ஜாவர் சீதாராமன்
ஜாவர் சீதாராமன் (இறப்பு: 1971) தமிழ்ப் புதின எழுத்தாளரும், திரைப்படக் கதை, வசன எழுத்தாளரும், நடிகரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்புதொகு
திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட சீதாராமனின் தந்தை நடேச ஐயர் பிரபல வழக்குரைஞராக இருந்தவர். சீதாராமனும் சட்டம் படித்து எம்.ஏ., பி.எல்., பட்டமும் பெற்றார். ஆனாலும் அவர் அத்துறைக்குச் செல்லாமல் திரைப்படவுலகில் நுழைந்தார்.
திரைப்படத் துறையில்தொகு
1947 ஆம் ஆண்டு வெளிவந்த மிஸ் மாலினி என்னும் படத்தில் அறிமுகமானார். கே. ராம்நாத் இயக்கிய ஏழை படும் பாடு திரைப்படத்தில் "ஜாவர்" என்ற முரட்டுக் காவல்துறை அதிகாரி வேடத்தில் சீதாராமன் நடித்தார். அன்றில் இருந்து அவர் "ஜாவர்' சீதாராமன் எனப் பிரபலமானார்.
ஏவிஎம் தயாரித்த அந்த நாள் படத்தின் திரைக்கதை-வசனத்தை எழுதியதோடு, துப்பறியும் காவல்துறை அதிகாரியாக ஜாவர் சீதாராமன் நடித்தார். தொடர்ந்து ஏவிஎம் நிறுவனம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா, குழந்தையும் தெய்வமும், ராமு முதலிய படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார். இவை பெரும் வெற்றியும் பெற்றன.
வீனஸ் பிக்சர்சுக்காக "பிராஸ் பாட்டில்" என்னும் ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, பட்டணத்தில் பூதம் என்ற கற்பனைக் கதையை உருவாக்கினார். படம் வசூலில் வரலாறு படைத்தது.
எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்தும் கதை, வசனம் எழுதியுள்ளார்.
மேலும் நடிகைகள் வைஜெயந்திமாலா, பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி, தேவிகா, கே. ஆர். விஜயா, பாரதி, காஞ்சனா ஆகிய கதாநாயகிகளுடன் தந்தையாகவும் கௌரவ கதாபத்திரத்திலும் நடித்துள்ளார்.
எழுத்தாளராகதொகு
பிரபல வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதினார். குமுதத்தில் இவர் எழுதிய "மின்னல் மழை மோகினி', "உடல் பொருள் ஆனந்தி', "பணம் பெண் பாசம்', "நானே நான்" ஆகிய தொடர்கதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தமிழ்ப்படங்களில்தொகு
- மிஸ் மாலினி (1947) - நடிகர்
- சந்திரலேகா (1948) - நடிகர் (வீரசிம்மன் மெய் காப்பாளர்)
- என் கணவர் (1948) - நடிகர் சரோஜாவர்
- ஏழை படும் பாடு (1950) - நடிகர்
- மர்ம யோகி (1951) - நடிகர் [1]
- பணக்காரி (1953) - நடிகர் [2]
- மனோகரா (1954) - நடிகர் (சத்யசீலன்)
- அந்த நாள் (1954) - நடிகா் (சி.ஐ.டி அதிகாாி சிவானந்தம்), திரைக்கதை, வசனம்
- விடுதலை (1954) - நடிகா்
- செல்லப்பிள்ளை (1955) - நடிகா், திரைக்கதை [3]
- மணமகன் தேவை (1957) - நடிகா் (கல்லூரி தலைமை ஆசிரியர்)
- கன்னியின் சபதம் (1958) - நடிகர்
- வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) - நடிகர் (மேஜர் பேனர்மேன்)
- அதிசயப் பெண் (1959) - திரைக்கதை, வசனம்
- எங்கள் குலதேவி (1959) - நடிகா் (சந்தோசம்)
- குழந்தைகள் கண்ட குடியரசு (1960) நடிகர் - (மன்னர்)
- களத்தூர் கண்ணம்மா (1960) - நடிகா் (ஜமீன்தாா் சிங்காரம்), திரைக்கதை
- கைதி கண்ணாயிரம் (1960) - நடிகர் (காவல் அதிகாரி)
- பார்த்திபன் கனவு (1960) - நடிகர் (சிவாச்சாரியார்)
- ஆளுக்கொரு வீடு (1960) - நடிகர்
- குமார ராஜா (1961) - நடிகா்
- வளர் பிறை (1962) - கதை, திரைக்கதை
- ஆலயமணி (1962) - திரைக்கதை, வசனம்
- ஆனந்த ஜோதி (1963) - நடிகா் (சுந்தரம் சி.ஐ.டி காவல் அதிகாாி), கதை, திரைக்கதை
- வானம்பாடி (1963) - நடிகா் (டாக்டா் சிவசங்கா்)
- ஆண்டவன் கட்டளை (1964) - நடிகா் (கல்லூரி தலைமை ஆசிாியா்) திரைக்கதை, வசனம்
- கர்ணன் (1964) - நடிகா் (பீஷ்மர்)
- குழந்தையும் தெய்வமும் (1965) - திரைக்கதை
- ராமு (1966) - திரைக்கதை
- பட்டணத்தில் பூதம் (1967) - நடிகர் (பூதம்), வசனம்
- பட்டத்து ராணி (1967) - கதை, திரைக்கதை, வசனம்
- உயர்ந்த மனிதன் (1968) -திரைக்கதை, வசனம்
- என் தம்பி (1968) - நடிகா் (கருணாகர பூபதி)
- தங்கச் சுரங்கம் (1969) - நடிகர் (ஆரோக்கியசாமி)
- சிவந்த மண் (1969) - நடிகா் (மன்னா்)
உசாத்துணைதொகு
- ஜனரஞ்சக எழுத்தாளர்' ஜாவர் சீதாராமன், ஆர். கனகராஜ், தினமணி, சனவரி 22, 2012
மேற்கோள்கள்தொகு
- ↑ "Blast from the past - Marmayogi 1951". தி இந்து (14 March 2008).
- ↑ "Blast from the past -Panakkari 1953". தி இந்து (27 December 2008).
- ↑ "Blast from the past - Chella Pillai (1955)". தி இந்து (24 September 2009).