வலைவாசல்:சமணம்


சமண வலைவாசல்
.

அறிமுகம்

சமணக் கொடி
சமணக் கொடி

சமணம் எனத் தமிழகத்தில் பரவலாக அறியப்படும் சைனமதம் ஒரு பண்டைய இந்திய மதமாகும். அகிம்சை (உயிர்க்குறுகண் செய்யாமை), அநேகாந்தவாதம் (பல்முனைக் கொள்கை) மற்றும் அபரிக்கிரகம் (பற்றின்மை) ஆகிய மூன்றும் சமணத்தின் முக்கிய தூண்களாகும். துறவு என்பது இம்மதத்தின் முக்கிய கொள்கையாகும்.

சமணர்கள் ஐந்து முக்கிய உறுதிமொழிகளை எடுக்கின்றனர். அவையாவன: அகிம்சை (உயிர்க்குறுகண் செய்யாமை), சத்தியம் (உண்மை), அசுதேயம் (கள்ளாமை), பிரம்மச்சரியம் (பாலியல் இச்சை அடக்கல்) மற்றும் அபரிக்கிரகம் (பற்றின்மை) என்பனவாகும். இக் கொள்கைகள் சமணப் பண்பாட்டைச் செதுக்குவதில் பெரும்பங்காற்றியுள்ளன. எடுத்துக்காட்டாக, சமணர்கள் பெரும்பாலும் மரக்கறியுணவு உண்போராக உள்ளனர். பரசுபரோபகாரோ சீவானாம் (ஒருவருக்கொருவர் உதவி புரிவதே உயிர்களின் கடமை) என்பது இச் சமயத்தின் குறிக்கோளாகும். இச் சமயத்தின் மிகப்பொதுவான மற்றும் அடிப்படையான வழிபாடு நமோகார மந்திரமாகும்.

சமணத்தின் அகநிலை சார்ந்த எண்ணங்களும் அதன் வரலாறும், தீர்த்தங்கரர்கள் என அழைக்கப்படும், வழி வழியாக வந்த இருபத்து நான்கு தலைவர்களை அடியொற்றி உருவானதாகும். தற்போதைய காலச் சுழற்சியின் முதல் தீர்த்தங்கரர் ரிசபதேவர் ஆவார். சமண நம்பிக்கைகளின் படி, இவர் மில்லியன்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளார். இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் ஆவார். வரலாற்றாய்வாளர்களின் கூற்றுப்படி, இவர் பொ.ஊ.மு. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மகாவீரர் பொ.ஊ.மு. 600 அளவில் வாழ்ந்துள்ளார். சமண மதம் என்றுமுள்ள மதமாகக் கருதப்படுகிறது. அண்டத்தின் ஒவ்வொரு காலச் சுழற்சியின்போதும் தீர்த்தங்கரர்கள் வந்து உலகை வழிப்படுத்துவர்.

சமணம், தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் உலகின் பழைமையான மதங்களில் ஒன்றாகும். திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் என்போர் இம் மதத்தின் இரு முக்கிய பிரிவினராகும். துறவு வழிமுறைகள், பால்நிலை மற்றும் புனித நூல்கள் போன்றவை பற்றி இரு பிரிவுகளும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன. இவ்விரு பிரிவுகளிலும் துறவிகள் உள்ளனர். துறவிகள், இல்லறத்தோரால் (சிராவகன் மற்றும் சிராவிகை) பேணப்படுகின்றனர். சுவேதாம்பரப் பிரிவில் மேலும் மூன்று துணைப்பிரிவுகள் உண்டு. அவையாவன: மந்திர்வாசி, தேராபந்தி மற்றும் இசுத்தானகவாசி என்பனவாகும். இம் மதத்தைப் பின்பற்றுவோர் சமணர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் மக்கள் தொகை நான்கிலிருந்து ஐந்து மில்லியன் வரை உள்ளதோடு, இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவுக்கு வெளியில், கனடா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்களவு சமணர்கள் வாழ்கின்றனர். சப்பானில் இம்மதத்துக்கு மாறுவோர் தொகை உயர்ந்து வருகிறது. பர்யுசனா மற்றும் தாசு லட்சணா, அட்டனிகா, மகாவீர் சென்ம கல்யாணக், அட்சய திருதியை மற்றும் தீபாவளி என்பன சமணர்களின் முக்கிய விழாக்களாகும்.


சமணம் பற்றி மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

சமண அறிஞர்கள்

ஆச்சாரிய சினசேனர்
ஆச்சாரிய சினசேனர்

ஜினசேனர் (Jinasena) கிபி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திகம்பர சமணத் துறவியும், வட மொழி அறிஞரும் ஆவார். இவர் ஆதிபுராணம், மகாபுராணம் மற்றும் அரிவம்ச புராணம் ஆகிய மூன்று சமணப் புராணங்களை சமஸ்கிருத மொழியில் இயற்றியவர் ஆவார்.

திகம்பர சமணப் பிரிவின் அறுகோணம் (Shatkhandagama) எனும் முக்கியத் தத்துவ நூலுக்கு விளக்க உரை எழுதிய வீரசேனரின் மாணவர் சினசேனர் ஆவார். மேலும் சினசேனர் அரிவம்ச புராணத்தையும் இயற்றியுள்ளார். மேலும் எளிய மக்களுக்கான தர்மசாஸ்திரம் எனும் நீதி நூலை இயற்றியுள்ளார். இராஷ்டிரகூடர் மன்னர் அமோகவர்சன் இவரது சீடர் ஆவர்.


சிறப்புப் படம்

வலைவாசல்:சமணம்/சிறப்புப் படம்/2

பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

தொடர்பானவை

தொகு  

சமணம் பற்றி சான்றோர் கூறியமை


வலைவாசல்:சமணம்/சான்றோர் கூற்று/5

தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
சமயம்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
சமணம்



தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்


தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


சமயம்சமயம்
சமயம்
பௌத்தம்பௌத்தம்
பௌத்தம்
இந்து சமயம்இந்து சமயம்
இந்து சமயம்
இந்தியாஇந்தியா
இந்தியா
சமயம் பௌத்தம் இந்து சமயம் இந்தியா
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:சமணம்&oldid=3267091" இலிருந்து மீள்விக்கப்பட்டது