சுருளி ராஜன்
சுருளி ராஜன் (Suruli Rajan, 14 சனவரி 1938 – 5 திசம்பர் 1980) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.[1] இவருக்கு 1981-82 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சுருளி ராஜன் | |
---|---|
பிறப்பு | பொன்னையா பிள்ளை. சங்கரலிங்கம் 14 சனவரி 1938 பெரியகுளம், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 5 திசம்பர் 1980 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 42)
பணி | நடிகர், |
செயற்பாட்டுக் காலம் | 1965-1980 |
வாழ்க்கை
தொகுநடிகர் சுருளி ராஜன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும்.[2] சுருளி அருவியருகே இருந்த இவரது விருப்ப தெய்வமான முருகனின் திருப்பெயரிலான சுருளிவேலர் சுவாமி என்ற பெயரை இவர் திரையுலகிற்காக மாற்றி சுருளிராஜன் என்று வைத்துக் கொண்டார். இவரின் தந்தையார் பெயர் பொன்னையா பிள்ளை. இவர் அவ்வூரில் உள்ள விவசாயப் பண்ணையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்குப்பின் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து சிறு தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.
நடிப்பு
தொகு- இவர் தனது வாழ்க்கையை மதுரையில் வேலை பார்த்துக்கொண்டே தன்னார்வ நாடகங்களில் ஆரம்ப காலங்களில் நடித்தார்.
- ஆகையால் 1959 ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார்.
- அதன் பிறகு கலைஞரின் காகிதப்பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார்.
- பின்னர் தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்படக்கழகத்தால் எடுக்கப்பட்ட இரவும் பகலும் (1965) என்ற திரைப்படத்தில் நடித்தார்,
- அப்போதே "காதல் படுத்தும்பாடு" என்ற படத்திலும் நடித்தார். 1970 இல் திருமலை தென்குமரி, 1971 இல் ஆதிபராசக்தி என்ற படத்தில் சென்னை மீனவர் பேச்சுப்பேசி அனைவரையும் தன் பக்கம் திருப்பினார்.
- மேலும் இவர் தமிழ் திரையுலகில் 1970–1980 வரையிலான காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்தார்.
- பின்பு 1980 ஆம் ஆண்டு ம. எ. காஜாவின் மாந்தோப்புக்கிளியே என்ற படத்தில் கஞ்சன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரானார்.[3][4]
- மேலும் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நான் ஆணையிட்டால் பாடல் காட்சியில் எம்ஜிஆருடன் இணைந்து தோன்றும் ஒரு காட்சியில் சக நடிகராக சுருளிராஜன் நடித்திருந்தார்.
- அதன் பிறகு எம்ஜிஆருடன் தேர் திருவிழா (1968) என்ற ஒரே படத்தில் மட்டுமே நடித்தார்.
- பின்பு சிவாஜி கணேசன் உடன் அஞ்சல் பெட்டி 520 (1969), ராஜ ராஜ சோழன் (1973), மனிதரில் மாணிக்கம் (1973), ராஜபார்ட் ரங்கதுரை (1973), தங்கப்பதக்கம் (1974), அன்பே ஆருயிரே (1975), ரோஜாவின் ராஜா (1976), தீபம் (1977), இளைய தலைமுறை (1977), அண்ணன் ஒரு கோயில் (1977), என்னைப்போல் ஒருவன் (1978), லாரி டிரைவர் ராஜாகண்ணு (1981), சத்ய சுந்தரம் (1981) மற்றும் ஹிட்லர் உமாநாத் (1982) போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
- மேலும் சுருளிராஜன் தனது ஆரம்ப காலத்தில் இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகராக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- அதில் சில குறிப்பிட்டதக்க திரைப்படங்கள் நான் (1967), மூன்றெழுத்து (1968), நீயும் நானும் (1968), அத்தை மகள் (1969), துலாபாரம் (1969), வீட்டுக்கு ஒரு பிள்ளை (1971), என்னைப்போல் ஒருவன் (1978) போன்ற திரைப்படங்கள் ஆகும்.
- பிறகு ஒளி பிறந்தது, மனிதரில் இத்தனை நிறங்களா, ஆறு புஷ்பங்கள், முரட்டுக்காளை, பைரவி பாலாபிசேகம், ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்ற பல குறிப்பிடதக்க படங்களில் நடித்துள்ளார்.
விருது
தொகுஇவருக்கு 1981-82 ஆம் ஆண்டிற்கான சிறந்த சிரிப்பு நடிகர் பட்டத்தை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது.
மரணம்
தொகுசிரிப்பு நடிகர் சுருளி ராஜன் தனது புகழின் உச்சியில் இருந்த போது 1980 ஆம் ஆண்டு 42 வயதில் மரணமடைந்தார்.[5]
நடித்த திரைப்படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ பிளாஷ்பேக்: ஒரே ஆண்டில் 50 படங்களில் நடித்த சுருளிராஜன். தினமலர் நாளிதழ். 8 மே 2017.
{{cite book}}
: CS1 maint: year (link) - ↑ உமா ஷக்தி, ed. (27 ஜூலை 2019). கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்! சுருளி ராஜன்!. தினமணி நாளிதழ்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938-ஆம் ஆண்டு பிறந்தார் சுருளி ராஜன். சுருளி அருவியருகே இருந்த இவரது விருப்ப தெய்வம் சுருளி வேலப்பரின் பெயர் இவருக்கு இடப்பட்டது. அவருக்கு சங்கரலிங்கம் என்று இன்னொரு பெயரும் உண்டு. ஆனால் சுருளி என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டார்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: year (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-27. Retrieved 2013-09-05.
- ↑ http://tamil.oneindia.in/movies/shooting-spot/2009/09/24-vivek-enacts-surulirajan-charecter-in-vaada.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ “மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”. விகடன் இதழ். 11 அக்டோபர் 2016.
42 வயதில், சினிமாவின் உச்சத்தில் இருந்த நேரத்தில் மரணமடைந்தார் சுருளிராஜன்
{{cite book}}
: CS1 maint: year (link)
வெளி இணைப்புகள்
தொகு- ஒரே ஆண்டில் 50 படங்களில் நடித்த சுருளிராஜன்! பரணிடப்பட்டது 2013-09-26 at the வந்தவழி இயந்திரம்
- புகழின் சிகரத்தில் இருந்தபோது சுருளிராஜன் திடீர் மரணம் பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம்