்தின் தயாரிப்பிலும், இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளின் படப்பிடிப்பு எஞ்சி இருந்தன.[13] இதன் ஒரு பகுதியானது 2022 மார்ச்சில் நடந்தது. ரவி மற்றும் கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சி மும்பையில் படமாக்கப்பட்டது.[14] 'பொன்னியின் செல்வன்: பகுதி இரண்டு' படத்தின் மீதமுள்ள ஒட்டுவேலைகள் 2023 சனவரியில் படமாக்கப்பட்டன.[15]

இசை தொகு

திரைப்பட இசையை மணிரத்னத்தின் வழக்கமான இசையமைப்பாளரான ஏ. ஆர். ரகுமான் மேற்கொண்டார். படத்தின் இசை உரிமையை டிப்சு நிறுவனம் வாங்கியுள்ளது.

படமானது ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த ஏழு பாடல்களைக் கொண்டுள்ளது. முதல், "ஆகா நாகா", 20 மார்ச் 2023 அன்று தனிப்பாடலாக வெளியிடப்பட்டது.[16] மீதமுள்ள பாடல்கள் 29 மார்ச் 2023 அன்று முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டன.[17] தமிழ் பதிப்பிற்கான பாடல்களை இளங்கோ கிருசுணன் எழுதியுள்ளார்.[18] இதில் சங்கம்-இலக்கியக் கவிஞர் குடவாயில் கீரத்தனாரின் பகுதிகள் அடங்கும். அதேசமயம் "ஆழி மழை கண்ணா" ஆண்டாள் திருப்பாவை மற்றும் "சிவோகம்" ஆதி சங்கரர்' பாடலில் இருந்து சிலபகுதிகள் இடம்பெற்றன. ஆத்ம சதகம் தமிழ் பதிப்பில் உள்ளது. குல்சார், அனந்த ஸ்ரீராம், சந்திரபோஸ், ராமஜோகய்யா சாஸ்திரி, ரஃபீக் அகமது மற்றும் ஜெயந்த் கைகினி ஆகியோர் முறையே ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

வெளிவருதல் தொகு

திரையரங்கு தொகு

பொன்னியின் செல்வன் 2 பல வடிவங்களில் 28 ஏப்ரல் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[19][20] 4DX வடிவத்தில் வெளியான முதல் தென்னிந்தியத் திரைப்படம் இதுவாகும்.[21]

விநியோகம் தொகு

படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் செயண்ட் நிறுவனம் வாங்கியது.[22] ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா விநியோக உரிமையை தில் ராசுவின் சிறி வெங்கடேசுவரா கிரியேசன்சு பெற்றுள்ளது.[23][24] படத்தின் கேரளா விநியோக உரிமையை கோகுலம் கோபாலனின் சீறீ கோகுலம் மூவீசு கைப்பற்றியது.[25] வட இந்தியா விநியோக உரிமையை பென் இந்தியா லிமிடெட் வாங்கியது.[26] லைகா தயாரிப்பகம் வெளிநாட்டு விநியோக உரிமையைப் பெற்றது.

வீட்டு ஊடகம் தொகு

படத்தின் எண்ணியல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ 125 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.[27] அதேபோல், செயற்கைக் கோள் வெளியீட்டு உரிமை சன் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.[28]

வரவேற்பு தொகு

விமர்சன பதில் தொகு

பொன்னியின் செல்வன் 2 விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[29]

இந்துசுதான் டைம்சு விமர்சகரான அரிசரண் புடிபெடி, "குடலைப் பிழியும் நாடகத்தைத் தவிர, வாழ்க்கையை விட பெரிய பார்வை அனுபவத்தை வழங்குவதில் பொன்னியின் செல்வன்: பகுதி 2-ஐ உண்மையில் உயர்த்தும் நேர்த்தியானது" என்று எழுதினார்.[30] டைம்சு ஆஃப் இந்தியா இன் எம். சுகந்த், 5-ல் 3.5 நட்சத்திரங்களை அளித்து, "பட இறுதி வரை, இந்த அழிந்த காதல்தான் இந்தக் கதையில் பதற்றத்தைத் தக்கவைத்து, கதாப்பாத்திரங்களை முடிவெடுக்கத் தூண்டுகிறது. தொலைநோக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்".[31] Rediff.com லிருந்து சுகன்யா வர்மா, 5ல் 3.5 நட்சத்திரங்களைக் கொடுத்து, "ரத்னத்தின் காட்சி புனைகதை மற்றும் கற்பனையில் மூழ்கியிருக்கலாம். ஆனால் அதன் உரிமையும் சந்தர்ப்பவாதமும் எப்போதும் போல் உண்மையானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது" என்று கூறினார்.[32]

இந்தியா டுடே இலிருந்து ஒரு விமர்சகர் 5 நட்சத்திரங்களுக்கு 3 நட்சத்திரங்களைக் கொடுத்து படத்தைப் பாராட்டினார்.[33] Scroll.in இன் விமர்சகர் நந்தினி ராம்நாத் திரைப்படம் "மெசுமரைசிங் காட்சிகள் மற்றும் மறக்கமுடியாத கதாபாத்திரங்கள்" என்று குறிப்பிட்டார்.[34] இருப்பினும், நியூஸ்18 இந்தியா கலவையான விமர்சனங்களை அளித்தது.[35] 123தெலுங்கு திரைப்படத்தை 5க்கு 3 என மதிப்பிட்டு, "நீங்கள் பீரியட் டிராமாக்களைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் அதைக் கொடுங்கள்" என்று எழுதினார்.[36] OTTplay ன் மனோஜ் குமார் 5 இல் 3 ஐக் கொடுத்து, "இந்த காவிய நாவலை பெரிய திரையில் மொழிபெயர்ப்பதில் மணிரத்னம் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார்" என்று கூறினார்.[37]

மேற்கோள்கள் தொகு

  1. "Ponniyin Selvan 2 (2023)". Irish Film Classification Office. Archived from the original on 28 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
  2. "Vikram, Karthi and Jayam Ravi starrer Ponniyin Selvan 2 box office collection Day 3: Mani Ratnam's film grosses Rs 150 crore worldwide". India Today. 30 April 2023. Archived from the original on 1 May 2023. பார்க்கப்பட்ட நாள் 1 May 2023.
  3. "Vikram, Karthi and Jayam Ravi starrer Ponniyin Selvan 2 box office day 3 collection: Mani Ratnam film grosses over ₹150 cr worldwide, makes $3.6 million in US". May 2023. Archived from the original on 1 May 2023. பார்க்கப்பட்ட நாள் 1 May 2023.
  4. "'Ponniyin Selvan 2' box office collection day 2: Mani Ratnam's film sees a dip; could not beat Vijay's 'Varisu'". The Times of India இம் மூலத்தில் இருந்து 30 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230430105355/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/box%20office/ponniyin-selvan-2-box-office-collection-day-2-mani-ratnams-film-sees-a-dip-could-not-beat-vijays-varisu/articleshow/99882717.cms?from=mdr. 
  5. "Ponniyin Selvan: Kamal Haasan, Anil Kapoor, Rana Daggubati lend voices for trailers of Mani Ratnam's film". Pinkvilla. 7 September 2022. Archived from the original on 3 October 2022. பார்க்கப்பட்ட நாள் 1 October 2022.
  6. "Telangana folk, tribal arts in Mani Ratnam's movie". Telangana Today. 10 February 2021. Archived from the original on 10 February 2021. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
  7. "70% of Ponniyin Selvan shoot was completed". The Times of India. 13 April 2021. Archived from the original on 13 April 2021. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
  8. Rajaraman, Kaushik (5 January 2020). "Mani's Ponniyin Selvan to release in two parts". DT Next. Archived from the original on 30 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
  9. "Ponniyin Selvan will be made in two parts, confirms Mani Ratnam". India Today. 15 April 2020. Archived from the original on 1 December 2020. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
  10. "Ponniyin Selvan to be a two-parter, Mani Ratnam confirms". Cinema Express. 14 April 2020. Archived from the original on 1 December 2020. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
  11. "Mani Ratnam's 'Ponniyin Selvan' OTT rights and release date details revealed!". Indiaglitz. 29 April 2022. Archived from the original on 29 April 2022. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
  12. "Mani Ratnam's Ponniyin Selvan: Rs 125 Cr Pre-release!". India Herald. Archived from the original on 8 July 2022. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
  13. "Mani Ratnam wraps 'Ponniyin Selvan' shoot". The New Indian Express. 18 September 2021. Archived from the original on 18 September 2021. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023.
  14. "Karthi and Jayam Ravi travel to Mumbai for 'Ponniyin Selvan' patch shoot". The Times of India. 18 March 2022 இம் மூலத்தில் இருந்து 6 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220706101957/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/karthi-and-jayam-ravi-travel-to-mumbai-for-ponniyin-selvan-patch-shoot/articleshow/90306809.cms. 
  15. "Mani Ratnam's 'Ponniyin Selvan 2' patchwork to be shot in January". The Times of India. 9 December 2022 இம் மூலத்தில் இருந்து 15 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221215025424/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/mani-ratnams-ponniyin-selvan-2-patchwork-to-be-shot-in-january/articleshow/96109863.cms?from=mdr. 
  16. "Aga Naga: The much-awaited song from Ponniyin Selvan is here and it is worth the wait". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-20. Archived from the original on 31 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-30.
