பயனர்:Yokishivam/மணல்தொட்டி

மதிப்பிற்குறிய அய்யா வணக்கம்! இன்று (10-11-2015) இங்கு நல்ல மழை, 13-11-2015 அன்று சென்னை செல்ல வேண்டும். போரூர் பிளாட்டிற்கு பராமரிப்புக் கட்டணம் ( maintenance charge ) செலுத்த வேண்டியுள்ளது. தாமல் கணக்குகளை பார்க்க வேண்டும். அக்ரி செல்வராஜ் கணக்குகளைப் பற்றி கேட்டுவிடவா? அல்லது தாங்கள் கேட்டுக்கொள்கிறீர்களா? தற்போது எங்கு உள்ளீர்கள்? டெல்லியா? அல்லது கோவையா? நன்றியுடன் தில்லைநாதன்

This template includes collapsible lists.

To set it to display all lists when it appears (i.e. all lists expanded), use:
  •  {{Yokishivam |expanded=all}} or, if enabled, {{Yokishivam |all}}  (i.e. omitting "expanded=").

    To set it to display one particular list while keeping the remainder collapsed (i.e. hidden apart from their headings), use:

  •  {{Yokishivam |expanded=listname}} or, if enabled, {{Yokishivam |listname}}
  • …where listname is one of the following (do not include any quotemarks):
  • பழனி வட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வேடசந்தூர் வட்டம், நத்தம் வட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம்,ஆத்தூர் வட்டம்,நிலக்கோட்டை வட்டம், கொடைக்கானல் வட்டம்
  • For example, {{Yokishivam |expanded=பழனி}} or, if enabled, {{Yokishivam |பழனி}}

  • மேற்கோள்கள் தொகு

    வார்ப்புரு:கிராமங்களின் பட்டியல்

    ஒட்டன்சத்திரம்

    வேடசந்தூர் வட்டம்

    நத்தம் வட்டம்

    நிலக்கோட்டை வட்டம்

    கொடைக்கானல் வட்டம்

    அபிராமி அம்மன் கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் மைய பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் பூப்பல்லாக்கில் ஊர்வலம் வருவார். நவராத்திரி கொலு இங்கு மிகவும் விஷேசமாகும். தொலைபேசி - 0451 - 2433229 பேகம்பூர் பெரிய மசூதி

    ஹைதர் அலியின் ஆட்சி காலத்தில், அவர் 3 மசூதிகளை அமைத்தார். ஒன்று அவருக்காகவும், மற்றொன்று மலைகோட்டையின் கீழ் தன்னுடைய படையினருக்காகவும், 3வது பொதுமக்களுக்காக கோட்டையின் தென்பக்கம் பிரமாண்டமாக கட்டினார். ஹைதர் அலியின் சகோதரி அமீர் உன் நிஷா பேகத்தின் உடல் இங்கு புதைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இடத்திற்கு பேகம்பூர் என்ற பெயர் வந்தது. தொலைபேசி - 0451 - 2402086.
    

    நாடு பட்டி ஆஞ்சநேயர் கோயில் நாடுபட்டி ஆஞ்சநேயர் கோயில் திண்டுக்கல்லில் இருந்து 35 கி.மீ தொலைவில் நிலக்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளதால் இதன் பிம்பம் நீரில் பிரதிபலிக்கிறது. பழனி Hotel image பழனி மலையின் மீது முருகன் தண்டாயுதபாணியாக வீற்றிருக்கிறார். முருகனின் அறுபடை வீடுகளில் பழனியும் ஒன்றாகும். தென்னிந்தியாவின் முக்கிய புண்ணிய தலங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. தமிழகத்திலேயே மிக அதிக வருமானம் கொண்ட பெருமையுடையது. இங்கே முருகப்பெருமானை வணங்கி அருள் பெறலாம். திருப்பதிக்கு அடுத்தபடியாக முடிகாணிக்கை செலுத்த பக்தர்கள் இங்கு ஏராளமாக வருகின்றனர்.

    ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் Hotel image கோட்டை மாரியம்மன் கோயில் 300 ஆண்டு பழமையானதாகும். 18ம் நூற்றாண்டில் மாரியம்மன் சிலையை திப்புசுல்தானின் படையில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் மலைக்கோட்டையின் கீழ் நிறுவினார். இதுவே திண்டுக்கல் மக்களுக்கு கோட்டை மாரியம்மனாக, காவல் தெய்வமாக உள்ளது. கோயில் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென் புறம் விநாயகர் கோயிலும், வடக்கில் மதுரை வீரன் கோயிலும் உள்ளன. கோயிலின் நடுவே உள்ள மண்டபத்தில் சிங்க முகம் கொண்ட சிலை அம்மனை நோக்கி இருக்குமாறு அமைந்துள்ளது. கோயில் கர்ப்பகிரகத்தில் பல்வேறு சிறிய சிலைகளும் உள்ளன. இவை அனைத்தும் மாரியம்மனின் பல்வேறு அவதாரங்களை பிரதிபலிப்பதாக உள்ளது. கோயில் திண்டுக்கல்லின் மையத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ காளகத்தீஸ்வரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிஞூல திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இங்கு காளகத்தீஸ்வரர் ஞானாம்பிகை அம்மனுடன் வீற்றிருக்கிறார். திண்டுக்கல்லின் மைய பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. செயின்ட் ஜான்ஸ் சர்ச் தாமஸ் பெர்னான்டோ என்பவரால் இந்த சர்ச் கட்டப்பட்டது. இந்த சர்ச்சில் ஜனவரி கடைசி வெள்ளி கிழமை துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் விழா நடைபெறும். செயின்ட் ஜான்ஸ் சர்ச் 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்ட்டதாகும். 1866ம் ஆண்டு துவங்கி 1872ம் ஆண்டு இந்த பணி நிறைவடைந்தது. திண்டுக்கல்லின் உள்ள பிற சர்ச்களுக்கு தலைமை இடமாக இந்த சர்ச் திகழ்கிறது. தாடி கொம்பு பெருமாள் கோயில் Hotel image திண்டுக்கல்லில் இருந்து 10 கி.மீ தொலைவில் தாடிகொம்பில் சவுந்திரராஜ பெருமாள் கோயில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் பெருமாள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவார். கோயிலில் உள்ள சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாடுகள் மிகுந்தவை ஆகும்.


    நத்தம் மாரியம்மன் கோயில் Hotel image திண்டுக்கல் மற்றும் மதுரையில் இருந்து 36 கி.மீ தொலைவில் நத்தம் மாரியம்மன் கோயில் உள்ளது. இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவராக உள்ள அம்மன் அன்னத்தின் மேல் அமர்ந்து காலில் அசுரனை மிதித்த நிலையில் தாழ்மலரை பணிந்த பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மாசிமாதம் அமாவாசை அன்று கன்னிமார் தீர்த்தம் எடுத்து வருதலுடன் திருவிழா ஆரம்பிக்கிறது. நத்தம் அருகில் உள்ள கரந்த மலையில் கன்னிமார் தீர்த்தம் உள்ளது. சந்தன கருப்பு கோயிலில் மஞ்சள் ஆடையுடன் ஒரு மைல் நீளத்துக்கு ஒரே கூட்டமாக சென்று தீர்த்தம் எடுத்து வருவர்.பின்பு கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கும்.கம்பம் என்பது ஒரே மரத்தில் 3 கிளைகளையுடையதாகும். இது பார்ப்பதற்கு திரிசூலம் போன்றிருக்கும்.அம்பாள் தன் கணவரோடு இந்த பதினைந்து நாட்களுக்காவது இருக்க விரும்புவதால்தான் இந்த கம்பம் சுவாமியாக நினைக்கப்பட்டு கோயில் நுழைவில் நடப்படுகிறது. முத்தாய்ப்பாக கழுகுமரம்(வழுக்கு மரம்) ஏறுதல், பூக்குழி இறங்குதல் என்ற மயிர் கூச்செறியும் பக்திகரமான நேர்த்திகடன்கள் நடக்கின்றன. சற்று கடினமான உயரமான யூகலிப்டஸ் மரம் வழுவழுவென செதுக்கி விளக்கெண்ணெய்,மிளகு கடுகு ஆகிய எளிதில் வழுக்கும் பொருட்களால் பூசப்பட்ட நிலையில் பக்தர்கள் விடாப்பிடியுடன் மேலே ஏறுவார்கள். பின்பு 14 அடி நீள நெருப்பு கங்குகள் பரப்பப்பட்ட பாதையில் அம்மனை நினைத்தபடியே இறங்கி நடந்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துவார்கள். இந்த உற்சவம் மிகப் புகழ்பெற்றதாகும். குறிஞ்சி ஆண்டவர் கோயில்: Hotel image கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. கடந்த 2004ம் ஆணடு கடைசியாக குறிஞ்சி பூ பூத்தது. கொடை ஏரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உறைந்திருக்கும் முருக பெருமான் குறிஞ்சி ஆண்டவர் என அழைக்கப்படுகிறார். இந்த கோயிலில் இருந்து பார்த்தால் வைகை அணை மற்றும் பழனி மலையை காணலாம்.

    வெள்ளி அருவி : Hotel image கொடை ஏரியில் இருந்து 8 கி.மீ தொலைவில் இந்த அருவி உள்ளது. கொடை ஏரி நிரம்பி வழியும் 180 அடியில் இருந்து அருவியாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் இங்கு குளிக்கவும் செய்கின்றனர்.

    பில்லர் ராக் : Hotel image மூன்று பெரிய கற்பாறைகள் செங்குத்தாக அமைந்த இடமே பில்லர் ராக் ஆகும். இதன் உயரம் 122மீ ஆகும். ஏரியில் இருந்து 7.4 கி.மீ தொலைவில் பில்லர் ராக் அமைந்துள்ளது.

    பிரையன்ட் பூங்கா : Hotel image பிரையன்ட் பூங்காவில் அனைத்து வகையான பூக்களையும், செடிகளையும் பார்த்து பரவசப்படலாம். ஏரியின் கிழக்கு பக்கம் இந்த பூங்கா அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடக்கும் கோடை விழாவில் மலர் கண்காட்சி நடத்தப்படும்.


    கோக்கர்ஸ் வாக் : Hotel image மலையின் ஓரமாக இயற்கை எழிலை ரசிப்பதற்கு ஏற்ப அமைக்கப்பட்ட பாதையே கோக்கர்ஸ் வாக் ஆகும். கோக்கர் என்ற பொறியாளர் 1872ம் ஆண்டு இந்த பாதையை கண்டறிந்தார். தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட இந்த பாதையில் நடந்து செல்வது மனதிற்கு மிகவும் அமைதியை தரும்.


    குக்கல் குகை : Hotel image கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ தொலைவில் பூம்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் குக்கல் குகை உள்ளது.


    பசுமை பள்ளத்தாக்கு : Hotel image ஏரியில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் பசுமை பள்ளத்தாக்கு உள்ளது. இங்கிருந்து பார்த்தால் வைகை அணை தெரியும். இதன் அருகில் உள்ள மிக ஆழமான மரங்களடர்ந்த பள்ளத்தாக்கை தற்கொலை முனை என அழைக்கிறார்கள்.


    செண்பகனூர் மியூசியம் : Hotel image இந்த மியூசியம் புனித இருதய கல்லூரியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு மனித வள ஆராய்ச்சி பற்றிய நூல்கள் மற்றும் பல்வேறு கற்கால பொருட்கள் உள்ளன. நுழைவுகட்டணம் : ஒரு ரூபாய். திறந்திருக்கும் நேரம் : காலை 10 மணி முதல் 11.30 வரை, மதியம் 3 மணி முதல் 5 மணி வரை.

    செட்டியார் பூங்கா : Hotel image கொடைக்கானலின் வடகிழக்கு மூலையில் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த பூங்கா அமைந்துள்ளது.


    கோடை ஏரி: Hotel image கொடைக்கானலில் 24 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஏரியில் படகு சவாரி செய்யலாம். இந்த ஏரி 1863ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் மதுரை கலெக்டராக இருந்த சர் வேரி ஹென்றி லெவின்ஜ் என்பவரால் உருவாக்கப்பட்டதாகும்.

    கொடைக்கானல் Hotel image திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள புகழ் பெற்ற மலை வாசஸ்தலம் கொடைக்கானல் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 2133 மீ உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 115 கி.மீ., மற்றும் கோவையிலிருந்து 130 கி.மீ.,தொலைவில் கொடைக்கானல் உள்ளது. பஸ் வசதி இருக்கிறது. கொடைக்கானல் ரோடு வரை ரயிலிலும் வரலாம். இங்கிருந்து 80 கி.மீ., பிற வாகனங்களில் செல்ல வேண்டும். ஏப்ரல், மே, ஜூன் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீசன். இந்த மாதங்களில் தங்குவதற்கு இடம் கிடைப்பது சிரமம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழாவும், டிசம்பரில் குளிர்கால விழாவும் கொண்டாடப்படும். சைக்கிள், குதிரை, படகு சவாரி செய்யலாம்.

    01.Dindigul-block ANAIPATTY KURMBAPATTI CHETTYNAIKKNPATTI PALLAPATTI SEELAPADI MULLIPADI BALAKRISHNAPURAM THOTTANUTHU ADIYANUTHU A.VELLODU THAMARAIPADI M.M.KOVILUR PERIYAKOTTAI SIRUMALA

    02.Shanarpatti-block ANJUKKLIPATTI AVILIPATTI EMAKKALAPURAM KOOVANOOTHU KANAVAIPATTI KAMBILIAMPATTI KOMBAIPATTI MADOOR MARUNOOTHU RAGALAPURAM RAJAKKPATTI SENGURICHI SHANARPATTI SILUVATHUR T.PANJAMPATTI THAVASIMADAI THIMMANANALLUR VATHALATHOPPAMPATTI VAJRASERVARAYANKOTTAI VEERASINAMPATTI VEMBARPATTI

    03.Athoor-block ATHOOR AKKARAIPATTI ALAMARATHUPATTY AMBATHURAI AYYANKOTTAI BODIKAMANVADI CHETTIAPATTI GANDIGRAM DEVARAPPANPATTI SEEVALSARAGU KALIKKANPATTY MANALOOR MUNNILAIKOTTAI N.PANJAMPATTI PARAIPATTI PALYANKOTTAI PILLAYARNATHAM PITHALAIPATTI THOPPAMPATTY SITHAREVU VAKKAMPATTI VEERAKKAL

    04.Reddiarchatram-block ALAGUPATTI SILVARPATTI AMMAPATTI MANGARAI MURUNELLIKOTTAI ADALUR KASAVANAMPATTI KONUR KARISALPATTI KAMATCHIPURAM GURUNATHANAICKANUR KUTTATHUPATTI KOTHAPULLI ANUMANDRAYANKOTTAI PONNIMANTHURAI T.PUDUPATTI T.PANNAIPATTI PANDRIMALAI DHARMATHUPATTI PALAKANUTHU PUDUCHATRAM K.PUDUKOTTAI NEELAMALAIKOTTAI G.NADUPATTI

    05.Natham-block CHELLAPPANAIKENPATTI MULAIYUR KOTTAIYUR BOOTHAGUDI SAMUDARAPATTI SIRUGUDI REDDIAPATTI LINGAVADI PUNNAPATTI PARALIPUDUR KOSUKURICHI PILLIARNATHAM SENDURAI KUTTUPATTI SATHAMPADI PANNUVARPATTI SETHUR AVICHIPATTI VELAMPATTI N.PUDUPATTI KUDAGIPATTI URALIPATTI SIRANGATTUPPATTI

    06.Nilakkottai-block ETHILODU JAMBUDARAIKOTTAI KODAGINAICKENPATTI KOTTUR KOOVANUTHU MATTAPARAI S.METTUPATTI MUSUVANUTHU NAKKALUTHU RAMARAJAPURAM GULLALAGUNDU GULLICHETTIPATTI MALAYAGOUNDANPATTI PACHAMALAYANKOTTAI NOOTHALAPURAM PALLAPATTI PILLAYARNATHAM SILUKKUVARPATTI SITHARHALNATHAM SIVAGANAPURAM VELLINAIKANPATTI VILAMPATTI NARIYUTHU

    07.Bathlakundu-block KUNNUVARAYANKOTTAI VIRALIMAYANPATTI KOTTAIPATTI KANAVAIPATTI NADAKOTTAI ELUVANAMPATTI SEKKAPATTI G.THUMMALAPATTI VIRUVEEDU SANDAIYUR MALLANAMPATTI RENGAPPANAIKANPATTI KATTAKAMANPATTI OLD BATLAGUNDU P.VIRALIPATTI SENKATTAMPATTI KOMBAIPATTI

    08.Kodaikkannal-block ADUKKAM KAMANUR KilakkuChettiPatti KUMBRAIYUR KOOKKAL MANNAVANUR PACHALUR POOMPARAI POOLATHUR POONDI PERIYUR THANDIKUDI VADAKAVUNJI VILPATTI VELLAKAVI

    09.Palani-block A.KALAYAMPUTHUR AMARAPOONDI AYYAMPALAYAM ANDIPATTI CHINNAKALAYAMPUTHUR CHITHIRAKULAM ERAMANAIKENPATTI KALIKANAIKENPATTI KANAKKANPATTI KARADIKOTTAM KAVALAPATTI PAPPAMPATTI PETHANAIKENPATTI PACHALANAIKENPATTI THAMARAIKULAM PERIAMMAPATTI KOTHAIMANGALAM MELAKOTTAI SIVAGIRIPATTI THATHANAIKENPATTI

    10.Oddanchatram-block K.ATHICOMBAI AMBILIKKAI ARASAPPAPILLAIPATTI CHATRAPATTI CHINNAKKAMPATTI ELLAIPATTI GOLLAPATTI EDAIYAKOTTAI I.VADIPATTI JAVADUPATTI KAPPLIAPATTI JOHIPATTI KALANJIPATTI KAVERIAMMAPATTI KUTHILUPPAI KonrangiKEERANUR KEDAIYURUMBU LAKKAYANCOTTAI MARKKAMPATTI MANDAVADI T.PUDUKOTTAI ODAIPATTI PULIAMARATHUKOTTAI PULIYURNATHAM PERIAKOTTAI REDDIAPATTI SINDALIPATTI SINDALAVADANPATTI THANGACHIAMMAPATTI VERIPPUR VEERALAPATTI VIRUPATCHI VALAYAPATTI Velur-ANNAPATTI VADAKADU

    11.Thoppampatti-block AKKARAIPATTI APPANUTHU APPAYAMPATTI APPIPALAYAM PODUVARPATTI DEVATHUR KALLIMANDAYAM KARIAMPATTI KOLUMAKONDAN KOOTHAMPOONDI KORIKADAVU KOTHAYAM KOTTADURAI KOVILAMMAPATTI MANJANAIKAMPATTI MANOOR MARICHILAMBU MELKARAIPATTI METTUPATTI MIDAPADI MOLLAMPATTI MUTHUNAIKAMPATTI PALAPPANPATTI PARITHIYUR POOSARIPATTI PORULUR PUDUR PULIAMPATTI PUNGAMATHUR PUSHPATHUR RAJAMPATTI SIKKAMANAIKANPATTI THALAYUTHU THOPPAMPATTI THUMMALPATTI VAGARAI VELAMPATTI VILVATHAMPATTI

    12.Vedasandur-block AMMAPATTI BOOTHIPURAM VIRUTHALAIPATTI KALVARPATTI KUDAPPAM KUTTAM KULATHUPATTI KOOVAKKAPATTI KOVILUR(VEMBUR) Kovilur(Nallur) MALVARPATTI MARAMBADI NAGAYAKOTTAI NALLAMANNARKOTTAI NATHAPATTI PALAPATTI V.PUDUKOTTAI E.CHITHOOR SRIRAMAPURAM USILAMPATTI VELLAMPATTI NAGAMPATTI THATTARAPATTI

    13.Vadamadurai-block KANAPADI VELAYUTHAMPALAYAM KOMBERIPATTI PUTHUR SITHUVARPATTI SUKKAMPATTI VELVARKOTTAI MOREPATTI KULATHUR PAGANATHAM PILATHU PADIYUR P.KOSAVAPATTI SINGARAKOTTAI THENNAMPATTI

    14.Guziliyamparai-block ALAMPADI ULLIAKOTTAI KARUNGAL KARIKALI KOOMBUR D.GUDALUR R.KOMBAI KOTTANATHAM DHOLIPATTI THIRUKOORNAM CHINNULUPPAI R.PUDUKOTTAI MALLAPURAM VADUGAMPADI VANIKARAI LANDAKOTTAI R.VELLODU





    இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் எந்நந்தி இணையடிக் கீழே.... திருமூலர்.


    வட்டமுலையென்று மிக வற்றுந்தோலை மகமேரு என்று உவமை வைத்துக்கூறுவார் கெட்டநாற்றமுள்ள யோனிக் கேணியில் வீழ்ந்தார் கெடுவர் என்றே நீ துணிந்து ஆடுபாம்பே.... "மகாபாரதம் மறுபார்வை" என்ற விகடன் பதிப்பில் வெளிவந்த புத்தகத்தை தயவு கூர்ந்து பாருங்கள் இரவு வணக்கம் இந்தியாவின் இன்றைய மத்தியப்பிரதேசத்தில் ஜபல்பூர் மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள, இராவணனின் கோந்த் இனக்குழு வசித்த தண்டகாரண்ய பகுதின் சற்று வட பகுதியில் வசித்த கொருக் இனக்குழுவைச் சார்ந்தவர்கள் வாலி, சுக்ரீவன் ஆகியோர் இவர்களின் வாழிடமாக அறியப்படுகிற நகர் கிஷ்கிந்தை.

    கிஷ்கிந்தை இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தின் கதை மாந்தர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வாலி, சுக்கிரீவன் அனுமன் ஆகியோர். இராமனின் மனைவி }சீதாவை இராவணன் கொண்டு சென்ற பிறகு இராமன் தனது மனைவியை மீட்ட இராவணனுடன் போர் புரிய படை தந்து உதவிய சுக்கிரீவனும், அவனது அண்ணன் வாலியும் ஆட்சி செய்த பகுதியின் தலைநகராகும்.


     

    http://archive.is/tnmaps.tn.nic.in [சான்று தேவை]. [மேற்கோள் தேவை]


    முன்னுரை தொகு

    நம் இந்திய திரு நாட்டின் அடிப்படை ஆதாரமாக விளங்குபவை கிராமங்கள். ஏனெனில் கிராமங்களின் கட்டமைப்பில் தான் இந்தியா என்ற நம்முடைய மிகப்பெரிய நாடு உருவாக்கப்படிருக்கிறது. உலக அரங்கில் நமது நாடு தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமானால் , இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமங்களின் வளர்ச்சியினால் மட்டுமே அது சாத்தியமாகும் . இன்று இந்தியாவின் வளர்ச்சி என்பது அனைத்து கிராமங்களின் ஒன்றிணைந்த வளர்ச்சியில் தான் அடங்கியிருக்கிறது . இந்த கிராமங்களின் வளர்ச்சி என்பது இன்றைக்கு தானே நிகழ்ந்து விட முடியாது . எனவே ஒரு கிராமம் சிறப்பாக வளர்ச்சி பெற , அங்கே ஒரு சிறந்த நிர்வாக கட்டமைப்பு தேவையாக இருக்கிறது . கிராம அளவில் ஒரு சிறந்த நிர்வாகம் அமைகின்ற போது அதன் காரணமாக கிராமங்களின் வளர்ச்சியிலும் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் . எனவே இந்த வளர்ச்சியில் குறிப்பட்டுச் சொல்லும்படியாக இந்த கிராமங்களில் பணிபுரியக் கூடிய கிராம நிர்வாக அலுவலர்களின் சிறப்பான செயல்பாடும் அவசியமாகிறது.

    தமிழ்நாட்டிலிருக்கும் ஊர்கள் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளால் பிரிக்கப்பட்டிருப்பது போல், வருவாய்த்துறையால் குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப வருவாய்க் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மாநகராட்சிகள், மக்கள்தொகை அதிகமுடைய நகராட்சிகள் போன்றவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் மக்கள்தொகை குறைவான சில ஊராட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டும் வருவாய்க் கிராமம் அமைக்கப்பட்டிருக்கிறது.

    கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் தொகு

    1. .கிராம கணக்குகளைப் பராமரித்தல் ,மற்றும் பயிர் ஆய்வு பணி பார்த்தல்.
    2. .சர்வே கற்களைப் பராமரிப்பது , காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புவது .
    3. .நில வரி , கடன்கள் , அபிவிருத்தி வரி, மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூல்செய்வது .
    4. .பல்வேறு சான்றுகள் வழங்குவது தொடர்பாக அறிக்கை அனுப்புதல் .
    5. வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன்கள் பெற . சிட்டா & அடங்கல்களின் நகல் வழங்குவது .
    6. பிறப்பு , இறப்புகளை பதிவு செய்து , சான்று வழங்குவது , அது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது .
    7. தீ ,விபத்து, வெள்ளம் , புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டிருப்பது .
    8. .கொலை ,தற்கொலை , அசாதாரண மரணங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல்
    9. .காலரா , பிளேக் & கால்நடை நோய்கள் , தொற்று நோய்கள் குறித்து அறிக்கை அனுப்புதல் .
    10. .இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல் .
    11. .கிராம ஊழியர்களின் சம்பளபட்டியல் தயாரித்தல் .
    12. .கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல் .
    13. .அரசுக் கட்டிடங்கள் ,மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
    14. .புதையல் பற்றி உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தல் .
    15. .முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்தான பணிகளை கவனித்தல் .
    16. .முதியோர் ஓய்வூதிய பதிவேட்டைப் பராமரித்தல் .
    17. .பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல் .
    18. .வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்கள் அளித்தல் & ஒத்துழைத்தல் .
    19. .கிராம பணியாளர்களுடைய பணியினைக் கண்காணித்தல் .
    20. .சட்டம் ஒழுங்கு பேணுதல் ,உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல் , குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல் ,சட்டம் ஒழுங்கு பேணுதற்காக கிராம அளவில் அமைதிக் குழுவைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் .
    21. .தேர்தல் பணிகள் மேற்கொள்வது .
    22. .கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் ஒத்துழைத்தல்
    23. .பொதுச் சுகாதாரம் பராமரித்தல் .
    24. .நில ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது மற்றும் உயர் அலுவலர்களுக்குத் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுத்தல் .
    25. .கிராமத்தில் நிகழும் சமூக விரோத செயல்கள் குறித்து அறிக்கை அனுப்பதல் .
    26. .வருவாய்த் துறை அலுவலர்களூக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல் .
    27. .குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் , சந்தேகத்திற்கிடமான அன்னியர்கள் வருகையையும் தெரிவித்தல் .
    28. .கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.
    29. .அரசு அவ்வப்போது தொடங்கும் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல் .
    30. .மனுநீதி நாள் நிகழ்ச்சி நடத்த வட்டாச்சியருடன் ஒத்துழைத்தல்
    31. .பாசன ஆதாரங்களைக் கண்காணித்தல் , ஏரிகளிலும , நீர் வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் தடுப்பது அவற்றை முறையாகப் பராமரிப்பது .
    32. .கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் எடுத்து ஒரு பதிவேடு பராமரித்தல் .
    33. .பதிவு மாற்றம் [Transfer Rigistry ]அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பராமரித்தல் .
    34. .நிலப் பதிவேடுகளை கணிணி மயமாக்குதலுக்கான பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது ,
    35. .கிராம அளவில் கடன் பதிவேடு மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்தல்.
    36. .கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்
    37. .பொது இடங்களில் வருடத்திற்கு ஐம்பது பயன் தரும் மரங்களை நடுவது .
    38. .உயர் அலுவலர்கள் கொடுக்கும் பணிகளை மேற்கொள்வது .

    ஆனால் மேற்கண்ட பல்வேறு விதமான முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொள்ள , கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை தவிர , இன்று அனைத்து அரசுப்பணிகளையும் விட ஒரு தனித்துவம் பெறுகிற பணியாக கிராம நிர்வாக அலுவலர் பணி அமைந்துள்ளது. காரணம் அனைத்து அரசு பணியாளர்களும் அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள அலுவலர்களும் மக்களுடன் மறைமுகமாக தொடர்பு கொண்டுள்ளனர். கல்வித் துறையில் பணிபுரிபவர்கள் மாணவர்களையும் , காவல் துறையில் பணிபுரிபவர்கள் குற்றவாளிகளையும் , மருத்துவத்துறையில் பணிபுரிபவர்கள் நோயாளிகளையும் , போக்குவரத்துத் துறையில் பணிபுரிபவர்கள் பயணிகளையும் , ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிபவர்கள் மக்கள் பிரதிநிதிகளையும் , என ஒரு சிலரை மையப்படுத்தியே பணிபுரிகின்றனர் . இவர்களின் பணியும் கற்பித்தல் , சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு , சுகாதாரம் பேணுதல் , பயணிகள் பரிமாற்றம் , வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல் , போன்ற ஒரு செயலை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது . ஆனால் மேலே கண்ட அனைத்து துறை அலுவலர்களுடனும் , பல்வேறு வகைப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனும் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள்.

    தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட கிராமத்தின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ,பொது சுகாதாரம் பராமரிப்பு , பொதுச் சொத்துகள் பராமரிப்பு , தேர்தல் பணிகள் மேற்கொள்வது , கனிம வளங்களைப் பாதுகாப்பது , இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, இயற்கை இடர்பாடுகளின் போது விரைந்து செயல்பட்டு மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவது & அரசின் மக்கள் நலத் திட்ட பணிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க களப்பணி மேற்கொள்வது போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் , கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது . பிறப்பு & இறப்பு சான்றுகள் , அடையாளச் சான்று , அனுபோகச் சான்று , அடங்கல் சான்று, நில உரிமைச் சான்று, வருமானச் சான்று சாதிச் சான்று , வாரிசுச் சான்று , இருப்பிட சான்று , சொத்து மதிப்புச் சான்று , ஆதரவற்ற குழந்தைச் சான்று , ஆதரவற்ற விதவைச் சான்று , கலப்புத் திருமணச் சான்று , கணவனால் கைவிடப்பட்டவர் சான்று , போன்ற பல்வேறு சான்றுகள் வழங்க பரிந்துரை செய்வது , நில உடமை ஆவணங்களை பராமரித்தல் , மரம் & நில வரிகளை வசூல் செய்தல் , மற்றும் இதர பாக்கிகளை வசூல் செய்தல் , மேலும் ஒவ்வொரு மாதமும் பயிர் ஆய்வு பணி மேற்கொண்டு அடங்கலில் பதிவு செய்து தொடர்பான கணக்குகளை முறையாக பராமரிப்பது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் பட்டா மாற்ற விண்ணப்பங்களைப் பெறுவது , உட்பிரிவு மாற்றங்கள் கோரிய விண்ணப்பங்களைப் பெறுவது , சிறு விவசாயி சான்று கோரிய விண்ணப்பங்களைப் பெற்றுஅதனை உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்வது . சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோரிய விண்ணப்பங்களைப் பெற்று , அதனை உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்வது என அனைத்திற்கும் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு என்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது .

    கிராம மக்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்குத் துவங்குவது , கூட்டுறவு & மற்ற வங்கிகளில் கடன் பெறுவது , வீடுகள் , கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு மின் இணைப்பு பெறுவது , என அனைத்திற்கும் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை என்பது அவசியமானதாக கருதப்பட்டு வருகிறது . மேலும் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டாலோ , பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கருதினாலோ உடனடியாக காவல் துறையை அழைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் , கிராமத்தில் சுற்றுப் புறங்களை தூய்மையாக வைத்திருக்க உள்ளாட்சி அமைப்புகளை அழைத்து பேசி நடவடிக்கை மேற்கொள்ளவும் , சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளரை அழைத்து பேசி சுகாதார தூய்மை நடவடிக்கை மேற்கொள்ளவும் , கிராம மக்களில் பலருக்கு நோய் பரவி இருந்தாலோ , நோய் பரவும் வாய்ப்பு உள்ளதாக கருதினாலோ மருத்துவ அலுவலரை அழைத்து பேசி அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளவும் , உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் கிராம நிர்வாக அலுவலர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர் .

    காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலரின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதை கிராம நிர்வாக அலுவலரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ,அவர்களுக்குத் தெரிவிக்காமல் கிராமத்தில் உள்ள எந்த ஒரு நபரின் மீதும் காவல் துறையால் கைது நடவடிக்கை மேற்கொள்ள இயலாது ,கிராமத்தில் கொலை குற்றம் போன்ற மிகப்பெரிய குற்றத்தை செய்த ஒருவர் காவல் துறையில் சரணடைவது தனக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதினால் அவர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண்டையலாம் போன்ற சட்டங்கள் இன்றைக்கும் அமலில் உள்ளதாக தெரிய வருகிறது . ஆனால் அது உறுதியாக தெரியவில்லை . ஒரு வேலை இந்த சட்டம் அமலில் இருந்தால் அது வரவேற்க வேண்டிய ஒன்றுதான் . காவல் துறையின் அதிகார அத்து மீறலை தவிர்ப்பதற்கான நடை முறையாக இதனைக் கருதலாம் .ஒரு கால கட்டத்தில் வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் கிராம நிர்வாக அலுவலர் பெற்றிருந்தார் . ஆனால் அது தற்போது நடைமுறையில் இல்லை. ஆனாலும் இன்றைய சூழலில் கிராமங்கள் பல வளர்ச்சியினைக் ண்டிருக்கின்றன , வளர்ச்சிப் பணிகள் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன , இத்தகைய உன்னதமான பணிகளை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலரின் தகுதி உயர்த்தப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் விரிவாக்கம் செய்யப்பட்டு அவருக்கு கீழ் இரண்டு இளநிலை உதவியாளர்கள் மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரின் கீழ் அனைத்து துறை அலுவலர்களும் பணிபுரிவதைப் போல , கிராம அளவில் பணிபுரியக்கூடிய அனைத்து துறை அலுவலர்களையும் கிராம நிர்வாக அலுவலரின் நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டிய இந்த கால கட்டத்தில் ஒரு கிராமத்திற்கு ஒரு கிராம நிர்வாக அலுவலர் , ஒரு உதவியாளர் என குறைவான எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர் . மேலும் இரண்டு மூன்று கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கவனிக்க வேண்டிய சூழல் இன்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஏற்ப்பட்டிருக்கிறது .

    கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் மேற்கண்ட பல்வேறு விதமான கிராம நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள முன்சீப் , கர்ணம் , என்ற அலுவலர்களும் தலையாரி , வெட்டியான் , நீர்க்கட்டி , என்ற பெயரில் உதவியாளர்களும் அவர்களுக்கு என்றே ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வந்துள்ளனர் . இதில் நீர்கட்டி என்ற பணியாளர் நீர்நிலைகளை கண்காணிப்பவராகவும் , அதில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றுபவராகவும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக உடனுக்குடன் தகவல் தெரிவிப்பவராகவும் இருந்து வந்துள்ளார் . இன்று நீர்கட்டி என்ற பணியாளர் இல்லாமல் போனதனால் இன்று நீர் நிலைகளும் , ஓடைகளும் , ஏரிகளும் காணாமல் போய்விட்டன . நீர் நிலைகளில் பாதி அளவுக்கு அளிக்கப்பட்டு விளை நிலங்களாக மாறிவிட்டன . இதனால் நாட்டின் நீர்வளம் குறைந்து இப்போதே நமக்கு நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது . இதனால் விவசாயம் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது . தலையாரி , வெட்டியான் என்ற உதவியாளர்கள் தகவல் தெரிவிப்பவர்களாகவும் முன்சீப் , கர்ணம் என்ற அலுவலர்களின் பணிகளுக்கு உதவியாகவும் இருந்து வந்துள்ளனர்.

    கர்ணம் என்ற அலுவலர்கள் கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் , நிலங்களை தணிக்கை செய்து பயிர் சாகுபடியை அடங்களில் பதிவு செய்தல் , விவசாயப் புள்ளி விவரங்கள் சேகரித்தல் , நில வரி மற்றும் அரசுக் கடன்கள் தொடர்பான கணக்குகளைப் பராமரித்தல் , ஆக்கிரமிப்புகளுக்குத் தகுந்த தீர்வை விதிக்க பரிந்துரை செய்தல் , அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளைக் கண்காணித்து உடனுக்குடன் தகவல் தெரிவித்தல் , சர்வே அடையாளங்களைப் பாதுகாத்தல் , கனிம வளங்களைப் பாதுகாத்தல் , இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர் . இன்று கர்ணம் என்ற பணியாளர் இல்லாமல் போனதனால் நம் நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு உள்ளது என்ற உண்மையான புள்ளி விவரத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது .மேலும் நாட்டில் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்பட்டும் ,இயற்கை வளங்கள் அளிக்கப்பட்டும் , சர்வே அடையாளங்கள் அளிக்கப்பட்டும் , பகுதி அளவாக குறைந்துவிட்டன

    முன்சீப் என்ற அலுவலர்கள் தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட கிராமத்தின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு [Regulation 11 of 1816 and Regulation 4 of 1821 ] , குற்றங்களைத் தவிர்த்து குற்றங்கள் குறித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுதல் [ Section 45 ofCRPC ] , ரூ 50 /- க்கு குறைவான மதிப்புள்ள சொத்து வழக்குகளைப் பைசல் செய்தல் [ Act 1 of 1889 ] , பிறப்பு , இறப்புக் கணக்குப் பதிவு செய்தல் [Act 111 of 1899 ] , இருப்புப் பாதைகள் பாதுகாத்தல் , அரசுக் கட்டிடங்களைப் பாதுகாத்தல் , நீர்பாசனப் பணிகள் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் , பொது சுகாதாரம் மற்றும் பொது வினியோகம் , ஆகிய பணிகளையும் நிலவரி மற்றும் அரசுக்கு சேர வேண்டிய இனங்களை வசூல் செய்தல் போன்ற பணிகளையும் , இதர முக்கியத்துவம் வாய்ந்த பணிகளையும் [ Cattle Trespass Act-1 of 1871 and Treasure Trove Act-6 1878 ] மேற்கொண்டு வந்துள்ளனர் . வருவாய் அதிகாரியாக மட்டுமல்லாது கிராமத்தின் பொது நிர்வாகத்தையும் கவனித்து வந்துள்ளனர் .இன்று மேலே கண்ட பல்வேறு வகைப்பட்ட பணிகள் மட்டும் இல்லாமல் பல முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் கிராம நிர்வாக அலுவலர்களின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது . ஆனால் இந்த பணிகளை மேற்கொள்ள இவர்களுக்கு முறையான கால இடைவெளி கிடைப்பதில்லை .

    இன்றைய சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் எதிர் கொள்கிற பிரச்சனைகள் தொகு

    பல கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டமைப்பு என்பது சிறப்பாக இல்லை அதன் சுவர் , கதவு ஜன்னல் என அனைத்திலும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது . கழிப்பிட வசதி , மின் வசதி , குடியிருப்பு வசதி இல்லாமல் பாழடைந்து பராமரிக்கப்படாமல் உள்ளது .எனவே இது போனற கிரமங்களில் உள்ள கிராம கணக்குகளைப் பராமரிப்பதில் அந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிரமம் ஏற்ப்பட்டுள்ளது . எனவே அரசாங்கம் இதனை கவனத்தில் கொண்டு இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுப்பது அவசியமகிறது .

    கிராம கணக்குகளை புதுப்பித்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருப்பதாலும் ஒரு கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்பில் இரண்டு,மூன்று கிராமங்கள் இருந்ததாலும் கிராம கணக்குகள் மோசமான நிலையிலும் , முறையாகப் பராமரிக்கப் படாமலும் மேலும் சர்வே அடையாளங்கள் பகுதி அளவுக்கு மேல் மக்களால் அழிக்கப்பட்டு விட்டன . எனவே Resurvay பணி மேற்கொண்டு கிராம கணக்குகளை மறு கட்டமைப்பு செய்வதும் அவசியமாகிறது . கிராம நிர்வாக அலுவலர்கள் களப்பணி மேற்கொள்பவர்கள் அலுவலகத்தில் அம்ர்ந்த படியே வேலை பார்க்க முடியாது .பணியின் காரணமாக எங்கோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் இருந்து நாற்பது , ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்திற்கும் சில நேர்வுகளில் கோட்டாச்சியர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் மாதத்தில் பல நாட்கள் சென்று வருகின்றனர் . ஆனால் இவர்களுக்கான பயணப்படிகள் மிகவும் குறைவக வழங்கப்படுகிறது .

    மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் இரண்டு , மூன்று கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்புக்களை வகிக்கின்ற போது அந்த கிராமங்களில் மேற்கொள்கின்ற பணிகளுக்காக எவ்விதமான செலவுத் தொகைகளோ , அதிகப்படியான ஊதியமோ அரசாங்கத்தால் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை .இது போன்ற காரணங்கள் திறமையாகவும் நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்களையும் சற்று தடுமாறச் செய்து விடுகிறது என்பது இன்று உள்ள நிலை .


    வருத்திற்கு வருடம் மாறுகின்ற மக்கள் நலத் திட்ட பணிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க ஒரு குறிப்பிட்டத் தொகையை நிர்வாக அலுவலர்கள் செலவழிக்கின்றனர் .ஆனால் அதற்கான செலவுத் தொகை அவர்களுக்கு முன் கூட்டியே வழங்கப்படுவது இல்லை . அவ்வாறு வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை .இதற்கு நமது அரசாங்கம் கூறாமல் கூறும் பதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருமானம் அதிகமாம் . இது இலஞ்சம் வாங்கி மக்களிடம் கெட்ட பெயரை வாங்கி உங்கள் பணியை மேற்கொள்ளுங்கள் என்று ஊக்குவிப்பது போல் அல்லவா உள்ளது . மேலே கண்ட பல்வேறு வகைப்பட்ட பணிகளின் காரணமாகவும் ,தங்கள் பணிகளைச் செய்ய போதிய கால அவகாசம் கிடைக்காமல் இருப்பதாலும் , ஒரு வேலையை செய்து முடிப்பதற்கு முன்னதாகவே வேறொரு பணிகள் கொடுக்கப்படுவதாலும் கிராம நிர்வாக அலுவலர்களால் எந்த வேலையையும் முழுமையாகவும் , தெளிவாகவும் செய்து முடிக்க இயலாத சூழல் இன்று நிலவி வருகிறது .

    நாங்கள் கொடுக்கும் பணிகளைச் செய்து கொடுப்பது மட்டுமே கிராம நிர்வாக அலுவலர்களின் வேலை .அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று எங்களுக்குத் தெரியாது ,அதனைப் பற்றிய கவலையும் எங்களுக்கு இல்லை , கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களின் குறைகளை அரசாங்கத்திடம் கூறி தேவையான வசதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் உயர் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர் . ஒரு வட்டார அளவில் செயல்படும் , மாவட்ட அளவில் செயல்படும் திறமையான அலுவலர்களை விட கிராமங்களில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் திறமையான நிர்வாகத்தினால் மட்டுமே அந்த கிராமம் சிறப்பாக வளர்ச்சி பெற முடியும் . ஒரு மாவட்டத்தின் கடைக் கோடியில் உள்ள ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பது அந்த கிராமங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கே அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது .

    அரசாங்கத்தின் ஒரு சில நடவடிக்கைகள் மூலம் இன்றைய சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்மையான முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் . நமது அரசாங்கம் கிராம நிர்வாக அலுவலர்களின் எதிர்கால முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு என்று தனித் தேர்வினை நடத்தி பணியில் அமர்த்தி வருகிறது . இருந்த போதிலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிக பட்சம் பதவி உயர்வு இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது . கிராம நிர்வாகம் பற்றி அறிந்திராத இளநிலை உதவியாளர்களுக்கு கூட வருவாய் துறையில் உயர் பதவிகள் வழங்கப்படுகிறது . ஆனால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை

    .வருவாய் துறையின் சார்பாக பல்வேறு வகையான பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் . இருந்த போதிலும் வருவாய் துறையில் உள்ள ஊழியர்களின் மத்தியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் துறையை சார்ந்தவர்கள் அல்ல என அன்னியமாக பார்க்கும் சூழலே இன்று நிலவி வருகிறது . எனவே வருவாய்த் துறை என்பது நிர்வாக அலுவலர்களின் தாய்த் துறை . கிராம நிர்வாக அலுவலர்கள் நிர்வாகத் துறையைச் சார்ந்தவர்கள் . இன்று சட்டம் ,ஒழுங்கு பிரச்சினைகள் தவிர மற்றபடி வருவாய்த் துறைக்கும் மற்ற துறைகளுக்கும் அதிகம் தொடர்பு இருக்கவில்லை ,ஒவ்வொரு துறையும் ஒரு தனித்த அமைப்பாக செயல்ப்ட்டுக் கொண்டிருக்கின்றன . கிராம நிர்வாக அலுவலர்களே மற்ற துறைகளை , வருவாய்த் துறையுடன் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகின்றனர் .

    கிராமங்களில் உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளும் அரசின் நிகழ்ச்சிகளின் போது அதற்காக ஆரம்பம் முதல் இறுதி வரை பல்வேறு பணிகளை மேற்கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்த கிராம நிர்வாக அலுவலர்களை உயர் அலுவலர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை . கிராம நிர்வாக அலுவலர்களை வழ்த்திப் பேசி அவர்களை உற்சாகப் படுதுவதற்குக் கூட உயர் அலுவலர்கள் முன் வருவதில்லை . இது போன்ற சமயங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் மக்களோடு மக்களாக நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கும் நிகழ்வு வேடிக்கையானது . தன்னுடைய பணிக் காலங்களில் வருவாய் ஆய்வாளர் , வட்டாச்சியர் , கோட்டச்சியர் , மாவட்ட ஆட்ச்சியர் என பொறுப்பு வகிக்கின்ற அந்த குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே தாங்கள் பணிபுரிகின்ற இடத்திலேயே தங்கி வேலை பார்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது . ஆனால் அதிக பட்சம் பதவி உயர்வுகளே இல்லாத கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் காலம் வரை தன் சொந்தங்களைப் பிரிந்து அதே கிராமத்தில் தங்கி பணிபுரிய வேண்டும் என்ற நிலை ஒரு தனி மனித உரிமை மீறலாகவே தோன்றுகிறது .

    கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு மாதத்தில் முப்பது நாட்களும் இரவு பகலாக வேலை பார்த்தாலும் இவர்களின் பணி ஓய்ந்து விடாது . இவர்களுக்கு முறையான விடுமுறை இல்லை என்பதும் ஒரு மிகப் பெரிய குறையாக உள்ளது .அரசின் பல்வேறு துறைகளில் மன உழைச்சல் இல்லாத மென்மையான பணிகளை மேற் கொள்பவர்களுக்கு கூட அதிகப்படியான ஊதியங்கள் வழங்கப்படுகிறது . ஆனால் ஆக்கம் தரும் மிக உன்னதமான மக்கள் நலப் பணியை மேற்கொள்ளும் , உடலாலும் , மனதாலும் சோர்வடைந்திருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவே . தகுதி வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் சேர்ந்தாலும் கூட இது போன்ற நிர்வாக அடிப்படையில் ஒரு சில குறைபாடுகள் இருப்பதினால் ஒரு சில வருடங்களிலேயே அரசுப் பணித் தேர்வுகளை எழுதி வேறு துறைகளுக்குச் சென்று விடுகின்றனர் .இதனால் கிராம நிர்வாகம் வழுவிழந்து , பொலிவு இழந்து கணப்படுகிறது என்பது இன்று உள்ள நிலை . ,

    கிராம கணக்குகளை கணிணி மயமாக்குதல் தொகு

    கிராம கணக்குகளை புதுப்பித்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருப்பதாலும் , ஒரு கிரமா நிர்வாக அலுவலர் பல கிராமங்கலுக்கு பொறுப்பு வகித்ததாலும் , அவை மிக மோசமன நிலையிலும் , குழறுபடிகள் நிறைந்தும் காணப்படுகின்றன .அவற்றை முறையாகப் புதுப்பித்து கணிணி மயமாக்குதல் அவசியமாகிறது ,”அ” பதிவேடு , FMP , திருத்தப்பட்ட தூய கிராம சிட்டா , வருடத்திற்கு வருடம் மாறுகின்ற 7 மற்றும் 10 ல் பிரிவு 2 , அடங்கல் , கணக்கு எண் 13 ,14 போன்ற அனைத்து கிராம கணக்குகளும் கணிணி மயமாக்கப்பட வேண்டும் .மேலும் நில வரி மற்றும் இதர வரிகளை இணைய வழியாக செலுத்தி இரசீது பெறும் திட்டம் அறிமுகம் செயப்பட வேண்டும் . நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகின்ற இந்த சூழலில் மக்களின் மிகப்பெரிய சொத்து அவர்களின் நில உடைமைகள்தான் . எனவே இந்த மாறுதல்களையும்,திருத்தங்களையும் ஒரே நாளில் செய்து விட முடியாது .கிரமங்களின் பரப்பளவு ,மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பல மாதங்கள் ,ஒரு சில வருடங்கள் கூட ஆகலாம் .அதனை பரிசீலனை செய்து அதற்கு சரியான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் .

    மனுதாரர்கள் ஒவ்வொரு சான்றுகளுக்காகவும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ,வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ,வட்டாச்சியர் அலுவலகம் , என அலைவதை தவிர்க்கும் பொருட்டு தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சான்றிதழ்களும் இணைய வழியாக வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதன்படி தற்போது ஒரு சில மாவட்டங்களில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது .இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கணிணி மையம் என்ற தனியார் அமைப்பிற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது .பொதுமக்கள் இந்த மக்கள் கணிணி மையத்திற்கு சென்று பல்வேறு சான்றுகள் வேண்டி இணைய வழியாக விண்ணப்பம் செய்து குறிப்பிட்ட நாளுக்கு பிறகு சான்றிதழ்களை மக்கள் கணிணி மையம் வழியாகவே பெற்றுக்கொள்ள முடியும் .

    ஆனால் இந்த சேவையில் ஒரு சில குறைபாடுகளையும் காண முடிகிறது .பொதுமக்கள் மக்கள் கணிணி மையம் வழியாக பல்வேறு சான்றுகள் வேண்டி விண்ணப்பம் செய்து கிராம நிர்வாக அலுவலர் ,வருவாய் ஆய்வாளர் ,வட்டாச்சியர் என யாரையும் சந்திக்காமலே சான்றிதழ் பெறும் சூழல் உருவாகியிருக்கிறது .பொதுமக்கள் விண்ணப்பம் செய்வதோடு தனது வேலை முடிந்தது என்றென்னி கிராம நிர்வாக அலுவலரின் , வருவாய் ஆய்வாளரின் , வட்டாச்சியரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தனது வேலையை பார்க்க சென்று விடுகின்றனர் .

    குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதாலும் , உயர் அலுவலர்கள் நெருக்கடி கொடுப்பதாலும் , விசாரணை மேற்கொள்ளாமல் சான்றிதழ் வழங்கும் சூழல் உருவாகியிருக்கிறது . மக்கள் கணிணி மையம் தனியார் அமைப்பாக இருப்பதாலும் , தகவல் தொழில் நுட்பங்கள் பெருகி வருவதாலும் , எந்த ஒரு தகவலையும் தவறாக காட்டும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது . தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் அவற்றிற்கு இல்லை . கிராம நிர்வாக அலுவலரைக் கூடச் சந்திக்காமல் சான்றிதழ் பெறுவது பல தவறுகளுக்கு வழி வகுக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும் . எனவே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து இவ்வசதிகளை வழங்குவதே சரியானதாக இருக்க முடியும் . மேலும் ஒவ்வொரு சான்றுகளுக்கும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுது . கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு இவ்வசதிகளை வழங்குகின்ற போது பெயரளவில் உள்ள வருவாய்த் துறையினால் அரசின் வருவாயும் அதிகரிக்கும் .

    தகவல் தொழில் நுட்ப வசதிகளை வழங்குதல் தொகு

    கிராமங்களில் நடைபெறக்கூடிய சமூக விரோதச் செயல்களைக் கண்காணிக்க ,சட்டத்திற்கு புறம்பான செயல்களைக் கண்காணிக்க , என கிராமங்களின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனைக் கண்காணிக்கும் மைய்யமாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மாற வேண்டும் . மேலும் அவ்வப்போது தொடங்கும் அரசின் நலத் திட்டங்களை அறிவிக்கவும் , மக்கள் பல்வேறு சான்றுகள் பெறுவது குறித்தான விழிப்புணர்வு பெறவும் , சமுதாய விழிப்புணர்வு பெறவும் , ஒவ்வொரு தெருவிற்கும் ஒலிப்பெருக்கி வசதிகள் வழங்கப்பட வேண்டும் .

    கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் விரிவாக்கம் தொகு

    நம் நாடு வேளாண்மையைச் சார்ந்த நாடு , நம் நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை முக்கிய பங்கினை வகித்து வருகிறது . கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்குகின்ற புள்ளி விவர அறிக்கையின் அடிப்படையில் தான் நாட்டின் விவசாய பொருளாதார புள்ளி விவர அறிக்கை தயாரிக்கப்படுகிறது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . மாதா மாதம் பயிர் ஆய்வு பணி மேற்கொண்டு அடங்கள் எழுதுவது கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளில் ஒன்றாக இருக்கிறது . ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் எந்த நாட்களில் அல்லது தேதிகளில் பயிர் ஆய்வு பணி மேற்கொள்ள வேண்டும் , எத்தனை நாட்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாக வரையறை செய்யப்படவில்லை .இந்த பணியினை மேற்கொள்வதற்கான கால அளவு கிராமங்களுக்கு கிராமம் பரப்பளவின் அடிப்படையில் வேறுபடும் .ஒவ்வொரு கிராமமும் சராசரியாக மூன்றாயிரம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாக இருக்கிறது .ஆக்கிரமிப்புகளை கண்காணித்தல் , சர்வே கற்களை கண்காணித்தல் , அரசு நிலங்களில் மரங்கள் வெட்டப்படுகின்றனவா ? , சட்டத்திற்கு விரோதமாக கனிம வளங்கள் பயன்படுத்தப்படுகிறதா  ? போன்றவைகளை கண்காணித்தல் , போன்ற பணிகளுடன் பயிர் ஆய்வு பணி மேற்கொண்டு அடங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு காலை முதல் மதியம் வரை நூறு ஏக்கர் பரப்பளவை பயிர் ஆய்வு செய்யலாம் என வைத்துக்கொள்வோம் .

    மதியத்திற்கு மேல் மக்களிடம் நிலவரி & மரவரிகளையும் , இதர பாக்கிகளையும் வசூல் செய்வது , அதற்கான கணக்குகளை முறையாக எழுதி பராமரிப்பது , நில உரிமை மாற்றத்திற்காக நில அளவை பணி மேற்கொள்வது , பட்டா மாற்றம் , உட்பிரிவு மாற்றம் போன்ற நில உரிமை மாற்றத்திற்கான விண்ணப்பங்களைப் பெற்று , பரிசீலனை செய்து , அதனை உரிய அலுவலருக்குப் பரிந்துரை செய்வது , அது தொடர்பான கணக்குகளில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்வது , அது தொடர்பான பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பது நில உரிமைச் சான்று , அனுபோகச் சான்று , அடங்கல் சான்றுகள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளவும் மக்களின் நலனுக்காக அரசு நிலங்களோ ,பட்டா நிலங்களோ அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படும் போதோ , அல்லது நில ஒப்படை செய்யும்போதோ அதற்கான அறிக்கை தயாரிப்பது போன்ற பணிகளையும் நில அளவைத் துறையின் சார்பாக , நில அளவை பயிற்சி பெற்ற , ஒரு முழு நேர அரசு பணியாளர் பணிபுரிந்தால் மட்டுமே சரியாகவும் தெளிவாகவும் செய்ய முடியும் .

    மேற்கண்ட நிலை உருவாகின்ற போதுதான் நம்நாட்டின் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்ற உண்மையான புள்ளி விவரத்தை நாம் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் . முடிந்த அளவிற்காவது நம் நாட்டின். இயற்கை வளங்களையும் , கனிம வளங்களையும் ,பாதுகாத்துக் கொள்ள முடியும் . கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்போது உள்ள பல்வேறு வகையான பணிச் சுமைகளின் காரணமாக மேற்கண்ட பணிகளை சரியான நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றனர் . மக்களிடம் வசூல் செய்ய வேண்டிய நிலவரி & மரவரிகளை வசூல் செய்ய இயலாமல் ஜமாபந்தி நாட்களில் தாங்களே செலுத்தி கணக்கை முடிக்கும் கட்டாயத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் தள்ளப்பட்டிருக்கிறனர்.


    கிராமத்தின் பிறப்பு , இறப்பு பதிவாளராகவும் & சான்றுகள் வழங்குபவராகாவும் , வருமானச் சான்று , சாதிச் சான்று , இருப்பிடச் சான்று , வாரிசுச் சான்றுகள் , வேண்டி வரப் பெற்ற விண்ணப்பங்கள் ,சொத்துமதிப்புச் சான்று ,சிறுவிவசாயி சான்று , ஆதரவற்ற குழந்தைச் சான்று , ஆதரவற்ற விதவைச் சான்று , கணவனால் கைவிடப்பட்டவர் சான்று ,கலப்புத் திருமணச் சான்று ,பள்ளிச் சான்றுகள் தொலைந்ததற்காக வழங்கப்படும் சான்று , போன்ற மேலும் பல்வேறு வகையானச் சான்றுகள் வழங்க விசாரணை மேற்கொண்டு அதனை வட்டாச்சியருக்குப் பரிந்துரை செய்வது .சமுக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோரிய விண்ணப்பங்களைப் பெறுவது அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு வட்டாச்சியருக்குப் பரிந்துரை செய்வது போன்ற பணிகளையும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர் . கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை இல்லாமல் மேற்கண்ட பல்வேறு வகையான சான்றுகள் & உதவிகளை வட்டாச்சியரால் வழங்கஇயலாது என்பது குறிப்பிடத்தக்கது .

    வருத்திற்கு வருடம் புதிது புதிதாக மாறுன்கிற மக்கள் நலத் திட்டங்களான உழவர் பாதுகாப்புத் திட்டம் , மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் , வண்ணத் தொலைக்காட்சிபெட்டி வழங்கும் திட்டம் , மின் விசிறி , மிக்சி , கிரைண்டர் வழங்கும் திட்டம் , அம்மா திட்டம் , ஆதார் திட்டம் ,விரைவு பட்டாமாற்ற திட்டம் , போன்ற பல முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு களப்பணி மேற்கொள்வது அதற்கு செயல் வடிவம் கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர் .ஆனால் மேலே கண்ட பல்வேறு வகையான முக்கியத்துவம் வாய்ந்த சான்றுகள் , உதவித் தொகைகள் , மக்கள் நலத் திட்டப் பணிகள் , போன்ற பல்வேறு வகையான பணிகளையும் வருவாய் துறையின் சார்பாக கணிணி அறிவு நிறைந்த , ஒரு முழுநேர அரசுப்பணியாளர் மேற்கொண்டு செய்தால் மட்டுமே சரியாகவும் , தெளிவாகவும் குளறுபடிகள் இல்லாமலும் பார்த்துக் கொள்ள முடியும் .


    கிராம நிர்வாக அலுவலரின் தகுதியை உயர்த்துதல் தொகு

    கிராமங்களில் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிக பட்சம் பதவி உயர்வு இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது . எனவே கிராம நிர்வாக அலுவலர்களின் திறனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த நிர்வாக அலுவலர்கள் அனைவரையும் group 2 என்னும் நிலையில் தரம் உயர்த்துதல் வேண்டும் . இனி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளவர்கள் பட்டப்படிப்பு முடிதவர்கள் [grup 2 ]என்ற நிலையில் தேர்வு செய்யப்பட வழிவகை செய்யப்பட வேண்டும் .

    அவர்களுக்கான தேர்வு முறையிலும் சில மாறுதல்களைச் செய்யலாம் .இதன் மூலம் தகுதியானவர்கள் மட்டுமே நிர்வாக அலுவலர்களாக தேர்வு செய்யப்படுவது மேலும் உறுதியாகும் .மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பணிபுரிய வழிவகை செய்யப்பட வேண்டும் . அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட நிர்வாகத் துறையின் கீழ் பணிபுரிய விருப்பம் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் வேறு துறைகளுக்கு மாறுதல் வழங்கி அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் .

    இதில் ஏற்படக் கூடிய பிரச்சினை என்னவென்றால் பத்தாம் வகுப்பு தரத்தில் உள்ளவர்கள் எங்கள் வேலை வாய்ப்பு பறிபோகும் என்று போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது . ஆனால் பத்தாம் வகுப்பு தரத்திலான கூடுதல் பணியிடங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதால் , மிகச் சிறந்த நிர்வாகத்தை எதிர் பார்க்கும் அனைவரும் இதனை வரவேற்ப்பார்கள் . நமது அரசாங்கம் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்காக பல்லாயிர கணக்கான காவல் பணிகளை உருவாக்கி உள்ளது . மிகச் சிறந்த அறிவாளிகளாக மாணவர்களை உருவாக்க இலட்சக் கணக்கில் ஆசிரியர் , பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி , பணியமர்த்தி வருகிறது. இந்த குடிமக்களை வழி நடத்த , மிகச் சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க கூடுதல் பணியாளர்களை நியமிப்பது குறித்து நமது அரசு ஆலோசனை செய்ய வேண்டும் .

    இன்று கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் தங்கி பணிபுரியும் நேரத்தை விட வட்டாச்சியர் அலுவலகத்திற்குத் தான் அதிகம் செல்ல வேண்டி இருக்கிறது . எனவே அதிக பட்ச்சம் இன்று கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் தங்கி பணிபுரியும் சூழல் உருவாக வேண்டும் .

    கிராமம் , ஒன்றியம் , வட்டார அளவில் " நிர்வாகத் துறை "யை ஏற்படுத்துதல் தொகு

    கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒன்றிய , வட்டார , மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் பதவி உயர்வுகள் வழங்குதல் தொகு

    மேலும் சில வரிகள் தொகு

    கிராம நிருவாக அலுவலர் தேர்வு தொகு

    கிராம நிருவாக அலுவலர் பணிக்கான நியமனங்கள் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பெறும் எழுத்துத் தேர்வில் முதன்மை பெற்றவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி நியமிக்கப்படுகின்றனர்.

    இதையும் பார்க்க தொகு

    வருவாய்த்துறை இணையதளம் தொகு

    "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Yokishivam/மணல்தொட்டி&oldid=1961698" இலிருந்து மீள்விக்கப்பட்டது