வி. என். சுந்தரம்
வி. என். சுந்தரம் (V. N. Sundaram, 1918 - 14 திசம்பர் 2009) தமிழக நாடக, திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார்.[1]
வி. என். சுந்தரம் | |
---|---|
பிறப்பு | 1918 |
பிறப்பிடம் | விசலூர், தஞ்சாவூர், இந்தியா |
இறப்பு | 14 திசம்பர் 1918 (அகவை 91) சென்னை, இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | பாடகர், நடிகர் |
தொடக்க வாழ்க்கைதொகு
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் விசலூர் என்ற ஊரில் சுந்தரம் பிறந்தார்.[2] இவரது இயற்பெயர் ஆலாசியசுந்தரம். சிறு வயதில் கோவில் விழாக்களில் நாதசுவர இசையை விரும்பிக் கேட்டு, இராகங்களை குரலில் ஒப்பிக்கும் வல்லமை படைத்தவர். தனது 12-ஆவது அகவையில் நாரத கான சபா என்ற நாடகக் கம்பனியில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். ஆனாலும், இவர் கம்பெனியின் உணவு ஒத்துக் கொள்ளாமல் ஆறு மாதங்களில் வெளியேறினார். பின்னர் மதுரை பால வினோத சங்கீத சபாவில் சேர்ந்து, யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையிடம் பயிற்சி பெற்றார். பாதுகா பட்டாபிசேகம் என்ற தனது மூன்றாவது நாடகத்திலேயே அரசன் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நாடக விளம்பரங்களில் சுருக்கம் கருதி இவரது பெயரை வி. என். சுந்தரம் என எழுதினார்கள். அப்பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.[1]
திரைப்படங்களில் நடிப்புதொகு
நாடகங்களில் சிறப்பாக நடித்துப் புகழ் பெற்றதால், திரைப்படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. 1935-இல் மார்க்கண்டேயா என்ற தனது முதலாவது திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.[3] இப்படத்தில் பாபநாசம் சிவன் வரிகளில் வாசஸ்பதி இராகத்தில் பராத் பரா என்ற இவர் பாடியப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து பட்டினத்தார் (1936) படத்தில் தண்டபாணி தேசிகருக்கு மகன் மருதவாணனாக நடித்தார்.[4] சந்திரஹாசன் (1936)[5] சுந்தரமூர்த்தி நாயனார் (1937),[6] கண்ணப்ப நாயனார் (1938),[6] சங்கராச்சாரியார் (1939)[6] ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துப் பாடினார். கடைசியாக தன அமராவதியில் (1947) நடித்தார்.
புராணப் படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த சுந்தரம், 1940களின் இறுதியில் நடிப்பில் இருந்து விலகி பின்னணிப் பாடகராக திரைப்படங்களில் பங்களித்தார்.
நடிகராகவும் பாடகராகவும்தொகு
ஆண்டு | படம் | பாடல் | இசையமைப்பு | உடன் பாடியோர் |
---|---|---|---|---|
1935 | மார்க்கண்டேயா | அன்புடன் விடை தருவீர் | ||
பராத்பரா பரமேசுவரா | ராசபாளையம் குழந்தைவேல் பாகவதர் | |||
கைலாசவாசா சம்போ | ||||
ஆதாரம் யாரும் இல்லை ஐயா | ||||
விசுவநாதா எனை ஆண்டருள்வாய் | ||||
ஓ சிவா பரம்பொருளே | ||||
சரணம் சரணம் | ||||
1936 | சந்திரஹாசன் | மாயனே எனை யார் | ||
தீவினையும் இதுவோ தெய்வமே | ||||
மகா பரம தயாள மூர்த்தியே | ||||
பாதமலைரைப் பணிந்தேன் | ||||
பூமாதோ ரதி தேவியோ | ||||
1937 | சுந்தரமூர்த்தி நாயனார் | தில்லைவாழ் அந்தணர் தம் | ||
முகத்தைக் காட்டியே | ||||
இது வசந்த காலம் பெண்ணே | ||||
1938 | கண்ணப்ப நாயனார் | சாம்பவரி துணை புரி | ||
வசந்த ஜோதி அழகே | ||||
உன்னை மறந்திடுவேனோ | ||||
தேவா நின் திருவடி | ||||
1939 | சங்கராச்சாரியார் | |||
1942 | ராஜசூயம் | |||
1947 | தன அமராவதி | இந்திசையும் வணங்கி ஏத்தும் |
பின்னணிப் பாடல்கள்தொகு
இவர் மணமகள் (1951) திரைப்படத்தில் சி. ஆர். சுப்பராமன் இசையில் எம். எல். வசந்தகுமாரியுடன் இணைந்து பாடிய சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாரதியாரின் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.[1][3] 1962 வரை பல சிறந்த பாடல்களை தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் இவர் பாடினார்.
ஆண்டு | திரைப்படம் | பாடல் | இசை | இணைந்து பாடியோர் |
---|---|---|---|---|
1947 | தாய்நாடு | எங்கள் இந்திய பாரதியே | ஆர். நாராயண ஐயர் | ஏ. பி. கோமளா |
1951 | மணமகள் | சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா | சி. ஆர். சுப்பராமன் | எம். எல். வசந்தகுமாரி |
பாவியினும் படு பாவி | எம். எல். வசந்தகுமாரி | |||
1951 | ராஜாம்பாள் | இதயத் தாமரை மலர | எம். எஸ். ஞானமணி | பி. லீலா |
1953 | இன்ஸ்பெக்டர் | வருவாய் மன மோகனா | ஜி. ராமநாதன் | எம். எல். வசந்தகுமாரி |
1953 | பூங்கோதை | நீலவான் நெடுங்குன்றம் | பி. ஆதிநாராயணராவ் | |
1954 | கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி | கவியின் கனவில் வாழும் காவியமே | டி. ஜி. லிங்கப்பா | |
அழகே பெண் வடிவமான | சூலமங்கலம் ராஜலட்சுமி | |||
1954 | கூண்டுக்கிளி | ராத்திரிக்கு பூவாவுக்கு லாட்டரி | கே. வி. மகாதேவன் | டி. எம். சௌந்தரராஜன் & கே. வி. மகாதேவன் |
வாங்க எல்லோருமே ஒன்றாகவே | டி. எம். சௌந்தரராஜன், ராதா ஜெயலட்சுமி & கே. ராணி | |||
காயாத கானகத்தே | டி. எம். சௌந்தரராஜன் | |||
1954 | போன மச்சான் திரும்பி வந்தான் | ஓடம் போலே நமது | சி. என். பாண்டுரங்கன் & ம. சு. விசுவநாதன் | ஏ. எல். ராகவன், டி. சத்தியவதி, சுப்புலட்சுமி |
1954 | ராஜி என் கண்மணி | உலகம் இதுதானோ | எஸ். அனுமந்தராவ் | |
1954 | தூக்குத் தூக்கி | குரங்கிலிருந்து பிறந்தவன் | ஜி. ராமநாதன் | பி. லீலா, ஏ. பி. கோமளா & டி. எம். சௌந்தரராஜன் |
பியாரி நிம்பள் மேலே | எம். எஸ். இராஜேஸ்வரி | |||
1955 | சி.ஐ.டி | இணை இல்லாத சுக வாழ்வில் | பி ஆர். லட்சுமணன் | ஏ. எம். ராஜா, பி. லீலா & சரோஜினி |
1955 | நல்லவன் | பாரதியே நம் பாரத | எம். எஸ். ஞானமணி | |
1955 | நம் குழந்தை | தெய்வத்தால் ஆகாதெனின் | எம். டி. பார்த்தசாரதி | |
1955 | போர்ட்டர் கந்தன் | ஆதியாய் உலகுக்கெல்லாம் | விஸ்வநாதன்-ராமமூர்த்தி | |
1955 | வள்ளியின் செல்வன் | கண்ணா என்றாடும் | பி. எஸ். அனந்தராமன் | |
1956 | மகாகவி காளிதாஸ் | ராஜேந்திர எம் ரசிகானியே | கொன்னப்ப பாகவதர் | |
குள்ள நரியோ கொக்கரிக்குதே | ||||
சிங்கார வாகினி மனமோகினி | ||||
வாராய் வாராய் வாராய் | ஆர். பாலசரஸ்வதி | |||
ஓம்கார ரூபிணி | ஆர். பாலசரஸ்வதி | |||
1956 | மர்ம வீரன் | முன்னாலே போகாமே | வேதா | டி. எம். சௌந்தரராஜன் |
1956 | மாதர் குல மாணிக்கம் | எனக்கே தாரமாடி | எஸ். ராஜேஸ்வர ராவ் | |
1956 | நானே ராஜா | சிந்து பாடும் தென்றல் வந்து | டி. ஆர். ராமநாதன் | பி. லீலா |
1956 | ஒன்றே குலம் | மாங்கிலை மேலே பூங்குயில் கூவியது | எஸ். வி. வெங்கட்ராமன் | என். எல். கானசரஸ்வதி, கே. ராணி, எம். எஸ். இராஜேஸ்வரி & கல்யாணி |
1956 | தெனாலிராமன் | அடரிப் படர்ந்த | விஸ்வநாதன்-ராமமூர்த்தி | |
பொன்னால்ல பொருள் | ||||
கன்னா பின்னா மன்னா | ||||
விந்தியும் வடக்காக | ||||
சந்திரன் போலே | ||||
துரு துரு என மாடுகள் | ||||
தாதி தூது தீது | ||||
1957 | அம்பிகாபதி | சோறு மணக்கும் சோ நாடாம் | ஜி. ராமநாதன் | |
கொட்டிக்கிழங்கோ கிழங்கோ | ||||
என்னரும் நலத்தினால் | ||||
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் | ||||
1957 | பக்த மார்க்கண்டேயா | உலகமெலாம் | விஸ்வநாதன்-ராமமூர்த்தி | |
தேவாதி தேவா | ||||
1957 | முதலாளி | எங்க முதலாளி தங்க | கே. வி. மகாதேவன் | எஸ். வி. பொன்னுசாமி, ஏ. ஜி. ரத்னமாலா, ஜி. கஸ்தூரி |
1957 | தங்கமலை ரகசியம் | அறியாத பிள்ளை போலே | டி. ஜி. லிங்கப்பா | ஜிக்கி |
1958 | செஞ்சு லட்சுமி | அளித்திடும் அவமதிப்பை நான் நசுக்குவேன் | எஸ். ராஜேஸ்வர ராவ் | |
இங்கிருப்பானோ அங்கிருப்பானோ என்ற ஐயமே | பி. சுசீலா | |||
1958 | மாலையிட்ட மங்கை | அம்மா உன்னைக் கொண்டு வனத்திலே | விஸ்வநாதன்-ராமமூர்த்தி | |
1958 | பதிபக்தி | ராக் ராக் ராக் | விஸ்வநாதன்-ராமமூர்த்தி | ஜே. பி. சந்திரபாபு |
1958 | வஞ்சிக்கோட்டை வாலிபன் | தேடித் தேடி அலைகிறேனே | சி. இராமச்சந்திரா | திருச்சி லோகநாதன் & பி. சுசீலா |
1959 | அவள் யார் | வாராரு வாராரு வந்துக்கிட்டே | எஸ். ராஜேஸ்வர ராவ் | |
1959 | சிவகெங்கைச் சீமை | மருவிருக்கும் கூந்தல் | விஸ்வநாதன்-ராமமூர்த்தி | |
ஆலிக்கும் கைகள் | ||||
1959 | வீரபாண்டிய கட்டபொம்மன் | வெற்றிவடிவேலனே.... மனம் கனிந்தருள் | ஜி. ராமநாதன் | எஸ். வரலட்சுமி |
1960 | எங்கள் செல்வி | ஜெய ஜெய ஜெய ராமா | கே. வி. மகாதேவன் | |
1960 | குமார ராஜா | மணமகளாக வரும் மங்கை எவளோ | டி. ஆர். பாப்பா | |
நான் வந்து சேர்ந்த இடம் | பி. லீலா | |||
1960 | நான் கண்ட சொர்க்கம் | ஜி. அசுவத்தாமா | ||
1961 | என்னைப் பார் | மூத்தோர் சொல் வார்த்தை தான் | டி. ஜி. லிங்கப்பா | |
1963 | லவகுசா | வெற்றி முரசு ஒலிக்கச் செய்யும் | கே. வி. மகாதேவன், கண்டசாலா | கே. ராணி |
1964 | ரிஷ்யசிருங்கர் | தலம் புகழும் உயர் | டி. வி. ராஜு |
இறப்புதொகு
வி. என். சுந்தரம் 2009 திசம்பர் 14 அன்று தனது 92-ஆவது அகவையில் இறந்தார்.[7]
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 Vamanan (in ta). Thirai Isai Kalanjiyam (December 2014 ). Chennai: Manivasagar Publishers=044 25361039. பக். 101 – 109.
- ↑ ராண்டார் கை (28 August 2011). "Chandrahasan 1936". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article2404261.ece.
- ↑ 3.0 3.1 ராண்டார் கை (16 June 2012). "Blast from the past – Markandeya 1935". The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/chen-columns/markandeya-1935/article3536326.ece.
- ↑ Guy, Randor (17 October 2008). "Pattinathaar 1936". தி இந்து. 30 August 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 17 November 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Vijayakumar, Akila (in ta). Thamizh Cinema Ulagam Part 1 (1 March 2019 ). Chennai: Manivasagar Publishers 044 25361039. பக். 153.
- ↑ 6.0 6.1 6.2 பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 October 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. Chennai: Sivakami Publishers. Archived from the original on 17 ஜனவரி 2021. https://archive.today/20210117055511/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails11.asp. பார்த்த நாள்: 17 January 2021.
- ↑ "Veteran Tamil actor and playback singer V.N. Sundaram passes". 27 December 2009. 17 January 2021 அன்று பார்க்கப்பட்டது.