  17. "Ponniyin Selvan 2 trailer and audio launch: A stunning Aishwarya Rai Bachchan thanks fans for their 'enthusiasm and love'. Watch". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-29. Archived from the original on 6 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-30.
  18. "Royal debut: Ilango Krishnan explores lyric writing with Mani Rathnam's Ponniyin Selvan". The New Indian Express. Archived from the original on 20 August 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-04-30.
  19. "Mani Ratnam's 'Ponniyin Selvan: 2' to release on April 28, 2023". The Hindu. 28 December 2022. Archived from the original on 12 March 2023. பார்க்கப்பட்ட நாள் 12 March 2023.
  20. "Ponniyin Selvan 2: Vikram And Aishwarya Rai Bachchan's Film Gets A Release Date". NDTV. 28 December 2022. Archived from the original on 8 April 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2022.
  21. "Mani Ratnam's Ponniyin Selvan: 2 1st South Indian Movie To Have 4DX Release". News18. 2023-04-12. Archived from the original on 14 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
  22. "Ponniyin Selvan II Tamil Nadu theatrical rights sold". Cinema Express. 27 March 2023. Archived from the original on 29 March 2023. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
  23. "Ponniyin Selvan release date to be announced soon". The Times of India. 25 February 2022 இம் மூலத்தில் இருந்து 9 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220309074807/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ponniyin-selvan-release-date-to-be-announced-soon/articleshow/89825684.cms. 
  24. "Dil Raju to present Mani Ratnam's most-awaited multi-starrer project Ponniyin Selvan in Telugu". OTT Play. Archived from the original on 21 August 2022. பார்க்கப்பட்ட நாள் 21 August 2022.
  25. "Ponniyin Selvan: Sree Gokulam Movies Acquires Distribution Rights In Kerala". News 18. 23 August 2022. Archived from the original on 23 August 2022. பார்க்கப்பட்ட நாள் 23 August 2022.
  26. "Pen to distribute PS-I – Hindi in Northern territories". Cinema Express. Archived from the original on 13 September 2022. பார்க்கப்பட்ட நாள் 13 September 2022.
  27. "Amazon Prime Video Bags OTT Rights For Mani Ratnam's Ponniyin Selvan 1". News18. 29 April 2022. Archived from the original on 30 June 2022. பார்க்கப்பட்ட நாள் 30 June 2022.
  28. K., Janani (September 12, 2022). "Mani Ratnam's Ponniyin Selvan Part 1, 2 sold for Rs 125 crore to Amazon Prime Video: Reports". India Today. Archived from the original on 12 September 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-09-12.
  29. "Ponniyin Selvan 2: Vikram, Trisha, Jayaram, Sobhita watch the film with audience". OTTPlay (in ஆங்கிலம்). 28 April 2023. Archived from the original on 28 April 2023. பார்க்கப்பட்ட நாள் 28 April 2023.
  30. "Ponniyin Selvan 2 review: Aishwarya Rai is unbelievably good in Mani Ratnam's terrific epic". Hindustan Times. 2023-04-28. பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
  31. "Ponniyin Selvan: Part 2 Movie Review : Ponniyin Selvan 2 is a Vikram, Aishwarya Rai show". The Times of India இம் மூலத்தில் இருந்து 28 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230428130836/https://pandg.tapad.com/tag?gdpr=%24%7Bgdpr%7D&gdpr_consent=%24%7Bgdpr_consent%7D&referrer_url=&page_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fentertainment%2Ftamil%2Fmovie-reviews%2Fponniyin-selvan-part-2%2Fmovie-review%2F99838449.cms&owner=P%26G&bp_id=sunmedia&ch=&initiator=js&data=%7B%22category%22%3A%22Business%22%7D. 
  32. VERMA, SUKANYA. "Ponniyin Selvan: 2 Review: Spectacular, Sorrowful Conclusion". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
  33. "Ponniyin Selvan Part 2 Movie Review: Mani Ratnam delivers worthy adaptation, Karthi, Vikram and Aishwarya are a hit". India Today. Archived from the original on 28 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
  34. Ramnath, Nandini. "'Ponniyin Selvan Part 2' review: Mesmerising visuals and memorable characters". Scroll.in. Archived from the original on 28 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
  35. "Ponniyin Selvan 2 Review: Aishwarya Rai, Vikram Are Heart And Soul Of Mani Ratnam's Magnum Opus". News18 (in ஆங்கிலம்). 2023-04-28. Archived from the original on 28 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
  36. "Ponniyin Selvan 2 Telugu Movie Review". 123telugu. 2023-04-28. பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
  37. "Ponniyin Selvan 2 review: Vikram, Aishwarya Rai Bachchan steal the show". OTTplay. Archived from the original on 28 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னியின்_செல்வன்_2&oldid=3870206" இலிருந்து மீள்விக்கப்பட்டது