ஜூலை 2007
ஜூலை | ||||||
தி | செ | பு | வி | வெ | ச | ஞா |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |
ஜூலை 2007 2007 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு செவ்வாய்க்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஆடி மாதம் ஜூலை 17 இல் ஆரம்பித்து ஆகஸ்ட் 16 இல் முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள் தொகு
- ஜூலை 3 - திருவோண நோன்பு
- ஜூலை 4 - சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்
- ஜூலை 7 - கலிக்கம்ப நாயனார் குருபூசை
- ஜூலை 10 - ஏகாதசி நோன்பு, கார்த்திகை நோன்பு
உலக நிகழ்வுகள் தொகு
செய்திகள் |
- ஜூலை 2 - அவுஸ்திரேலியா, பிறிஸ்பேன் விமான நிலையத்தில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற இந்திய மருத்துவரான முகமது ஹனீஃப் கிளாஸ்கோ விமானநிலையக் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டார். (ரொய்ட்டர்ஸ்)
- ஜூலை 4 - 2014ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ரஷ்யாவின் சோச்சி (Sochi) நகரில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது. (IOC)
- ஜூலை 4 - பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் காசாவில் கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்டன் 4 மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார். (பிபிசி)
- ஜூலை 5 - இந்தியாவில் நாகாலாந்தைச் சேர்ந்த ஆயுததாரிகள் அருகிலுள்ள அஸ்ஸாம் மாநிலத்தின் கிராமங்களைத் தீயிட்டுக் கொழுத்தினர். (பிபிசி)
- ஜூலை 5 - வடகிழக்கு சீனாவில் கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டு 33 பேர் படுகாயமடைந்தனர். (ஏபிசி)
- ஜூலை 7 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ், பிரெஞ்சு வீராங்கனையான மரியன் பார்ட்டோலியை 6-4 6-1 என்ற கணக்கில் வென்று வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றார். (பிபிசி)
- ஜூலை 7 - வடக்கு ஈராக்கில் சந்தைப் பகுதியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 105 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூலை 7 - புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. சீனப் பெருஞ்சுவர், ஜோர்டானின் பெத்ரா, பிறேசிலின் ரெடிமர் ஏசு சிலை, பெருவில் உள்ள மச்சுபிச்சு என்ற புராதன கட்டுமானம், மெக்சிகோவின் சிச்சென் இட்சா பிரமிட், இத்தாலியின் கொலாசியம், இந்தியாவின் தாஜ் மகால் ஆகியவை புதிய 7 உலக அதிசயங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. (ஏபிசி)
- ஜூலை 8 - முன்னாள் இந்தியப் பிரதமர் சந்திரசேகர் (வயது 80) டில்லியில் காலமானார். (தினக்குரல்)
- ஜூலை 8 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியீன் இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் ஃபெடரர் ஸ்பெயினின் நாடலை 7–6, 4–6, 7–6, 2–6, 6–2 என்ற கணக்கில் தோற்கடித்து ஐந்தாவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார். (பிபிசி)
- ஜூலை 10 - இந்தியாவின் மத்திய மாநிலமான சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் பதுங்கு தாக்குதலில் 23 காவல்படையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூலை 11 - பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செம்மசூதிக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றும் முகமாக இராணுவத்தினர் மசூதியின் மீது தாக்குதல் நடத்தியதில் மசூதியின் மதகுரு அப்துல் காஸி உட்பட குறைந்தது 50 பேர் பலியாகினர். (பிபிசி)
- ஜூலை 14 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். (சண்டே ரைம்ஸ்)
- ஜூலை 14 - பாகிஸ்தானில் வாசிரிஸ்தான் என்ற இடத்தில் தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 24 பாகிஸ்தானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (எட்மண்டன் சன்)
- ஜூலை 14 - அவுஸ்திரேலியா, பிறிஸ்பேனில் ஜூலை 2 இல் கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவரான முகமது ஹனீஃப் கிளாஸ்கோ விமானநிலையக் குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிரவாத அமைப்பு ஒன்றிற்கு உதவி செய்ததாக அவுஸ்திரேலிய காவற்படையினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். (பிபிசி)
- ஜூலை 16 - வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கைது செய்யப்பட்டுள்ளதாக வங்க தேசத் தொலைக்காட்சி சேவை அறிவித்துள்ளது. (ஏபி)
- ஜூலை 16 - ஜப்பானில் 6.8 அளவு நிலநடுக்கம் காரணமாக 3 பேர் கொல்லப்பட்டு 33 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஜூலை 17 - பிறேசிலில் சாவோ பவுலோ என்ற இடத்தில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 176 பேர் உட்பட 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூலை 17 - உக்ரையினில் கொடிய நச்சுப் பொருளான பாஸ்பரஸ் எரியத்தை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து தீப்பிடித்ததில் லிவ் பகுதியில் நச்சு மேகம் உருவாக்கியுள்ளது. (ஏபி)
- ஜூலை 18 - மும்பாயில் பொரிவாலி என்னும் இடத்தில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூலை 18 - இலங்கை கிழக்குக் கடற்பரப்பில் 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உணரப்பட்டது. (புதினம்)
- ஜூலை 21 - இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பட்டீல் தெரிவு செய்யப்பட்டார். (பிபிசி)
- ஜூலை 21 - ஹரி பொட்டர் நாவலின் ஏழாவதும் கடைசியுமான ஹரி பொட்டர் அன்ட் த டெத்லி ஹல்லோஸ் உலகெங்கனும் வெளியிடப்பட்டது. (ரொய்ட்டர்ஸ்)
- ஜூலை 23 - பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 35 தீவிரவாதிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூலை 23 - ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னர் சாஹிர் ஷா (அகவை 92) நீண்ட கால சுகவீனம் காரணமாக காபூலில் மரணமடைந்தார். (பிபிசி)
- ஜூலை 24 - லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது. (ராய்ட்டர்ஸ்), (தினக்குரல்)
- ஜூலை 28 - ஆந்திராவில் கமாம் மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை அடக்க காவற்துறையினர் சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர். (ஆந்திராநியூஸ்)
- ஜூலை 29 - கிளாஸ்கோ விமானநிலையக் குண்டுவெடிப்பு தொடர்பாக பிறிஸ்பேனில் கைதுசெய்யப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் முகமது ஹனீஃப் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பினார். ஆனாலும் அவரது ஆஸ்திரேலிய நுழைவு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- ஜூலை 31 - சட்டவிரோதமாக ஆயுதங்கள் வாங்கிய குற்றத்திற்காக பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் 6 வருட கடுங்காவல் தண்டனை பெற்றார். (பிபிசி)
- ஜூலை 31 - ஆப்கானிஸ்தானில் ஜூலை 19, 2007இல் கடத்திச்செல்லப்பட்ட தென் கொரியாவைச் சேர்ந்த 23 கிறிஸ்தவ நிவாரணப் பணியாளர்களில் ஒருவரின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. (பிபிசி)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- ஜூலை 6 - கிழக்கிலங்கையில் குடும்பிமலையில் இடம்பெற்ற சண்டையில் ஆறு இராணுவத்தினர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூலை 10 - விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவி செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு தமிழர் ஒருவர் சிட்னியில் கைது செய்யப்பட்டார். (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- ஜூலை 10 - மாங்குளம் பகுதியில் தமிழீழ சுகாதார சேவைக்குச் சொந்தமான வாகனம் ஒன்றின் மீது நடத்தப்படட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவு பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், வேறு இருவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். (புதினம்)
- ஜூலை 11 - முல்லைத்தீவு அளம்பிலில் தேவாலயம் மற்றும் மீன்வாடிகள் மீது சிறிலங்கா வான்படையினர் நடத்திய தாக்குதலில் சிறுவன் உட்பட பொதுமக்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்குழந்தை உட்பட பொதுமக்கள் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். (புதினம்)
- ஜூலை 11 - கிழக்கிலங்கையில் குடும்பிமலை பகுதியை கைப்பற்றியதுடன் கிழக்கிலங்கையை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. (பிபிசி)
- ஜூலை 12 - வவுனியாவில் பறந்து கொண்டிருந்த இலங்கை வான்படையின் கிபீர் வானூர்தியை வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். (புதினம்)
- ஜூலை 14 - மன்னாரில் இருமுனைகளில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையில் 16 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3 விடுதலைப் புலிகள் பலியாயினர். இராணுவத்தினரின் பவள் கவச வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர். (வாஷிங்டன் போஸ்ட்), (புதினம்)
- ஜூலை 17 - விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகள் செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட மூன்று தமிழரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். (ஏபிசி)
- ஜூலை 19 - குடும்பிமலையைக் கைப்பற்றிய வெற்றியை இலங்கை அரசு கொழும்பில் வெற்றி விழாவாகக் கொண்டாடியது. (பிபிசி)]
- ஜூலை 20 - மன்னார், நீலச்சேனை என்னும் இடத்தில் அமைந்திருந்த இலங்கை இராணுவத்தளம் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதில் 10 இராணுவத்தினரும் 4 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)
- ஜூலை 23 - யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் அனைத்துலக தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் மரியநாயகம் அலோசியஸ் (வயது 26) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். (புதினம்)
- ஜூலை 24 - வவுனியா செட்டிக்குளத்தில் இலங்கை இராணுவத்தினரின் பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் குறைந்தது 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- ஜூலை 30 - கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஜூலை 15இல் கடத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொறியியலாளரின் சடலம் அவிசாவளையில் கண்டெடுக்கப்படட்து. (டெய்லி மிரர்)
- ஜூலை 31 - யாழ்ப்பாணம் வரணியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் மூன்று இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர். (புதினம்)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்